Loading...

Loading...
நூல்கள்
௩௦௯ ஹதீஸ்கள்
முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் சகோதரரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘புலம்பெயர்ந்து செல்ல (ஹிஜ்ரத்) எங்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஹிஜ்ரத் (அதற்குரிய வேளையில்) அதற்குரியவர்களுக்கு (கடமையாகி) நடந்து முடிந்துவிட்டது” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘(இனி) வேறெதற்காகத் தாங்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்குவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாம், அறப்போர் ஆகியவற்றுக்காக (உறுதிமொழி வாங்குவேன்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، سمع محمد بن فضيل، عن عاصم، عن ابي عثمان، عن مجاشع رضى الله عنه قال اتيت النبي صلى الله عليه وسلم انا واخي فقلت بايعنا على الهجرة. فقال " مضت الهجرة لاهلها ". فقلت علام تبايعنا قال " على الاسلام والجهاد
முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் சகோதரரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘புலம்பெயர்ந்து செல்ல (ஹிஜ்ரத்) எங்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஹிஜ்ரத் (அதற்குரிய வேளையில்) அதற்குரியவர்களுக்கு (கடமையாகி) நடந்து முடிந்துவிட்டது” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘(இனி) வேறெதற்காகத் தாங்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்குவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாம், அறப்போர் ஆகியவற்றுக்காக (உறுதிமொழி வாங்குவேன்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، سمع محمد بن فضيل، عن عاصم، عن ابي عثمان، عن مجاشع رضى الله عنه قال اتيت النبي صلى الله عليه وسلم انا واخي فقلت بايعنا على الهجرة. فقال " مضت الهجرة لاهلها ". فقلت علام تبايعنا قال " على الاسلام والجهاد
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: இன்று என்னிடம் ஒரு மனிதர் வந்து, ஒரு விஷயம் குறித்து கேட்டார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்பது எனக்குத் தெரியவில்லை. அவர், ‘‘ஆயுத பாணியான, செயல் வேகமுள்ள ஒருவர் தம் தலைவர்களுடன் அறப்போருக்குச் செல்கிறார். அப்போது தலைவர், அவரால் செய்ய முடியாத சில விஷயங்களைச் செய்யும்படி வற்புறுத்துகிறார் எனில் அவர் என்ன செய்வது?” என்று கேட்டார். நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு என்ன (பதில்) சொல்வதென்பது எனக்குத் தெரியவில்லை. ஆயினும், நாங்கள் (இத்தகைய அறப்போர்களில்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கி றோம். அப்போதெல்லாம் அவர்கள் ஒரு விஷயத்தை ஒருமுறைதான் உத்தரவிடு வார்கள். நாங்கள் அதைச் செய்து விடுவோம். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடக்கும்வரை நன்மையில் இருப்பீர்கள். உங்கள் உள்ளத்தில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் (விஷயமறிந்த) யாரிடமாவது கேளுங்கள். அவர், உங்கள் (நெருடலை நீக்கி) சந்தேகத்தை நிவர்த்தி செய்யக் கூடும். (இனிவரும் காலங்களில்) அத்தகைய (தகுதி வாய்ந்த ஒரு)வரை நீங்கள் அடைய முடியாமலும் போகக்கூடும். யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! இந்த உலகத்தில் போனது போக எஞ்சியிருப்பவற்றை, தூய நீர் குடிக்கப்பட்டு கசடுகள் மட்டும் எஞ்சி (தேங்கி நின்று)விட்ட ஒரு குட்டையாகவே நான் கருதுகின்றேன்” என்று கூறினேன். அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن منصور، عن ابي وايل، قال قال عبد الله رضى الله عنه لقد اتاني اليوم رجل فسالني عن امر ما دريت ما ارد عليه، فقال ارايت رجلا موديا نشيطا، يخرج مع امراينا في المغازي، فيعزم علينا في اشياء لا نحصيها. فقلت له والله ما ادري ما اقول لك الا انا كنا مع النبي صلى الله عليه وسلم فعسى ان لا يعزم علينا في امر الا مرة حتى نفعله، وان احدكم لن يزال بخير ما اتقى الله، واذا شك في نفسه شىء سال رجلا فشفاه منه، واوشك ان لا تجدوه، والذي لا اله الا هو ما اذكر ما غبر من الدنيا الا كالثغب شرب صفوه وبقي كدره
