ஹதீஸ்கள்
#2979
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து செல்ல விரும்பியபோது, அவர்களின் பயண உணவை நான் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டில் தயாரித்தேன். அவர்களின் பயண உணவையும் (தண்ணீருக்கான) தோல் பையையும் (ஒட்டகத்தில் வைத்துக்) கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இந்த இடுப்புக் கச்சைத் தவிர இதைக் கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என்று கூறினேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அதை இரண்டாகக் கிழித்து, ஒன்றால் (தண்ணீருக்கான) தோல் பையையும் மற்றொன்றால் பயண உணவையும் கட்டு” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். இதனால்தான் எனக்கு யிஇரண்டு கச்சுடையாள்’ (தாதுந் நித்தாகைன்) எனும் (அடைமொழி) வந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبيد بن اسماعيل، حدثنا ابو اسامة، عن هشام، قال اخبرني ابي و، حدثتني ايضا، فاطمة عن اسماء رضى الله عنها قالت صنعت سفرة رسول الله صلى الله عليه وسلم في بيت ابي بكر حين اراد ان يهاجر الى المدينة، قالت فلم نجد لسفرته ولا لسقايه ما نربطهما به، فقلت لابي بكر والله ما اجد شييا اربط به الا نطاقي. قال فشقيه باثنين، فاربطيه بواحد السقاء وبالاخر السفرة. ففعلت، فلذلك سميت ذات النطاقين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2979
- Book Index
- 188
Grades
- -
