ஹதீஸ்கள்
#5493
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘கருவேல இலை’ (‘கபத்’) படை(ப் பிரிவு)ப் போருக்கு நாங்கள் சென்றோம். (எங்களுக்கு) அபூஉபைதா (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். (வழியில்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது செத்துப்போன பெரிய (திமிங்கல வகை) மீன் ஒன்று கரையில் ஒதுங்கியது. (அதற்கு முன்பு) அது போன்ற (பெரிய) மீன் காணப்பட்டதில்லை. அது ‘அம்பர்’ என்றழைக்கப்படும். அதிலிருந்து நாங்கள் அரை மாதம் உண்டோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் எலும்புகளில் ஒன்றை எடுத்து (நட்டு) வைத்தார்கள். அதன்கீழ் வாகனத்தில் ஏறி ஒருவர் சென்றார். (அந்த அளவுக்கு அந்த எலும்பு பெரியதாக இருந்தது.)16 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن ابن جريج، قال اخبرني عمرو، انه سمع جابرا رضى الله عنه يقول غزونا جيش الخبط وامر ابو عبيدة فجعنا جوعا شديدا فالقى البحر حوتا ميتا لم ير مثله يقال له العنبر فاكلنا منه نصف شهر فاخذ ابو عبيدة عظما من عظامه فمر الراكب تحته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5493
- Book Index
- 19
Grades
- -
