Loading...

Loading...
நூல்கள்
௧௭௩ ஹதீஸ்கள்
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) செல்வதற்கு மூன்றாண் டுகளுக்கு முன்பு கதீஜா (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள். (அதன்பின்) நபி (ஸல்) அவர்கள் “இரண்டு ஆண்டுகள்' அல்லது “கிட்டத்தட்ட இரண்டாண்டுகள்' (மக்காவில்) தங்கியிருந்தார்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் ஆறு வயதுடையவர்களாயிருக்கும் போது அவர்களை மணந்துகொண்டார்கள். பிறகு ஆயிஷா (ரலி) அவர்கள் ஒன்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அத்தியாயம் :
حدثني عبيد بن اسماعيل، حدثنا ابو اسامة، عن هشام، عن ابيه، قال توفيت خديجة قبل مخرج النبي صلى الله عليه وسلم الى المدينة بثلاث سنين، فلبث سنتين او قريبا من ذلك، ونكح عايشة وهى بنت ست سنين، ثم بنى بها وهى بنت تسع سنين
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாகப் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனையளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் ஹிஜ்ரத் செய்ததற்கான (இவ்வுலகப்) பிரதிபலனில் சிறிதையும் பெற்றுக்கொள்ளாமல் சென்றுவிட்டவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள். அவர் உஹுத் போரின்போது கொல்லப்பட்டார். கோடிட்ட வண்ணத் துணி ஒன்றை அவர் விட்டுச்சென்றிருந்தார். நாங்கள் (அவருக்கு கஃபனிடுவதற்காக) அவரது (சடலத்தின்) தலையை அதனால் மூடியபோது அவரு டைய கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின. அவருடைய கால்களை மூடினால் அவருடைய தலை தெரிய லாயிற்று. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஸ்அப் (ரலி) அவர்களின் தலையை மூடிவிடும்படியும் அவர்களு டைய இரு கால்களிலும் இத்கிர் புல்லைச் சிறிது போட்டு (மறைத்து)விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க்கொண்டிருப்ப வர்களும் எங்களில் உள்ளனர்.145 அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا الاعمش، قال سمعت ابا وايل، يقول عدنا خبابا فقال هاجرنا مع النبي صلى الله عليه وسلم نريد وجه الله، فوقع اجرنا على الله، فمنا من مضى، لم ياخذ من اجره شييا، منهم مصعب بن عمير قتل يوم احد، وترك نمرة، فكنا اذا غطينا بها راسه بدت رجلاه، واذا غطينا رجليه بدا راسه، فامرنا رسول الله صلى الله عليه وسلم ان نغطي راسه، ونجعل على رجليه شييا من اذخر. ومنا من اينعت له ثمرته فهو يهدبها
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒருவரது ஹிஜ்ரத் அவர் அடையவிருக்கும் உலக (ஆதாய)த்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால், அல்லது அவர் மணக்கவிருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால், அவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும். ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தியுறச் செய்வதைக்) குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கியதாகவே அமைந்திருக்கும். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.146 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا حماد هو ابن زيد عن يحيى، عن محمد بن ابراهيم، عن علقمة بن وقاص، قال سمعت عمر رضى الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " الاعمال بالنية، فمن كانت هجرته الى دنيا يصيبها او امراة يتزوجها، فهجرته الى ما هاجر اليه، ومن كانت هجرته الى الله ورسوله، فهجرته الى الله ورسوله صلى الله عليه وسلم
முஜாஹித் பின் ஜப்ர் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “(மக்கா) வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் கிடையாது” என்று சொல்லி வந்தார்கள்.147 அத்தியாயம் :
حدثني اسحاق بن يزيد الدمشقي، حدثنا يحيى بن حمزة، قال حدثني ابو عمرو الاوزاعي، عن عبدة بن ابي لبابة، عن مجاهد بن جبر المكي، ان عبد الله بن عمر رضى الله عنهما كان يقول لا هجرة بعد الفتح
