Loading...

Loading...
நூல்கள்
௧௮௭ ஹதீஸ்கள்
உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டுவரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்புநிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நாம் யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதில் கூறாமல்) மௌனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முகாலிதை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொல்ல, அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டுவரப்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும், ‘‘(இந்த ஆடையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு” என்று கூறிவிட்டு, ‘‘உம்மு காலிதே! இது ‘சனாஹ்’ (அழகாயிருக்கிறது)” என்று சொன்னார்கள். (நபி (ஸல்) அவர்கள் கூறிய) ‘சனாஹ்’ எனும் சொல், அபிசீனிய மொழிச் சொல்லாகும். அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.42 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا اسحاق بن سعيد، عن ابيه، سعيد بن فلان هو عمرو بن سعيد بن العاص عن ام خالد بنت خالد، اتي النبي صلى الله عليه وسلم بثياب فيها خميصة سوداء صغيرة فقال " من ترون نكسو هذه ". فسكت القوم قال " ايتوني بام خالد ". فاتي بها تحمل فاخذ الخميصة بيده فالبسها وقال " ابلي واخلقي ". وكان فيها علم اخضر او اصفر فقال " يا ام خالد هذا سناه ". وسناه بالحبشية حسن
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள், ‘‘அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (இனிப்புப் பொருளை) மென்று இவனது வாயிலிடுவதற்காக இவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லும்வரை இவன் எதையும் சாப்பிட்டு விட வேண்டாம்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச்சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் ‘ஹுரைஸ்’ (அல்லது ‘ஜவ்ன்’) குலத்தார் தயாரித்த கறுப்புநிறக் கம்பளி மேலங்கியை அணிந்துகொண்டு மக்கா வெற்றியின்போது தம்மிடம் வந்த தமது ஊர்தி ஒட்டகத்திற்கு அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.43 அத்தியாயம் :
حدثني محمد بن المثنى، قال حدثني ابن ابي عدي، عن ابن عون، عن محمد، عن انس رضى الله عنه قال لما ولدت ام سليم قالت لي يا انس انظر هذا الغلام فلا يصيبن شييا حتى تغدو به الى النبي صلى الله عليه وسلم يحنكه. فغدوت به، فاذا هو في حايط وعليه خميصة حريثية، وهو يسم الظهر الذي قدم عليه في الفتح
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அல்குறழீ (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒருமுறை) அந்தப் பெண்மணி பச்சைநிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மைத் துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தமது மேனியில் (கன்றியிருந்த) பச்சைநிற அடையாளத்தை எனக்குக் காட்டினார். -(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி- (நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, ‘‘அல்லாஹ்வின் தூதரே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரது (பச்சைநிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது” என்று சொன்னேன். (இதற்கிடையில்) -அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் தம் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். ஆகவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரு மகன்களைத் தம்முடன் அழைத்துவந்தார். அப்பெண்மணி, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை” என்று கூறி, தமது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் பின் ஸபீர், ‘‘பொய் சொல்கிறாள், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்” என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்படி (ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்துகொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும்வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ ‘அனுமதிக்கப்பட்டவள்’ அல்லது ‘ஏற்றவள்’ அல்லள்” என்று சொன்னார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களுடைய இரு மகன்களை யும் நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். ‘‘இவர்கள் உங்கள் புதல்வர்களா?” என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், ‘‘ஆம்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதைவிடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்” என்று சொன்னார்கள்.45 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا عبد الوهاب، اخبرنا ايوب، عن عكرمة، ان رفاعة، طلق امراته، فتزوجها عبد الرحمن