ஹதீஸ்கள்
#2972
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்னும் அச்சம் மட்டும் எனக்கில்லாவிட்டால், நான் எந்தச் சிறு படைக் குழுவிலிருந்தும் (அதில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கியிருக்க மாட்டேன். ஆயினும், சுமக்கும் வாகனம் என்னிடம் இல்லை. அதாவது என் தோழர்களை ஏற்றிச்செல்ல (போதிய) வாகன வசதி என்னிடம் இல்லை. (அதே நேரத்தில் நான் போருக்குச் செல்ல) அவர்கள் என்னுடன் (போருக்கு) வர முடியாமல் பின்தங்க வேண்டியிருப்பது எனக்கு மன வேதனையளிக்கிறது. மேலும், நான் இறைவழியில் போரிட்டு அதனால் கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட்டு மீண்டும் (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட (இவ்வாறே மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்ய) வேண்டும் என்று விரும்புகிறேன்.100 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى بن سعيد، عن يحيى بن سعيد الانصاري، قال حدثني ابو صالح، قال سمعت ابا هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " لولا ان اشق على امتي ما تخلفت عن سرية، ولكن لا اجد حمولة، ولا اجد ما احملهم عليه، ويشق على ان يتخلفوا عني، ولوددت اني قاتلت في سبيل الله فقتلت، ثم احييت ثم قتلت، ثم احييت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2972
- Book Index
- 181
Grades
- -