حدثنا عبد الله بن محمد، حدثنا معاوية بن عمرو، حدثنا ابو اسحاق، عن موسى بن عقبة، عن سالم ابي النضر، مولى عمر بن عبيد الله وكان كاتبا له قال كتب اليه عبد الله بن ابي اوفى رضى الله عنهما فقراته ان رسول الله صلى الله عليه وسلم في بعض ايامه التي لقي فيها انتظر حتى مالت الشمس. ثم قام في الناس قال " ايها الناس، لا تتمنوا لقاء العدو، وسلوا الله العافية، فاذا لقيتموهم فاصبروا، واعلموا ان الجنة تحت ظلال السيوف، ثم قال اللهم منزل الكتاب ومجري السحاب وهازم الاحزاب، اهزمهم وانصرنا عليهم
حدثنا عبد الله بن محمد، حدثنا معاوية بن عمرو، حدثنا ابو اسحاق، عن موسى بن عقبة، عن سالم ابي النضر، مولى عمر بن عبيد الله وكان كاتبا له قال كتب اليه عبد الله بن ابي اوفى رضى الله عنهما فقراته ان رسول الله صلى الله عليه وسلم في بعض ايامه التي لقي فيها انتظر حتى مالت الشمس. ثم قام في الناس قال " ايها الناس، لا تتمنوا لقاء العدو، وسلوا الله العافية، فاذا لقيتموهم فاصبروا، واعلموا ان الجنة تحت ظلال السيوف، ثم قال اللهم منزل الكتاب ومجري السحاب وهازم الاحزاب، اهزمهم وانصرنا عليهم
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குச் சென்றேன். களைப்படைந்து நடக்க முடியாமல் போய்க்கொண்டிருந்த நீர் சுமக்கும் ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து சென்றுகொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை வந்தடைந்தார்கள். அப்போது என்னிடம், ‘‘உமது ஒட்டகத்திற்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், ‘‘அது களைப்படைந்துவிட்டது” என்று பதிலளித்தேன். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சற்றுப் பின்தங்கி அதை அதட்டி அதற்காக துஆ செய்தார்கள். உடனே அது தனக்குமுன் சென்றுகொண்டிருந்த ஒட்டகங்களை முந்திக்கொண்டு செல்லத் தொடங்கியது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உமது ஒட்டகத்தை இப்போது எப்படிக் காண்கிறீர்?” என்று கேட்டார்கள். நான், ‘‘நல்ல நிலையில் காண்கிறேன். அது தங்களின் வளத்தை (பரக்கத்தை)ப் பெற்றுக்கொண்டுவிட்டது” என்று சொன்னேன். உடனே அவர்கள், ‘‘நீர் அதை எனக்கு விற்றுவிடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான் (பதில் சொல்ல) வெட்கப்பட்டேன். (ஏனெனில்,) எங்களிடம் அதைத் தவிர நீர் சுமக்கும் ஒட்டகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆயினும் நான், ‘‘சரி (விற்றுவிடுகிறேன்)” என்று பதிலளித் தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியாயின் அதை எனக்கு விற்றுவிடுவீராக!” என்று கூற, நான் அதன் மீது பயணம் செய்து மதீனாவைச் சென்றடைய என்னை அனு மதிக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு அந்த ஒட்டகத்தை விற்றுவிட்டேன். நான் அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணமானவன்” என்று சொல்லி (ஊருக்கு விரைவாகச் செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நான் மற்ற மக்களைவிட முன்னதாகச் சென்று மதீனாவை அடைந்துவிட்டேன். அப்போது என்னை என் தாய்மாமன் (ஜத்து பின் கைஸ்) சந்தித்து ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். நான் அதை விற்றுவிட்டதை அவருக்குத் தெரிவித்தேன். அதற்காக அவர் என்னைக் குறை கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டபோது அவர்கள் என்னிடம், ‘‘நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? கன்னி கழிந்த பெண்ணை மணமுடித்துக்கொண்டாயா?” என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான், ‘‘கன்னி கழிந்த ஒரு பெண்ணைத்தான் மணமுடித்துக்கொண்டேன்” என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயதில் சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில்தான் என் தந்தை (உஹுத் போரில்) மரணித்துவிட்டார்கள் லிஅல்லது கொல்லப்பட்டுவிட்டார்கள்.