ஹதீஸ்கள்
#5494
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களில் வாகனப் படைவீரர்களான முன்னூறு பேரை (ஓர் அறப்போருக்கு) அனுப்பினார்கள். எங்கள் (படைப் பிரிவின் தலைவராக) அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நாங்கள் குறைஷியரின் ஒரு வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அப்போது எங்களுக்குக் கடும் பசி ஏற்பட்டது. (உணவு ஏதும் இல்லாததால்) கருவேல மரத்தின் இலைகளை நாங்கள் சாப்பிட்டோம். அதன் காரணமாக (எங்கள் படைக்கு) ‘கருவேல இலைப் படை’ (‘ஜைஷுல் கபத்’) என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போது ‘அம்பர்’ என்றழைக்கப்படும் பெரிய (திமிங்கல) மீன் ஒன்று கடற்கரையில் ஒதுங்கியது. அதை நாங்கள் அரை மாதம்வரை சாப்பிட்டோம். எங்கள் மேனிகள் செழுமையடையும் அளவுக்கு நாங்கள் அதன் கொழுப்பை எடுத்துப் பூசிக்கொண்டோம். அப்போது அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளில் ஒன்றையெடுத்து (பூமியில்) நட்டு வைக்க, அதன் கீழே வாகனத்தில் ஏறி ஒருவர் சென்றார். எங்களிடையே இருந்த ஒரு மனிதர் பசி கடுமையாக வாட்டியபோது மூன்று ஒட்டகங்களை அறுத்தார். மறுபடியும் இன்னும் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு அவரை (அப்படி அறுக்க வேண்டாமென) அபூஉபைதா (ரலி) அவர்கள் தடுத்துவிட்டார்கள்.17 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، اخبرنا سفيان، عن عمرو، قال سمعت جابرا، يقول بعثنا النبي صلى الله عليه وسلم ثلاثماية راكب واميرنا ابو عبيدة نرصد عيرا لقريش فاصابنا جوع شديد حتى اكلنا الخبط، فسمي جيش الخبط والقى البحر حوتا يقال له العنبر فاكلنا نصف شهر وادهنا بودكه حتى صلحت اجسامنا قال فاخذ ابو عبيدة ضلعا من اضلاعه فنصبه فمر الراكب تحته، وكان فينا رجل فلما اشتد الجوع نحر ثلاث جزاير، ثم ثلاث جزاير، ثم نهاه ابو عبيدة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5494
- Book Index
- 20
Grades
- -
