ஹதீஸ்கள்
#5841
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக்கொண்டால், தங்களிடம் தூதுக் குழுக்கள் வரும்போதும் வெள்ளிக் கிழமையின்போதும் அணிந்துகொள்ள லாமே” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மறுமையில்) எந்தப் பேறும் இல்லாதவர்தான் இதை (இம்மையில்) அணிவார்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அதன் பிறகு உமர் (ரலி) அவர்களுக்கு, அவர்கள் அணிந்துகொள்வதற்கு ஏற்றாற்போன்று கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்றை அனுப்பிவைத்தார்கள். எனவே உமர் (ரலி) அவர்கள், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) இது பற்றித் தாங்கள் சொன்னதை நான் கேட்டிருக்க (இப்போது) இதை எனக்கே அணியக் கொடுத்துள்ளீர்களே!” என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை நான் உங்களுக்கு அனுப்பிவைத்தது அதை நீங்கள் விற்றுக்கொள்ளவோ (பெண்களுக்கு) அணியத்தரவோதான்” என்று பதிலளித்தார்கள்.58 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5841
- Book Index
- 58
Grades
- -