ஹதீஸ்கள்
#5823
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டுவரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்புநிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நாம் யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதில் கூறாமல்) மௌனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முகாலிதை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொல்ல, அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டுவரப்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும், ‘‘(இந்த ஆடையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு” என்று கூறிவிட்டு, ‘‘உம்மு காலிதே! இது ‘சனாஹ்’ (அழகாயிருக்கிறது)” என்று சொன்னார்கள். (நபி (ஸல்) அவர்கள் கூறிய) ‘சனாஹ்’ எனும் சொல், அபிசீனிய மொழிச் சொல்லாகும். அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.42 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا اسحاق بن سعيد، عن ابيه، سعيد بن فلان هو عمرو بن سعيد بن العاص عن ام خالد بنت خالد، اتي النبي صلى الله عليه وسلم بثياب فيها خميصة سوداء صغيرة فقال " من ترون نكسو هذه ". فسكت القوم قال " ايتوني بام خالد ". فاتي بها تحمل فاخذ الخميصة بيده فالبسها وقال " ابلي واخلقي ". وكان فيها علم اخضر او اصفر فقال " يا ام خالد هذا سناه ". وسناه بالحبشية حسن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5823
- Book Index
- 40
Grades
- -
