Loading...

Loading...
நூல்கள்
௭௦ ஹதீஸ்கள்
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். ‘‘பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடா தீர்கள்)” என்று பதிலளித்தார்கள். நான் அவர்களிடம் (பயிற்சியளிக் கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உங்களுக்காக அது கவ்விக் கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும். ‘உங்களது நாயுடன்’ அல்லது ‘உங்கள் நாய்களுடன்’ வேறொரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களது நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களது நாயை அனுப்பியபோதுதான். வேறொரு நாய்க்காக அல்ல” என்று பதிலளித்தார்கள்.3 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا زكرياء، عن عامر، عن عدي بن حاتم رضى الله عنه قال سالت النبي صلى الله عليه وسلم عن صيد المعراض قال " ما اصاب بحده فكله، وما اصاب بعرضه فهو وقيذ ". وسالته عن صيد الكلب فقال " ما امسك عليك فكل، فان اخذ الكلب ذكاة، وان وجدت مع كلبك او كلابك كلبا غيره فخشيت ان يكون اخذه معه، وقد قتله، فلا تاكل، فانما ذكرت اسم الله على كلبك ولم تذكره على غيره
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு (‘மிஅராள்’ மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது(போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘எனது நாயை (வேட்டைக்காக) அவிழ்த்துவிட்டேன். (அது வேட்டையாடிக் கொண்டுவருவதை நான் சாப்பிடலாமா)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாயை அவிழ்த்துவிட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டுவருவதை) நீங்கள் சாப்பிடுங்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘அந்த நாய் வேட்டைப் பிராணியைத் தின்றிருந்தால்...?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘அப்படியென்றால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அது உங்களுக்காக அதைக் கொண்டு வரவில்லை; தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது” என்று பதிலளித்தார்கள். ‘‘நான் எனது நாயை அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பி வரும்போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன் என்றால்... (இப்போது என்ன செய்வது? அது வேட்டையாடி கொண்டு வந்த பிராணியை நான் உண்ணலாமா?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களது நாய்க்காகத்தான்; மற்றொரு நாய்க்கு நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை” என்று பதிலளித்தார்கள்.4 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن عبد الله بن ابي السفر، عن الشعبي، قال سمعت عدي بن حاتم رضى الله عنه قال سالت رسول الله صلى الله عليه وسلم عن المعراض فقال " اذا اصبت بحده فكل، فاذا اصاب بعرضه فقتل فانه وقيذ، فلا تاكل ". فقلت ارسل كلبي. قال " اذا ارسلت كلبك وسميت، فكل ". قلت فان اكل قال " فلا تاكل، فانه لم يمسك عليك، انما امسك على نفسه ". قلت ارسل كلبي فاجد معه كلبا اخر. قال " لا تاكل، فانك انما سميت على كلبك، ولم تسم على اخر
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடிக் கொண்டுவருகின்றவற்றை நாங்கள் உண்ணலாமா?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவை உங்களுக்காக (வேட்டையாடி)க் கவ்விப்பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘நாங்கள் இறகு இல்லாத அம்பை (வேட்டைப் பிராணிகள்மீது) எய்கிறோமே! (அதன் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது (தனது முனையால்) குத்தி (வீழ்த்தி)யதைச் சாப்பிடுங்கள். அந்த அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டதைச் சாப்பிடாதீர்கள்” என்று சொன்னார்கள்.5 அத்தியாயம் :