லி ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும் அவர்களைப் பராமரிக்கவும் இயலாத அவர்களைப் போன்றே (அனுப வமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்துகொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காக வும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற் காகவும் (வாழ்ந்த அனுபவமுள்ள) கன்னி கழிந்த ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்” என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது, காலை யில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். எனக்கு அதன் விலையைக் கொடுத்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தை யும் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட் டார்கள். ‘‘(யிமதீனாவரை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்பது போன்ற) இத்தகைய நிபந்தனையுடன் விற்பது நமது சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது; இதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான (அறிஞர்) முஃகீரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனா நகரில் பீதி நிலவியது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களின் குதிரை ஒன்றில் ஏறி (விவரமறிந்து வரப்) புறப் பட்டார்கள். அப்போது அவர்கள், ‘‘(பீதி ஏற்படுத்தும்) எதையும் நாம் காணவில்லை. தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இந்தக் குதிரையைக் கண்டோம்” என்று கூறினார்கள்.97 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن شعبة، حدثني قتادة، عن انس بن مالك رضى الله عنه قال كان بالمدينة فزع، فركب رسول الله صلى الله عليه وسلم فرسا لابي طلحة، فقال " ما راينا من شىء، وان وجدناه لبحرا
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை, எதிரிகள் படையெடுத்து வருவதாக மதீனா நகர) மக்கள் பீதிக்குள்ளானார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான மெதுவாக நடக்கக்கூடிய குதிரை ஒன்றில் ஏறிக்கொண்டு, (அதை) உதைத்துப் பாய்ந்தோடச் செய்தபடி தனியாகப் புறப்பட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களும் (வாகனங்களில்) ஏறிப் பாய்ந்து சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பீதியடையாதீர்கள். (பீதியடையும்படி யாரும் படையெடுத்து வரவில்லை.) இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக உள்ளது” என்று கூறினார்கள். அந்த நாளுக்குப் பிறகு, அந்தக் குதிரையை யாராலும் முந்த முடிய வில்லை. அத்தியாயம் :
حدثنا الفضل بن سهل، حدثنا حسين بن محمد، حدثنا جرير بن حازم، عن محمد، عن انس بن مالك رضى الله عنه قال فزع الناس فركب رسول الله صلى الله عليه وسلم فرسا لابي طلحة بطييا، ثم خرج يركض وحده، فركب الناس يركضون خلفه، فقال " لم تراعوا، انه لبحر ". فما سبق بعد ذلك اليوم
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒருவரை இறைவழியில் அறப் போர் புரிய ஒரு குதிரையின் மீது ஏற்றி அனுப்பிவைத்தேன். பிறகு அக்குதிரை (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் அதை விலைக்கு வாங்கலாமா?” என்று கேட் டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை வாங்காதீர்கள். உங்கள் தர்மத் தைத் திரும்பப்பெறாதீர்கள்” என்று கூறி னார்கள்.99 இதை அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، قال سمعت مالك بن انس، سال زيد بن اسلم، فقال زيد سمعت ابي يقول، قال عمر بن الخطاب رضى الله عنه حملت على فرس في سبيل الله، فرايته يباع، فسالت النبي صلى الله عليه وسلم اشتريه فقال " لا تشتره، ولا تعد في صدقتك
