ஹதீஸ்கள்
#5836
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டாடை யொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாங்கள் அதைத் தொட்டு அதன் (மென்மை மற்றும் தரம்) காரணமாக வியக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதைக் கண்டு நீங்கள் வியக் கின்றீர்களா?” என்று கேட்க நாங்கள், ‘‘ஆம்” என்றோம். நபி (ஸல்) அவர்கள் ‘‘சொர்க்கத்தில் சஅத் பின் முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை ஆகும்” என்று சொன்னார்கள்.52 அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن اسراييل، عن ابي اسحاق، عن البراء رضى الله عنه قال اهدي للنبي صلى الله عليه وسلم ثوب حرير، فجعلنا نلمسه، ونتعجب منه، فقال النبي صلى الله عليه وسلم " اتعجبون من هذا ". قلنا نعم. قال " مناديل سعد بن معاذ في الجنة خير من هذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5836
- Book Index
- 53
Grades
- -