حدثنا قبيصة، حدثنا سفيان، عن منصور، عن ابراهيم، عن همام بن الحارث، عن عدي بن حاتم رضى الله عنه قال قلت يا رسول الله انا نرسل الكلاب المعلمة. قال " كل ما امسكن عليك ". قلت وان قتلن قال " وان قتلن ". قلت وانا نرمي بالمعراض. قال " كل ما خزق، وما اصاب بعرضه فلا تاكل
அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘அல்லாஹ்வின் நபியே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களுடைய பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா?6 மேலும், வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். நான் எனது வில்லாலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சி யளிக்கப்பட்ட எனது நாயை ஏவியும் வேட்டையாடுவேன்; (இவற்றில்) எது எனக்கு (சட்டப்படி) தகும்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் குறிப்பிட்ட வேதக்காரர்களின் (பாத்திரத்தில் உண்ணும்) விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்கா விட்டால் கழுவிவிட்டு அவர்களின் பாத்திரங்களில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை அனுப்பி நீங்கள் வேட்யைôடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் (அதைச்) சாப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يزيد، حدثنا حيوة، قال اخبرني ربيعة بن يزيد الدمشقي، عن ابي ادريس، عن ابي ثعلبة الخشني، قال قلت يا نبي الله انا بارض قوم اهل الكتاب، افناكل في انيتهم وبارض صيد، اصيد بقوسي وبكلبي الذي ليس بمعلم، وبكلبي المعلم، فما يصلح لي قال " اما ما ذكرت من اهل الكتاب فان وجدتم غيرها فلا تاكلوا فيها، وان لم تجدوا فاغسلوها وكلوا فيها، وما صدت بقوسك فذكرت اسم الله فكل، وما صدت بكلبك المعلم فذكرت اسم الله فكل، وما صدت بكلبك غير معلم فادركت ذكاته فكل
அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் சிறு கற்களை எறிந்து (வேட்டை யாடிக்)கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், ‘‘சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்’ அல்லது ‘சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்’. மேலும், நபி அவர்கள் ‘அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்துவிடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’ என்று சொன்னார்கள்” எனக் கூறினேன். அதன் பிறகு ஒருமுறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்’ அல்லது ‘சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்’ என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று சொன்னேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يوسف بن راشد، حدثنا وكيع، ويزيد بن هارون واللفظ ليزيد عن كهمس بن الحسن، عن عبد الله بن بريدة، عن عبد الله بن مغفل، انه راى رجلا يخذف فقال له لا تخذف فان رسول الله صلى الله عليه وسلم نهى عن الخذف او كان يكره الخذف وقال " انه لا يصاد به صيد ولا ينكى به عدو، ولكنها قد تكسر السن وتفقا العين ". ثم راه بعد ذلك يخذف فقال له احدثك عن رسول الله صلى الله عليه وسلم انه نهى عن الخذف. او كره الخذف، وانت تخذف لا اكلمك كذا وكذا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கால்நடைகளைப் பாதுகாப்பதற் காகவோ வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவருடைய நற்செய(ன் நன்மை ‘)ருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவு குறைந்துவிடும்.8 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا عبد العزيز بن مسلم، حدثنا عبد الله بن دينار، قال سمعت ابن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " من اقتنى كلبا ليس بكلب ماشية او ضارية، نقص كل يوم من عمله قيراطان