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒருவரை இறைவழியில் (போர் புரிய) ஒரு குதிரையின் மீது ஏற்றி அனுப்பிவைத்தார்கள். பிறகு அந்தக் குதிரை சந்தையில் விற்கப்படுவதைக் கண்டு அதை விலைக்கு வாங்க விரும்பி (அது பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதை வாங்காதீர் கள். உங்கள் தர்மத்தைத் திரும்பப் பெறாதீர்கள்” என்று கூறிவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما ان عمر بن الخطاب، حمل على فرس في سبيل الله، فوجده يباع، فاراد ان يبتاعه، فسال رسول الله صلى الله عليه وسلم فقال " لا تبتعه، ولا تعد في صدقتك
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்னும் அச்சம் மட்டும் எனக்கில்லாவிட்டால், நான் எந்தச் சிறு படைக் குழுவிலிருந்தும் (அதில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கியிருக்க மாட்டேன். ஆயினும், சுமக்கும் வாகனம் என்னிடம் இல்லை. அதாவது என் தோழர்களை ஏற்றிச்செல்ல (போதிய) வாகன வசதி என்னிடம் இல்லை. (அதே நேரத்தில் நான் போருக்குச் செல்ல) அவர்கள் என்னுடன் (போருக்கு) வர முடியாமல் பின்தங்க வேண்டியிருப்பது எனக்கு மன வேதனையளிக்கிறது. மேலும், நான் இறைவழியில் போரிட்டு அதனால் கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட்டு மீண்டும் (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட (இவ்வாறே மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்ய) வேண்டும் என்று விரும்புகிறேன்.100 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى بن سعيد، عن يحيى بن سعيد الانصاري، قال حدثني ابو صالح، قال سمعت ابا هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " لولا ان اشق على امتي ما تخلفت عن سرية، ولكن لا اجد حمولة، ولا اجد ما احملهم عليه، ويشق على ان يتخلفوا عني، ولوددت اني قاتلت في سبيل الله فقتلت، ثم احييت ثم قتلت، ثم احييت
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டேன். நான் இளவயது ஒட்டகம் ஒன்றில் (ஒருவரை அறப்போருக்கு) ஏற்றி அனுப்பினேன். அதை என் நற்செயல்களி லேயே வலுவானதாக என் மனத்தில் நான் கருதுகின்றேன். அப்போது (அறப்போரில் உதவி புரிய) பணியாள் ஒருவரை அமர்த்தினேன். அந்தப் பணியாள் ஒரு மனிதரோடு போரிட்டார். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரைக் கடித்துவிட்டார். கடிபட்டவர் தமது கையை, கடித்தவரின் வாயிலிருந்து உருவிக் கொண்டார். அப்போது கடித்தவரின் முன்பல்லை அவர் பிடுங்கிவிட்டார். பல் பிடுங்கப்பட்டவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். (பல்லைப் பிடுங்கியவர் மீது வழக்குத் தொடுத்தார்.) அதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அப்போது, ‘‘நீ கடா ஒட்டகம் மெல்வதைப் போன்று மென்றுகொண்டிருக்க, அவர் தமது கையை உனக்குக் கொடுத்துக் கொண்டிருப்பாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا سفيان، حدثنا ابن جريج، عن عطاء، عن صفوان بن يعلى، عن ابيه رضى الله عنه قال غزوت مع رسول الله صلى الله عليه وسلم غزوة تبوك، فحملت على بكر، فهو اوثق اعمالي في نفسي، فاستاجرت اجيرا، فقاتل رجلا، فعض احدهما الاخر فانتزع يده من فيه، ونزع ثنيته، فاتى النبي صلى الله عليه وسلم فاهدرها فقال " ايدفع يده اليك فتقضمها كما يقضم الفحل
ஸஅலபா பின் அபீமாலிக் அல் குரழீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் கொடியை எடுத்துச் செல்பவரா யிருந்த கைஸ் பின் சஅத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பிய போது தலைவாரிக் கொண்டார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، قال حدثني الليث، قال اخبرني عقيل، عن ابن شهاب، قال اخبرني ثعلبة بن ابي مالك القرظي، ان قيس بن سعد الانصاري رضى الله عنه وكان صاحب لواء رسول الله صلى الله عليه وسلم اراد الحج فرجل
