ஹதீஸ்கள்
#5477
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடிக் கொண்டுவருகின்றவற்றை நாங்கள் உண்ணலாமா?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவை உங்களுக்காக (வேட்டையாடி)க் கவ்விப்பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘நாங்கள் இறகு இல்லாத அம்பை (வேட்டைப் பிராணிகள்மீது) எய்கிறோமே! (அதன் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது (தனது முனையால்) குத்தி (வீழ்த்தி)யதைச் சாப்பிடுங்கள். அந்த அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டதைச் சாப்பிடாதீர்கள்” என்று சொன்னார்கள்.5 அத்தியாயம் :
حدثنا قبيصة، حدثنا سفيان، عن منصور، عن ابراهيم، عن همام بن الحارث، عن عدي بن حاتم رضى الله عنه قال قلت يا رسول الله انا نرسل الكلاب المعلمة. قال " كل ما امسكن عليك ". قلت وان قتلن قال " وان قتلن ". قلت وانا نرمي بالمعراض. قال " كل ما خزق، وما اصاب بعرضه فلا تاكل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5477
- Book Index
- 3
Grades
- -