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நாய் வைத்திருக்கிறாரோ அவருடைய (நற்செயல்களுக்குரிய) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவு குறைந்துவிடும்; பிராணிகளை வேட்டையாடும் நாயையும், கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் தவிர. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، اخبرنا حنظلة بن ابي سفيان، قال سمعت سالما، يقول سمعت عبد الله بن عمر، يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول " من اقتنى كلبا الا كلب ضار لصيد او كلب ماشية، فانه ينقص من اجره كل يوم قيراطان
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நாய் வைத்திருக்கிறாரோ அவருடைய நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் வேட்டையாடும் நாயையும் தவிர! இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اقتنى كلبا الا كلب ماشية او ضار، نقص من عمله كل يوم قيراطان
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்” என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், ‘‘பயிற்சியளிக்கப் பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டை யாட) நீங்கள் அனுப்பியிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்துவைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்துவிட்டிருந்தாலும் (அது வேட்டையாடிக் கொண்டுவரும் பிராணியை) உண்ணாதீர்கள்” என்று கூறினார்கள்.9 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا محمد بن فضيل، عن بيان، عن الشعبي، عن عدي بن حاتم، قال سالت رسول الله صلى الله عليه وسلم قلت انا قوم نصيد بهذه الكلاب. فقال " اذا ارسلت كلابك المعلمة وذكرت اسم الله، فكل مما امسكن عليكم، وان قتلن الا ان ياكل الكلب، فاني اخاف ان يكون انما امسكه على نفسه، وان خالطها كلاب من غيرها فلا تاكل
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களது (வேட்டை) நாயை (வேட்டையாட) அனுப்பி, அது வேட்டைப் பிராணியைக் கவ்விப் பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். அது (அந்தப் பிராணியைத்) தின்றிருந்தால் நீங்கள் அதை உண்ணாதீர் கள். ஏனெனில், அப்போது அது அந்தப் பிராணியைத் தனக்காகவே பிடித்து வைத்துக்கொண்டுள்ளது. அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப் படாத பல நாய்களுடன் உங்கள் வேட்டை நாயும் கலந்துவிட அவை (அப்பிராணி யைப்) பிடித்துவைத்துக் கொன்றுவிட்டி ருந்தால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அவற்றில் எது அப்பிராணி யைக் கொன்றது என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கழித்து அதன் மீது உங்கள் அம்பின் அடையாளத்தைத் தவிர வேறெதுவுமில்லாதிருக்க நீங்கள் அதைக் கண்டால், அதை நீங்கள் உண்ணலாம். அது தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். (ஏனெனில், அது தண்ணீரில் விழுந்ததால் இறந்திருக்கலாம்.) இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ثابت بن يزيد، حدثنا عاصم، عن الشعبي، عن عدي بن حاتم رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " اذا ارسلت كلبك وسميت فامسك وقتل، فكل، وان اكل فلا تاكل، فانما امسك على نفسه، واذا خالط كلابا لم يذكر اسم الله عليها فامسكن وقتلن فلا تاكل، فانك لا تدري ايها قتل، وان رميت الصيد فوجدته بعد يوم او يومين، ليس به الا اثر سهمك، فكل، وان وقع في الماء فلا تاكل
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘ஒருவர் ஒரு வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து, (அது தலைமறை வாகிவிட) இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவர் அதன் கால்சுவட்டைத் தொடர்ந்து சென்று தமது அம்பு அதன் உடல் இருக்க, அது இறந்திருக்கக் கண்டால் (அவர் அதை உண்ணலாமா?)” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(கெட்டுப்போகாமல் இருக்கையில்) அவர் விரும்பினால் உண்ணலாம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