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உபைத் பின் உமைர் அல்லைஸீ (ரஹ்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் “ஸபீர்' எனும் மலைக்கருகில் தங்கியிருந்தார்கள்.)148 அவர்களிடம் ஹிஜ்ரத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், “இன்று (மக்கா வெற்றி கொள்ளப்பட்டுவிட்ட பிறகு) ஹிஜ்ரத் கிடையாது. இறைநம்பிக்கை யாளர்கள் (தம் மார்க்கத்தைப் பின்பற்ற முடியாதவாறு) தாம் சோதிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சி தமது மார்க்கத்துடன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தியுறச் செய்வதைக்) குறிக்கோளாகக் கொண்டு (தம் தாய் நாட்டைத் துறந்து ஒரு காலத்தில்) ஓடிவந்தார்கள். ஆனால், இன்றோ அல்லாஹ் இஸ்லாத்தை ஓங்கச் செய்துவிட்டான். இன்று இறைநம்பிக்கையாளர், தாம் விரும்பிய இடத்தில் தம் இறைவனை வழிபடலாம். ஆயினும் (“ஹிஜ்ரத்'தான் இனி இல்லையே தவிர) ஜிஹாத் (எனும் அறப்போர்) புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் (இன்றும்) உண்டு” என்று பதிலளித்தார்கள்.149 அத்தியாயம் :
وحدثني الاوزاعي، عن عطاء بن ابي رباح، قال زرت عايشة مع عبيد بن عمير الليثي فسالناها عن الهجرة، فقالت لا هجرة اليوم، كان المومنون يفر احدهم بدينه الى الله تعالى والى رسوله صلى الله عليه وسلم مخافة ان يفتن عليه، فاما اليوم فقد اظهر الله الاسلام، واليوم يعبد ربه حيث شاء، ولكن جهاد ونية
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள், “இறைவா! உன் பாதையில் யாரை எதிர்த்துப் போர் புரிய நான் மிகவும் விரும்புகின்றேனோ அவர்கள் உன் தூதரை நம்ப மறுத்து அவர்களை (மக்கா விலிருந்து) வெளியேற்றிய சமுதாயத்தார் தான் என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் அவர்களுக்குமிடையிலான போரை நீ முடித்து வைத்துவிட்டாய் என நான் எண்ணுகிறேன்” என்று (தம் மரணத் தறுவாயில்) கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவே வரும் மற்றோர் அறிவிப்பில், “உன் னுடைய நபியை நம்ப மறுத்து அவர்களை வெளியேற்றிய குறைஷிச் சமுதாயத்தார் தான்” என்று (சிறிய வித்தியாசத்துடன்) சஅத் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثني زكرياء بن يحيى، حدثنا ابن نمير، قال هشام فاخبرني ابي، عن عايشة رضى الله عنها ان سعدا، قال اللهم انك تعلم انه ليس احد احب الى ان اجاهدهم فيك من قوم كذبوا رسولك صلى الله عليه وسلم واخرجوه، اللهم فاني اظن انك قد وضعت الحرب بيننا وبينهم. وقال ابان بن يزيد حدثنا هشام عن ابيه اخبرتني عايشة من قوم كذبوا نبيك واخرجوه من قريش
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நாற்பதாம் வயதில் நபியாக நியமிக்கப் பட்டார்கள். தமக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பட்டுவந்த நிலையில் மக்காவில் பதிமூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட, ஹிஜ்ரத் செய்து (மதீனாவில்) பத்தாண்டுகள் வாழ்ந்துவந் தார்கள். தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.150 அத்தியாயம் :
حدثنا مطر بن الفضل، حدثنا روح، حدثنا هشام، حدثنا عكرمة، عن ابن عباس رضى الله عنهما قال بعث رسول الله صلى الله عليه وسلم لاربعين سنة، فمكث بمكة ثلاث عشرة سنة يوحى اليه، ثم امر بالهجرة فهاجر عشر سنين، ومات وهو ابن ثلاث وستين
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபியாக்கப்பட்டபின்) மக்காவில் பதிமூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அத்தியாயம் :
حدثني مطر بن الفضل، حدثنا روح بن عبادة، حدثنا زكرياء بن اسحاق، حدثنا عمرو بن دينار، عن ابن عباس، قال مكث رسول الله صلى الله عليه وسلم بمكة ثلاث عشرة، وتوفي وهو ابن ثلاث وستين
