ஹதீஸ்கள்
#2975
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேú”’ என்று (வருத்தத் துடன்) கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்துகொண் டார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அதற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாளை (முஸ்லிம்களின்) கொடியை யிஒரு மனிதரிடம் தரப் போகிறேன்லி அல்லது யிஒரு மனிதர் (முஸ்லிம்களின்) கொடியைப் பிடித்திருப்பார்’. ‘அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றனர்’ அல்லது ‘அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்றார்’. அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருந்தார்கள். உடனே மக்கள், ‘‘இதோ, அலீ அவர்கள்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2975
- Book Index
- 184
Grades
- -