وقال عبد الاعلى عن داود، عن عامر، عن عدي، انه قال للنبي صلى الله عليه وسلم، يرمي الصيد فيقتفر اثره اليومين والثلاثة، ثم يجده ميتا وفيه سهمه قال " ياكل ان شاء
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பெயர் கூறி எனது (வேட்டை) நாயை (வேட்யைôடி வர) அனுப்புகிறேன் (என்றால் அதன் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்ப, அது (ஒரு பிராணியைப்) பிடித்து அதைக் கொன்றது மட்டுமன்றி, (அதிலிருந்து சிறிது) தின்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், அப்போது அது (அப்பிராணியைத்) தனக்காகவே கவ்விக்கொண்டுள்ளது” என்று பதிலளித்தார்கள். ‘‘நான் எனது நாயை (வேட்டையாட) அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பும் போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன். அவ்விரு நாய்களில் எந்த நாய் அந்தப் பிராணியைப் பிடித்தது என்பது எனக்குத் தெரியாது (இந்நிலையில் என்ன செய்வது?)” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(அதை) நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களது நாயின் மீதுதான்; மற்றதன்மீது நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லவில்லை” என்று பதிலளித்தார்கள். இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடுவது குறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அம்பின் முனையால் அதை நீங்கள் தாக்கிக் கொன்றிருந்தால், (அதை) நீங்கள் உண்ணலாம். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கியிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது தான் (என்றே கருதப்படும்). ஆகவே, நீங்கள் (அதை) உண்ணாதீர்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن عبد الله بن ابي السفر، عن الشعبي، عن عدي بن حاتم، قال قلت يا رسول الله اني ارسل كلبي واسمي فقال النبي صلى الله عليه وسلم " اذا ارسلت كلبك وسميت، فاخذ فقتل فاكل فلا تاكل، فانما امسك على نفسه ". قلت اني ارسل كلبي اجد معه كلبا اخر، لا ادري ايهما اخذه. فقال " لا تاكل فانما سميت على كلبك ولم تسم على غيره ". وسالته عن صيد المعراض فقال " اذا اصبت بحده، فكل، واذا اصبت بعرضه فقتل، فانه وقيذ، فلا تاكل
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் (தூதர்) அவர்களிடம் (வேட்டையாடுவது குறித்து) வினவினேன். ‘‘நாங்கள் இந்த நாய்களின் மூலம் வேட்டையாடுகின்ற சமுதாயத்தார் ஆவோம். (ஆகவே, அதன் சட்டத்தை எங்களுக்குக் கூறுங்கள்)” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘பயிற்சி அளிக்கப் பட்ட உங்கள் நாய்களை அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் அனுப்பியிருந்தால் அவை உங்களுக்காகக் கவ்விக் கொண்டு வந்தவற்றை நீங்கள் உண்ணலாம். ஆனால், நாய் (அதில் சிறிது) தின்றுவிட்டிருந்தால் (அதை) நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அப்போது நாய் (அப்பிராணியைத்) தனக்காகப் பிடித்து வைத்திருக்கலாம் என்று நான் அஞ்சுகிறேன். அதனுடன் வேறொரு நாய் கலந்துவிட்டால் (அவை வேட்டையாடிக் கொண்டுவரும் பிராணியை) நீங்கள் உண்ணாதீர்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثني محمد، اخبرني ابن فضيل، عن بيان، عن عامر، عن عدي بن حاتم رضى الله عنه قال سالت رسول الله صلى الله عليه وسلم فقلت انا قوم نتصيد بهذه الكلاب. فقال " اذا ارسلت كلابك المعلمة وذكرت اسم الله، فكل مما امسكن عليك، الا ان ياكل الكلب، فلا تاكل فاني اخاف ان يكون انما امسك على نفسه، وان خالطها كلب من غيرها، فلا تاكل
அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது.: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் வசிக்கின் றோம்; அவர்களின் பாத்திரத்தில் சாப்பிடு கின்றோம். மேலும், நான் வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு நாட்டில் வசிக்கின்றேன். நான் எனது வில்லாலும் வேட்டையாடுகின்றேன். பயிற்சியளிக்கப் பட்ட எனது நாயை அனுப்பியும் வேட்டை யாடுகின்றேன்; பயிற்சியளிக்கப்படாத நாயின் மூலமாகவும் வேட்டையாடுகின் றேன். ஆகவே, இவற்றில் எது எங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: வேதம் வழங்கப்பெற்றவர்களின் நாட்டில் நீங்கள் வசிப்பதாகவும் அவர் களின் பாத்திரத்தில் உண்பதாகவும் நீங்கள் சொன்னதைப் பொறுத்த அளவில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் உண்ணாதீர்கள். (வேறு பாத்திரம்) உங்களுக்குக் கிடைக்காவிட்டால், அதைக் கழுவிவிட்டுப் பின்னர் அதில் உண்ணுங்கள். வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு நாட்டில் நீங்கள் வசிப்பதாகச் சொன்னதைப் பொறுத்த வரை, உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடியதை நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி (அறுத்து) பிறகு உண்ணலாம். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியதை அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் உண்ணலாம். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியது அறுப்பதற்கு ஏதுவாக (உயிர் பிரியாத நிலையில்) உங்களுக்குக் கிடைத்திருந்தால் அதை (அறுத்து) நீங்கள் உண்ணலாம்.11 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن حيوة،. وحدثني احمد بن ابي رجاء، حدثنا سلمة بن سليمان، عن ابن المبارك، عن حيوة بن شريح، قال سمعت ربيعة بن يزيد الدمشقي، قال اخبرني ابو ادريس، عايذ الله قال سمعت ابا ثعلبة الخشني رضى الله عنه يقول اتيت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله انا بارض قوم اهل الكتاب، ناكل في انيتهم، وارض صيد اصيد بقوسي، واصيد بكلبي المعلم، والذي ليس معلما، فاخبرني ما الذي يحل لنا من ذلك فقال " اما ما ذكرت انك بارض قوم اهل الكتاب، تاكل في انيتهم، فان وجدتم غير انيتهم، فلا تاكلوا فيها، وان لم تجدوا فاغسلوها ثم كلوا فيها، واما ما ذكرت انك بارض صيد، فما صدت بقوسك، فاذكر اسم الله، ثم كل، وما صدت بكلبك المعلم، فاذكر اسم الله، ثم كل، وما صدت بكلبك الذي ليس معلما فادركت ذكاته، فكل
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் முயல் ஒன்றைத் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப் பிடிக்க முயன்று இறுதியில் களைத்துவிட்டனர். நான் அதைப் பிடிக்க முயன்று இறுதியில் பிடித்தேவிட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ‘அதன் பின் சப்பைகளை’ அல்லது ‘அதன் இரு தொடைகளை’ நபி (ஸல்) அவர்களுக்கு (அன்பளிப்பாக) அனுப்பிவைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.12 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن شعبة، قال حدثني هشام بن زيد، عن انس بن مالك رضى الله عنه قال انفجنا ارنبا بمر الظهران، فسعوا عليها حتى لغبوا، فسعيت عليها حتى اخذتها، فجيت بها الى ابي طلحة، فبعث الى النبي صلى الله عليه وسلم بوركها وفخذيها فقبله
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களுடன் (பயணத்தில்) இருந்தேன். நான் மக்கா (செல்லும்) சாலை ஒன்றில் இருந்தபோது (உம்ராவுக்காக) ‘இஹ்ராம்’ கட்டியிருந்த என் தோழர்கள் சிலருடன் பின்தங்கிவிட்டேன். அப்போது நான் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. இந்நிலையில் நான் (வழியில்) காட்டுக் கழுதையொன்றைக் கண்டு எனது குதிரையின் மீது நன்கு அமர்ந்துகொண்டு என் தோழர்களிடம் என் சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்ததால் எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எனது ஈட்டியை எடுத்துத் தரும்படி கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, நானே அதையெடுத்து அந்தக் கழுதையைத் தாக்கிக் கொன்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் அதிலிருந்து உண்டார் கள். வேறுசிலர் (உண்ண) மறுத்துவிட்டனர். