ஹதீஸ்கள்
#2973
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டேன். நான் இளவயது ஒட்டகம் ஒன்றில் (ஒருவரை அறப்போருக்கு) ஏற்றி அனுப்பினேன். அதை என் நற்செயல்களி லேயே வலுவானதாக என் மனத்தில் நான் கருதுகின்றேன். அப்போது (அறப்போரில் உதவி புரிய) பணியாள் ஒருவரை அமர்த்தினேன். அந்தப் பணியாள் ஒரு மனிதரோடு போரிட்டார். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரைக் கடித்துவிட்டார். கடிபட்டவர் தமது கையை, கடித்தவரின் வாயிலிருந்து உருவிக் கொண்டார். அப்போது கடித்தவரின் முன்பல்லை அவர் பிடுங்கிவிட்டார். பல் பிடுங்கப்பட்டவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். (பல்லைப் பிடுங்கியவர் மீது வழக்குத் தொடுத்தார்.) அதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அப்போது, ‘‘நீ கடா ஒட்டகம் மெல்வதைப் போன்று மென்றுகொண்டிருக்க, அவர் தமது கையை உனக்குக் கொடுத்துக் கொண்டிருப்பாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2973
- Book Index
- 182
Grades
- -