ஹதீஸ்கள்
#5832
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள், ‘‘நான் அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்” என்று (பின்வரும் ஹதீஸை) அறிவிக்க லானார்கள். உடனே நான், ‘‘நபி (ஸல்) அவர்களிடமிருந்தா?” என்று கேட்க, அதற்கு அவர்கள் உறுதியான தொனியில், ‘‘(ஆம்) நபி (ஸல்) அவர்களிடமிருந்துதான்” என்று கூறிவிட்டு, ‘‘(ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் ஒருபோதும் அதை அணியமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا عبد العزيز بن صهيب، قال سمعت انس بن مالك قال شعبة فقلت اعن النبي صلى الله عليه وسلم فقال شديدا عن النبي صلى الله عليه وسلم فقال " من لبس الحرير في الدنيا فلن يلبسه في الاخرة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5832
- Book Index
- 49
Grades
- -