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேú”’ என்று (வருத்தத் துடன்) கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்துகொண் டார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அதற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாளை (முஸ்லிம்களின்) கொடியை யிஒரு மனிதரிடம் தரப் போகிறேன்லி அல்லது யிஒரு மனிதர் (முஸ்லிம்களின்) கொடியைப் பிடித்திருப்பார்’. ‘அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றனர்’ அல்லது ‘அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்றார்’. அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருந்தார்கள். உடனே மக்கள், ‘‘இதோ, அலீ அவர்கள்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான். அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا حاتم بن اسماعيل، عن يزيد بن ابي عبيد، عن سلمة بن الاكوع رضى الله عنه قال كان علي رضى الله عنه تخلف عن النبي صلى الله عليه وسلم في خيبر، وكان به رمد، فقال انا اتخلف عن رسول الله صلى الله عليه وسلم فخرج علي فلحق بالنبي صلى الله عليه وسلم، فلما كان مساء الليلة التي فتحها في صباحها، فقال رسول الله صلى الله عليه وسلم " لاعطين الراية او قال لياخذن غدا رجل يحبه الله ورسوله او قال يحب الله ورسوله يفتح الله عليه ". فاذا نحن بعلي، وما نرجوه، فقالوا هذا علي، فاعطاه رسول الله صلى الله عليه وسلم، ففتح الله عليه
நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் (ஹஜூன் எனுமிடத்தைச் சுட்டிக்காட்டி), ‘‘நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) உங்களை இங்குதான் கொடியை நடச்சொன்னார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، حدثنا ابو اسامة، عن هشام بن عروة، عن ابيه، عن نافع بن جبير، قال سمعت العباس، يقول للزبير رضى الله عنهما ها هنا امرك النبي صلى الله عليه وسلم ان تركز الراية
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் கொண்ட) சொற்களுடன் அனுப்பப் பட்டுள்ளேன்.103 (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப் பட்டுள்ளது. (ஒருமுறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங் களுடைய சாவிகள் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தோண்டி) வெளியே எடுத்து (அனுபவித்து)க் கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன் னார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن سعيد بن المسيب، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " بعثت بجوامع الكلم، ونصرت بالرعب، فبينا انا نايم اتيت بمفاتيح خزاين الارض، فوضعت في يدي ". قال ابو هريرة وقد ذهب رسول الله صلى الله عليه وسلم وانتم تنتثلونها
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஈலியா (ஜெரூசலம்) நகரில் இருந்தபோது (கிழக்கு) ரோமானியப் பேரரசர் ஹிரக்ளீயஸ் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தை வரவழைத்தார். கடிதத்தைப் படித்து(க் காட்டி) முடித்தவுடன் அவரிடம் (இருந்த பிரமுகர் களிடையே) கூச்சல் குழப்பம் அதிகமானது; குரல்கள் உயர்ந்தன. நாங்கள் (அரசவை ‘லிருந்து) வெளியேற்றப்பட்டோம். அப்போது நான் என் தோழர்களிடம், ‘‘அபூகப்ஷாவின் மகனுடைய (முஹம்மது டைய) விவகாரம் வலிமைபெற்றுவிட்டது. மஞ்சள் நிறத்தாரின் (கிழக்கு ரோமானிய ரின்) அதிபர்(கூட) அவருக்கு அஞ்சுகிறார்” என்று கூறினேன்.104 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عبيد الله بن عبد الله، ان ابن عباس رضى الله عنهما اخبره ان ابا سفيان اخبره ان هرقل ارسل اليه وهم بايلياء، ثم دعا بكتاب رسول الله صلى الله عليه وسلم، فلما فرغ من قراءة الكتاب كثر عنده الصخب، فارتفعت الاصوات، واخرجنا، فقلت لاصحابي حين اخرجنا لقد امر امر ابن ابي كبشة، انه يخافه ملك بني الاصفر