بن الزبير القرظي، قالت عايشة وعليها خمار اخضر. فشكت اليها، وارتها خضرة بجلدها، فلما جاء رسول الله صلى الله عليه وسلم والنساء ينصر بعضهن بعضا قالت عايشة ما رايت مثل ما يلقى المومنات، لجلدها اشد خضرة من ثوبها. قال وسمع انها قد اتت رسول الله صلى الله عليه وسلم فجاء ومعه ابنان له من غيرها. قالت والله ما لي اليه من ذنب، الا ان ما معه ليس باغنى عني من هذه. واخذت هدبة من ثوبها، فقال كذبت والله يا رسول الله، اني لانفضها نفض الاديم، ولكنها ناشز تريد رفاعة. فقال رسول الله صلى الله عليه وسلم " فان كان ذلك لم تحلي له او لم تصلحي له حتى يذوق من عسيلتك ". قال وابصر معه ابنين فقال " بنوك هولاء ". قال نعم. قال " هذا الذي تزعمين ما تزعمين، فوالله لهم اشبه به من الغراب بالغراب
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது நான் நபி (ஸல்) அவர்களின் வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரு மனிதர்களைப் பார்த்தேன். அதற்கு முன்பும் அவர்களை நான் பார்த்ததில்லை; அதற்குப் பின்பும் அவர்களை நான் பார்க்கவில்லை.47 அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم الحنظلي، اخبرنا محمد بن بشر، حدثنا مسعر، عن سعد بن ابراهيم، عن ابيه، عن سعد، قال رايت بشمال النبي صلى الله عليه وسلم وبيمينه رجلين عليهما ثياب بيض يوم احد، ما رايتهما قبل ولا بعد
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக்கொண்டி ருந்தபோது, நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ‘‘லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)” என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)” என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூதர் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கும்போது, ‘‘அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே” என்று கூறிவந்தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (விபசாரம், திருடு போன்ற குற்றம் புரிந்த) ஒருவர் இறக்கும்போதோ அதற்கு முன்போ மனம்வருந்தி பாவமன்னிப்புக் கோரி, ‘‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை)” என்று சொல்லியிருந்தால்தான் அவருக்கு இவ்வாறு மன்னிப்பு அளிக்கப்படும்.48 அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، عن الحسين، عن عبد الله بن بريدة، عن يحيى بن يعمر، حدثه ان ابا الاسود الديلي حدثه ان ابا ذر رضى الله عنه حدثه قال اتيت النبي صلى الله عليه وسلم وعليه ثوب ابيض وهو نايم، ثم اتيته وقد استيقظ فقال " ما من عبد قال لا اله الا الله. ثم مات على ذلك، الا دخل الجنة ". قلت وان زنى وان سرق قال " وان زنى وان سرق ". قلت وان زنى وان سرق قال " وان زنى وان سرق ". قلت وان زنى وان سرق قال " وان زنى وان سرق على رغم انف ابي ذر ". وكان ابو ذر اذا حدث بهذا قال وان رغم انف ابي ذر. قال ابو عبد الله هذا عند الموت او قبله، اذا تاب وندم وقال لا اله الا الله. غفر له
அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் ஆதர்பைஜானில் இருந்தபோது எங்களிடம் உமர் (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அறிந்த வரை (அவர்கள் குறிப்பிட்ட ‘இந்த அளவு’ என்பது, ஆடைகளின் கரைகளில் செய்யப்படும்) வேலைப்பாட்டைக் குறிக்கிறது. அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا قتادة، قال سمعت ابا عثمان النهدي، اتانا كتاب عمر ونحن مع عتبة بن فرقد باذربيجان ان رسول الله صلى الله عليه وسلم نهى عن الحرير، الا هكذا، واشار باصبعيه اللتين تليان الابهام قال فيما علمنا انه يعني الاعلام
அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஆதர் பைஜானில் இருந்தபோது உமர் (ரலி) அவர்கள் எங்களுக்கு, ‘‘நபி (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. மேலும், (அந்த அளவை விவரிக்கும் வகையில்) தம் இரு விரல்களை வரிசைப்படுத்திக் காட்டினார்கள்” என்று கடிதம் எழுதினார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைர் (ரஹ்) அவர்கள் (இதை அறிவிக்கையில்) நடுவிரலையும் சுட்டு விரலையும் உயர்த்திக்காட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا زهير، حدثنا عاصم، عن ابي عثمان، قال كتب الينا عمر ونحن باذربيجان ان النبي صلى الله عليه وسلم نهى عن لبس الحرير الا هكذا، وصف لنا النبي صلى الله عليه وسلم اصبعيه. ورفع زهير الوسطى والسبابة
அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் (ஆதர்பைஜானில்) இருந் தோம். அப்போது அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்: நபி (ஸல்) அவர்கள், ‘‘இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது” என்று சொன்னார்கள். ...மற்றோர் அறிவிப்பில், ‘‘அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் தமது சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் சைகை செய்தார்கள்” என்ற கூடுதல் தகவல் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن التيمي، عن ابي عثمان، قال كنا مع عتبة فكتب اليه عمر رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم قال " لا يلبس الحرير في الدنيا، الا لم يلبس في الاخرة منه ". حدثنا الحسن بن عمر، حدثنا معتمر، حدثنا ابي، حدثنا ابو عثمان،، واشار ابو عثمان، باصبعيه المسبحة والوسطى
அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) மதாயின் (தைஃபூன்) நகரில் இருந்தார்கள். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (அக்னி ஆராதனையாளரான) ஊர்த் தலைவர் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர்மீது வீசியெறிந்து விட்டு, (அங்கிருந்தவர்களிடம்) ‘‘நான் இவரை(ப் பலமுறை) தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்க்காத காரணத்தால்தான் நான் இதை அவர்மீது வீசியெறிந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘தங்கம், வெள்ளி, சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு ஆகிய இவையெல்லாம் இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்’ என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.50 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن الحكم، عن ابن ابي ليلى، قال كان حذيفة بالمداين فاستسقى، فاتاه دهقان بماء في اناء من فضة فرماه به وقال اني لم ارمه الا اني نهيته فلم ينته قال رسول الله صلى الله عليه وسلم " الذهب والفضة والحرير والديباج هي لهم في الدنيا، ولكم في الاخرة
ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள், ‘‘நான் அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்” என்று (பின்வரும் ஹதீஸை) அறிவிக்க லானார்கள். உடனே நான், ‘‘நபி (ஸல்) அவர்களிடமிருந்தா?” என்று கேட்க, அதற்கு அவர்கள் உறுதியான தொனியில், ‘‘(ஆம்) நபி (ஸல்) அவர்களிடமிருந்துதான்” என்று கூறிவிட்டு, ‘‘(ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் ஒருபோதும் அதை அணியமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا عبد العزيز بن صهيب، قال سمعت انس بن مالك قال شعبة فقلت اعن النبي صلى الله عليه وسلم فقال شديدا عن النبي صلى الله عليه وسلم فقال " من لبس الحرير في الدنيا فلن يلبسه في الاخرة
ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் ‘‘முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘(ஆண் களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணியமாட்டார்’ என்று சொன்னார்கள்” எனக் கூறக் கேட்டேன். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن ثابت، قال سمعت ابن الزبير، يخطب يقول قال محمد صلى الله عليه وسلم " من لبس الحرير في الدنيا لم يلبسه في الاخرة
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணிய மாட்டார்” என்று கூறியதாக உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அத்தியாயம் :
حدثنا علي بن الجعد، اخبرنا شعبة، عن ابي ذبيان، خليفة بن كعب قال سمعت ابن الزبير، يقول سمعت عمر، يقول قال النبي صلى الله عليه وسلم " من لبس الحرير في الدنيا لم يلبسه في الاخرة ". وقال لنا ابو معمر حدثنا عبد الوارث، عن يزيد، قالت معاذة اخبرتني ام عمرو بنت عبد الله، سمعت عبد الله بن الزبير، سمع عمر، سمع النبي صلى الله عليه وسلم نحوه
இம்ரான் பின் ஹித்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பட்(டா)டை குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) கேட்டேன். அவர்கள், ‘‘இப்னு உமர் (ரலி) அவர்களைக் கேளுங்கள்” என்று கூற நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அபூஹஃப்ஸ், அதாவது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், ‘மறுமையில் யாருக்கு எந்தப் பங்குமில்லையோ அவர் தான் இம்மையில் பட்(டா)டை அணிவார்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என எனக்கு அறிவித்தார்கள். (இதைக் கேட்ட) நான், ‘‘உண்மையே சொன்னார்; அபூஹஃப்ஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைக்கவில்லை” என்று சொன் னேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا عثمان بن عمر، حدثنا علي بن المبارك، عن يحيى بن ابي كثير، عن عمران بن حطان، قال سالت عايشة عن الحرير، فقالت ايت ابن عباس فسله. قال فسالته فقال سل ابن عمر. قال فسالت ابن عمر فقال اخبرني ابو حفص يعني عمر بن الخطاب ان رسول الله صلى الله عليه وسلم قال " انما يلبس الحرير في الدنيا من لا خلاق له في الاخرة ". فقلت صدق وما كذب ابو حفص على رسول الله صلى الله عليه وسلم. وقال عبد الله بن رجاء حدثنا حرب عن يحيى حدثني عمران. وقص الحديث
