ஹதீஸ்கள்
#5828
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் ஆதர்பைஜானில் இருந்தபோது எங்களிடம் உமர் (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அறிந்த வரை (அவர்கள் குறிப்பிட்ட ‘இந்த அளவு’ என்பது, ஆடைகளின் கரைகளில் செய்யப்படும்) வேலைப்பாட்டைக் குறிக்கிறது. அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا قتادة، قال سمعت ابا عثمان النهدي، اتانا كتاب عمر ونحن مع عتبة بن فرقد باذربيجان ان رسول الله صلى الله عليه وسلم نهى عن الحرير، الا هكذا، واشار باصبعيه اللتين تليان الابهام قال فيما علمنا انه يعني الاعلام
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5828
- Book Index
- 45
Grades
- -
