ஹதீஸ்கள்
#5486
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பெயர் கூறி எனது (வேட்டை) நாயை (வேட்யைôடி வர) அனுப்புகிறேன் (என்றால் அதன் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்ப, அது (ஒரு பிராணியைப்) பிடித்து அதைக் கொன்றது மட்டுமன்றி, (அதிலிருந்து சிறிது) தின்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், அப்போது அது (அப்பிராணியைத்) தனக்காகவே கவ்விக்கொண்டுள்ளது” என்று பதிலளித்தார்கள். ‘‘நான் எனது நாயை (வேட்டையாட) அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பும் போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன். அவ்விரு நாய்களில் எந்த நாய் அந்தப் பிராணியைப் பிடித்தது என்பது எனக்குத் தெரியாது (இந்நிலையில் என்ன செய்வது?)” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(அதை) நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களது நாயின் மீதுதான்; மற்றதன்மீது நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லவில்லை” என்று பதிலளித்தார்கள். இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடுவது குறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அம்பின் முனையால் அதை நீங்கள் தாக்கிக் கொன்றிருந்தால், (அதை) நீங்கள் உண்ணலாம். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கியிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது தான் (என்றே கருதப்படும்). ஆகவே, நீங்கள் (அதை) உண்ணாதீர்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن عبد الله بن ابي السفر، عن الشعبي، عن عدي بن حاتم، قال قلت يا رسول الله اني ارسل كلبي واسمي فقال النبي صلى الله عليه وسلم " اذا ارسلت كلبك وسميت، فاخذ فقتل فاكل فلا تاكل، فانما امسك على نفسه ". قلت اني ارسل كلبي اجد معه كلبا اخر، لا ادري ايهما اخذه. فقال " لا تاكل فانما سميت على كلبك ولم تسم على غيره ". وسالته عن صيد المعراض فقال " اذا اصبت بحده، فكل، واذا اصبت بعرضه فقتل، فانه وقيذ، فلا تاكل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5486
- Book Index
- 12
Grades
- -