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டாடை யொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாங்கள் அதைத் தொட்டு அதன் (மென்மை மற்றும் தரம்) காரணமாக வியக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதைக் கண்டு நீங்கள் வியக் கின்றீர்களா?” என்று கேட்க நாங்கள், ‘‘ஆம்” என்றோம். நபி (ஸல்) அவர்கள் ‘‘சொர்க்கத்தில் சஅத் பின் முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை ஆகும்” என்று சொன்னார்கள்.52 அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن اسراييل، عن ابي اسحاق، عن البراء رضى الله عنه قال اهدي للنبي صلى الله عليه وسلم ثوب حرير، فجعلنا نلمسه، ونتعجب منه، فقال النبي صلى الله عليه وسلم " اتعجبون من هذا ". قلنا نعم. قال " مناديل سعد بن معاذ في الجنة خير من هذا
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்காரப் பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.53 அத்தியாயம் :
حدثنا علي، حدثنا وهب بن جرير، حدثنا ابي قال، سمعت ابن ابي نجيح، عن مجاهد، عن ابن ابي ليلى، عن حذيفة رضى الله عنه قال نهانا النبي صلى الله عليه وسلم ان نشرب في انية الذهب والفضة، وان ناكل فيها، وعن لبس الحرير والديباج، وان نجلس عليه
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சிவப்பு மென்பட்டு விரிப்புகளையும் (‘மீஸரா), ‘கஸ்’ வகைப் பட்டுத் துணியையும் எங்களுக்குத் தடை செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا سفيان، عن اشعث بن ابي الشعثاء، حدثنا معاوية بن سويد بن مقرن، عن ابن عازب، قال نهانا النبي صلى الله عليه وسلم عن المياثر الحمر والقسي
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் ஏற்பட்டிருந்த சொறிசிரங்கின் காரணத்தால் பட்டாடை அணிந்துகொள்ள அவர்கள் இருவருக்கும் நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.55 அத்தியாயம் :
حدثني محمد، اخبرنا وكيع، اخبرنا شعبة، عن قتادة، عن انس، قال رخص النبي صلى الله عليه وسلم للزبير وعبد الرحمن في لبس الحرير لحكة بهما
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கியொன்றை எனக்கு வழங்கினார்கள். நான் அதை அணிந்துகொண்டு வெளியே புறப்பட்டேன். அப்போது அவர்களின் முகத்தில் கோபக்குறியை நான் கண்டேன். ஆகவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்.57 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، ح وحدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن عبد الملك بن ميسرة، عن زيد بن وهب، عن علي رضى الله عنه قال كساني النبي صلى الله عليه وسلم حلة سيراء، فخرجت فيها، فرايت الغضب في وجهه، فشققتها بين نسايي
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக்கொண்டால், தங்களிடம் தூதுக் குழுக்கள் வரும்போதும் வெள்ளிக் கிழமையின்போதும் அணிந்துகொள்ள லாமே” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மறுமையில்) எந்தப் பேறும் இல்லாதவர்தான் இதை (இம்மையில்) அணிவார்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அதன் பிறகு உமர் (ரலி) அவர்களுக்கு, அவர்கள் அணிந்துகொள்வதற்கு ஏற்றாற்போன்று கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்றை அனுப்பிவைத்தார்கள். எனவே உமர் (ரலி) அவர்கள், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) இது பற்றித் தாங்கள் சொன்னதை நான் கேட்டிருக்க (இப்போது) இதை எனக்கே அணியக் கொடுத்துள்ளீர்களே!” என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை நான் உங்களுக்கு அனுப்பிவைத்தது அதை நீங்கள் விற்றுக்கொள்ளவோ (பெண்களுக்கு) அணியத்தரவோதான்” என்று பதிலளித்தார்கள்.58 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال حدثني جويرية، عن نافع، عن عبد الله، ان عمر رضى الله عنه راى حلة سيراء تباع فقال يا رسول الله لو ابتعتها، تلبسها للوفد اذا اتوك والجمعة. قال " انما يلبس هذه من لا خلاق له ". وان النبي صلى الله عليه وسلم بعث بعد ذلك الى عمر حلة سيراء حرير، كساها اياه فقال عمر كسوتنيها وقد سمعتك تقول فيها ما قلت فقال " انما بعثت اليك لتبيعها او تكسوها
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியார் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள்59 கோடுகள் போட்ட பட்டு சால்வையொன்றை அணிந்திருந்ததை நான் கண்டேன். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني انس بن مالك، انه راى على ام كلثوم عليها السلام بنت رسول الله صلى الله عليه وسلم برد حرير سيراء