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போய்ச்சேர்ந்தபோது அதைப்பற்றி அவர்களிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதுவெல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உண்ணக்கொடுத்த உணவாகும்” என்று பதிலளித்தார்கள்.13 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابي النضر، مولى عمر بن عبيد الله عن نافع، مولى ابي قتادة عن ابي قتادة، انه كان مع رسول الله صلى الله عليه وسلم حتى اذا كان ببعض طريق مكة تخلف مع اصحاب له محرمين، وهو غير محرم، فراى حمارا وحشيا، فاستوى على فرسه، ثم سال اصحابه ان يناولوه سوطا، فابوا فسالهم رمحه فابوا فاخذه ثم شد على الحمار، فقتله فاكل منه بعض اصحاب رسول الله صلى الله عليه وسلم وابى بعضهم، فلما ادركوا رسول الله صلى الله عليه وسلم سالوه عن ذلك فقال " انما هي طعمة اطعمكموها الله
அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸை அறிவித்துள்ளார்கள். அந்த அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்களிடம் அதன் இறைச்சியில் ஏதேனும் (மீதி) உள்ளதா?” என்று கேட்டார்கள் என (கூடுதலாக) வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابي قتادة، مثله الا انه قال " هل معكم من لحمه شىء
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் மக்கா வுக்கும் மதீனாவுக்குமிடையே (‘அல்காஹா’ எனுமிடத்தில்) இருந்தேன். அப்போது மக்கள் (உம்ராவுக்காக) ‘இஹ்ராம்’ கட்டியிருந்தார்கள். நான் ‘இஹ்ராம்’ கட்டாமல் குதிரைமீது (பயணம் செய்து கொண்டு) இருந்தேன். நான் அதிகமாக மலையேறுபவனாக இருந்தேன். இந்நிலையில் மக்கள் ஆவலுடன் எதையோ பார்ப்பதைக் கண்டேன். நானும் கூர்ந்து கவனிக்கலானேன். அப்போது அங்கு ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. நான் மக்களிடம், ‘‘என்ன இது?” என்று கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்த காரணத்தால்) ‘‘எங்களுக்குத் தெரியாது” என்றனர். நான், ‘‘இது ஒரு காட்டுக் கழுதை” என்று சொன்னேன். அப்போது மக்கள், ‘‘நீங்கள் பார்த்தது அதுதான்” என்று கூறினார்கள். நான் என்னுடைய சாட்டையை மறந்துவிட்டிருந்தேன். ஆகவே, அவர்களிடம் ‘‘என் சாட்டையை எடுத்து என்னிடம் கொடுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவமாட்டோம்” என்றனர். உடனே நானே இறங்கி அதை எடுத்தேன். பிறகு காட்டுக் கழுதையைப் பின்தொடர்ந்து சென்று தாக்கினேன். சிறிது நேரத்திற்குள் அதன் கால் நரம்புகளை வெட்டி (வீழ்த்தி)விட்டேன். பிறகு மக்களிடம் சென்று, ‘‘(இப்போது) எழுந்து, கழுதையை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அதைத் தொட மாட்டோம்” என்று கூறினர். ஆகவே, நானே அதைச் சுமந்து அவர்களிடம் கொண்டுசென்றேன். அவர்களில் சிலர் (அதை உண்ண) மறுத்துவிட்டனர். வேறு சிலர் உண்டனர். நான் ‘‘உங்களுக்காக நபி (ஸல்) அவர்களிடம் (இதன் சட்டம் என்ன என்று) கேட்டுத் தெரிந்து வருகிறேன்” என்று சொன்னேன். பிறகு நபி (ஸல்) அவர்களைச் சென்றடைந்து செய்தியை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம், ‘‘அதிலிருந்து உங்களிடம் ஏதேனும் எஞ்சியுள்ளதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (எஞ்சியுள்ளது)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘‘உண்ணுங்கள்; அது அல்லாஹ் உங்களுக்கு உண்ணக்கொடுத்த உணவாகும்” என்று சொன்னார்கள்.14 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، قال حدثني ابن وهب، اخبرنا عمرو، ان ابا