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து செல்ல விரும்பியபோது, அவர்களின் பயண உணவை நான் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டில் தயாரித்தேன். அவர்களின் பயண உணவையும் (தண்ணீருக்கான) தோல் பையையும் (ஒட்டகத்தில் வைத்துக்) கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இந்த இடுப்புக் கச்சைத் தவிர இதைக் கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என்று கூறினேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அதை இரண்டாகக் கிழித்து, ஒன்றால் (தண்ணீருக்கான) தோல் பையையும் மற்றொன்றால் பயண உணவையும் கட்டு” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். இதனால்தான் எனக்கு யிஇரண்டு கச்சுடையாள்’ (தாதுந் நித்தாகைன்) எனும் (அடைமொழி) வந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبيد بن اسماعيل، حدثنا ابو اسامة، عن هشام، قال اخبرني ابي و، حدثتني ايضا، فاطمة عن اسماء رضى الله عنها قالت صنعت سفرة رسول الله صلى الله عليه وسلم في بيت ابي بكر حين اراد ان يهاجر الى المدينة، قالت فلم نجد لسفرته ولا لسقايه ما نربطهما به، فقلت لابي بكر والله ما اجد شييا اربط به الا نطاقي. قال فشقيه باثنين، فاربطيه بواحد السقاء وبالاخر السفرة. ففعلت، فلذلك سميت ذات النطاقين
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில், நாங்கள் குர்பானி இறைச்சிகளைப் பயண உணவாக (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு எடுத்துச்செல்வோம். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، اخبرنا سفيان، عن عمرو، قال اخبرني عطاء، سمع جابر بن عبد الله رضى الله عنهما قال كنا نتزود لحوم الاضاحي على عهد النبي صلى الله عليه وسلم الى المدينة
சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கைபர் போர் நடந்த ஆண்டில் (கைபர் போருக் காகப்) புறப்பட்டேன். மக்கள் ‘அஸ்ஸஹ்பா’ எனுமிடத்தில் லிஇதுவும் கைபர் பகுதிக்கு உட்பட்டதும், அதற்குத் தாழ்வாக உள்ளதுமாகும்லி இருந்தபோது அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் உணவுகளைக் கொண்டுவரச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுக்குக் குழைத்த மாவு மட்டுமே கொண்டுவரப்பட்டது. அதை நாங்கள் மென்று உண்டோம்; (தண்ணீரும்) அருந்தினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து, வாய் கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பிறகு தொழுதோம்.105 அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا عبد الوهاب، قال سمعت يحيى، قال اخبرني بشير بن يسار، ان سويد بن النعمان رضى الله عنه اخبره انه، خرج مع النبي صلى الله عليه وسلم عام خيبر، حتى اذا كانوا بالصهباء وهى من خيبر وهى ادنى خيبر فصلوا العصر، فدعا النبي صلى الله عليه وسلم بالاطعمة، فلم يوت النبي صلى الله عليه وسلم الا بسويق، فلكنا فاكلنا وشربنا، ثم قام النبي صلى الله عليه وسلم فمضمض ومضمضنا، وصلينا
حدثنا اسحاق بن ابراهيم، اخبرنا جرير، عن المغيرة، عن الشعبي، عن جابر بن عبد الله رضى الله عنهما قال غزوت مع رسول الله صلى الله عليه وسلم قال فتلاحق بي النبي صلى الله عليه وسلم وانا على ناضح لنا قد اعيا فلا يكاد يسير فقال لي " ما لبعيرك ". قال قلت عيي. قال فتخلف رسول الله صلى الله عليه وسلم فزجره ودعا له، فما زال بين يدى الابل قدامها يسير. فقال لي " كيف ترى بعيرك ". قال قلت بخير قد اصابته بركتك. قال " افتبيعنيه ". قال فاستحييت، ولم يكن لنا ناضح غيره، قال فقلت نعم. قال " فبعنيه ". فبعته اياه على ان لي فقار ظهره حتى ابلغ المدينة. قال فقلت يا رسول الله اني عروس، فاستاذنته فاذن لي، فتقدمت الناس الى المدينة حتى اتيت المدينة، فلقيني خالي فسالني عن البعير، فاخبرته بما صنعت فيه فلامني، قال وقد كان رسول الله صلى الله عليه وسلم قال لي حين استاذنته " هل تزوجت بكرا ام ثيبا ". فقلت تزوجت ثيبا. فقال " هلا تزوجت بكرا تلاعبها وتلاعبك ". قلت يا رسول الله توفي والدي او استشهد ولي اخوات صغار، فكرهت ان اتزوج مثلهن، فلا تودبهن، ولا تقوم عليهن، فتزوجت ثيبا لتقوم عليهن وتودبهن. قال فلما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة غدوت عليه بالبعير، فاعطاني ثمنه، ورده على. قال المغيرة هذا في قضاينا حسن لا نرى به باسا