النضر، حدثه عن نافع، مولى ابي قتادة وابي صالح مولى التوامة سمعت ابا قتادة، قال كنت مع النبي صلى الله عليه وسلم فيما بين مكة والمدينة وهم محرمون وانا رجل حل على فرس، وكنت رقاء على الجبال، فبينا انا على ذلك اذ رايت الناس متشوفين لشىء، فذهبت انظر، فاذا هو حمار وحش فقلت لهم ما هذا قالوا لا ندري. قلت هو حمار وحشي. فقالوا هو ما رايت. وكنت نسيت سوطي فقلت لهم ناولوني سوطي. فقالوا لا نعينك عليه. فنزلت فاخذته، ثم ضربت في اثره، فلم يكن الا ذاك، حتى عقرته، فاتيت اليهم فقلت لهم قوموا فاحتملوا. قالوا لا نمسه. فحملته حتى جيتهم به، فابى بعضهم، واكل بعضهم، فقلت انا استوقف لكم النبي صلى الله عليه وسلم فادركته فحدثته الحديث فقال لي " ابقي معكم شىء منه ". قلت نعم. فقال " كلوا فهو طعم اطعمكموها الله
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘கருவேல இலை’ (‘கபத்’) படை(ப் பிரிவு)ப் போருக்கு நாங்கள் சென்றோம். (எங்களுக்கு) அபூஉபைதா (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். (வழியில்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது செத்துப்போன பெரிய (திமிங்கல வகை) மீன் ஒன்று கரையில் ஒதுங்கியது. (அதற்கு முன்பு) அது போன்ற (பெரிய) மீன் காணப்பட்டதில்லை. அது ‘அம்பர்’ என்றழைக்கப்படும். அதிலிருந்து நாங்கள் அரை மாதம் உண்டோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் எலும்புகளில் ஒன்றை எடுத்து (நட்டு) வைத்தார்கள். அதன்கீழ் வாகனத்தில் ஏறி ஒருவர் சென்றார். (அந்த அளவுக்கு அந்த எலும்பு பெரியதாக இருந்தது.)16 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن ابن جريج، قال اخبرني عمرو، انه سمع جابرا رضى الله عنه يقول غزونا جيش الخبط وامر ابو عبيدة فجعنا جوعا شديدا فالقى البحر حوتا ميتا لم ير مثله يقال له العنبر فاكلنا منه نصف شهر فاخذ ابو عبيدة عظما من عظامه فمر الراكب تحته
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களில் வாகனப் படைவீரர்களான முன்னூறு பேரை (ஓர் அறப்போருக்கு) அனுப்பினார்கள். எங்கள் (படைப் பிரிவின் தலைவராக) அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நாங்கள் குறைஷியரின் ஒரு வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அப்போது எங்களுக்குக் கடும் பசி ஏற்பட்டது. (உணவு ஏதும் இல்லாததால்) கருவேல மரத்தின் இலைகளை நாங்கள் சாப்பிட்டோம். அதன் காரணமாக (எங்கள் படைக்கு) ‘கருவேல இலைப் படை’ (‘ஜைஷுல் கபத்’) என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போது ‘அம்பர்’ என்றழைக்கப்படும் பெரிய (திமிங்கல) மீன் ஒன்று கடற்கரையில் ஒதுங்கியது. அதை நாங்கள் அரை மாதம்வரை சாப்பிட்டோம். எங்கள் மேனிகள் செழுமையடையும் அளவுக்கு நாங்கள் அதன் கொழுப்பை எடுத்துப் பூசிக்கொண்டோம். அப்போது அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளில் ஒன்றையெடுத்து (பூமியில்) நட்டு வைக்க, அதன் கீழே வாகனத்தில் ஏறி ஒருவர் சென்றார். எங்களிடையே இருந்த ஒரு மனிதர் பசி கடுமையாக வாட்டியபோது மூன்று ஒட்டகங்களை அறுத்தார். மறுபடியும் இன்னும் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு அவரை (அப்படி அறுக்க வேண்டாமென) அபூஉபைதா (ரலி) அவர்கள் தடுத்துவிட்டார்கள்.17 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، اخبرنا سفيان، عن عمرو، قال سمعت جابرا، يقول بعثنا النبي صلى الله عليه وسلم ثلاثماية راكب واميرنا ابو عبيدة نرصد عيرا لقريش فاصابنا جوع شديد حتى اكلنا الخبط، فسمي جيش الخبط والقى البحر حوتا يقال له العنبر فاكلنا نصف شهر وادهنا بودكه حتى صلحت اجسامنا قال فاخذ ابو عبيدة ضلعا من اضلاعه فنصبه فمر الراكب تحته، وكان فينا رجل فلما اشتد الجوع نحر ثلاث جزاير، ثم ثلاث جزاير، ثم نهاه ابو عبيدة