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது) சொற்பொழிவு மேடை மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார் கள். அதில்,) “அல்லாஹ், தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவ(து எதுவாயினும் அ)தைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெருவாழ்வு)தனை எடுத்துக் கொள்ளும்படியும் (இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள) வாய்ப்பளித்தான். அப்போது அந்த அடியார் அல்லாஹ் விடமிருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். மேலும் (நபியவர்களை நோக்கி), “தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்” என்று சொன்னார்கள். நாங்கள் அபூபக் ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம். மக்கள், “இந்த முதியவரைப் பாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவதைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமிருப் பதை எடுத்துக்கொள்ளும்படியும் இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கிய (மகிழ்ச்சியான விஷயத்)தைத் தெரிவித்துக்கொண்டிருக்க இவர், “தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்' என்று (அழுதபடி) கூறுகிறாரே” என்று சொன்னார்கள் -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார்- அபூபக்ர் (ரலி) அவர்கள்தான் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம் தோழமையாலும் தம் செல்வத்தாலும் எனக்குப் பேருபகாரம் புரிந்தவர் அபூபக்ர் அவர்கள்தான். என் சமுதாயத்தாரிóருந்து எவரையேனும் என் உற்ற நண்பராக நான் ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக் ரையே ஆக்கிக்கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாத்தின் (காரணத்தால் உள்ள) நட்பே (சிறந்ததாகும்;) போதுமான தாகும். (எனது இந்தப்) பள்ளிவாசலில் உள்ள வாசல்களில் அபூபக்ரின் வாசல் தவிர மற்றவை கண்டிப்பாக நீடிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.151 அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، قال حدثني مالك، عن ابي النضر، مولى عمر بن عبيد الله عن عبيد يعني ابن حنين عن ابي سعيد الخدري، رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم جلس على المنبر فقال " ان عبدا خيره الله بين ان يوتيه من زهرة الدنيا ما شاء، وبين ما عنده، فاختار ما عنده ". فبكى ابو بكر وقال فديناك باباينا وامهاتنا. فعجبنا له، وقال الناس انظروا الى هذا الشيخ، يخبر رسول الله صلى الله عليه وسلم عن عبد خيره الله بين ان يوتيه من زهرة الدنيا وبين ما عنده وهو يقول فديناك باباينا وامهاتنا. فكان رسول الله صلى الله عليه وسلم هو المخير، وكان ابو بكر هو اعلمنا به. وقال رسول الله صلى الله عليه وسلم " ان من امن الناس على في صحبته وماله ابا بكر، ولو كنت متخذا خليلا من امتي لاتخذت ابا بكر، الا خلة الاسلام، لا يبقين في المسجد خوخة الا خوخة ابي بكر
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: என் பெற்றோர் (அபூபக்ரும் உம்மு ரூமானும்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை. (மக்கா நகரில் வாழ்ந்த) முஸ்லிம்கள் இணை வைப்பவர் களால் பல்வேறு துன்பங்கள்) சோதனை களுக்கு உள்ளாக்கப்பட்டபோது, அபூபக்ர் அவர்கள் அபிசீனிய நாட்டை நோக்கி, நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். அவர்கள் (யமன் செல்லும் வழியில்) “பர்குல் கிமாத்'152 எனும் இடத்தை அடைந்தபோது இப்னுத் தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். -அவர் “அல்காரா' எனும் (பிரபல) குலத்தின் தலைவராவார்- அவர் “அபூபக்ரே எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார். “என் சமுதாயத்தார் என்னை (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்குத் தள்ளிவிட்டனர். ஆகவே, நான் பூமியில் பரவலாகப் பயணம் செய்து (நிம்மதியாக) என் இறைவனை வழிபடப்போகிறேன்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது இப்னுத் தஃகினா, “அபூபக்ரே! தங்களைப் போன்றவர்கள் (தாமாகவும்) வெளியேறக் கூடாது, (பிறரால்) வெளியேற்றப்படவும் கூடாது. (ஏனெனில்) நீங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். இரத்த பந்த உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள். விருந்தினர் களை உபசரிக்கிறீர்கள். சத்திய சோதனை களில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள் என்று (அவர்களின் அறச் சேவைகளைப் புகழ்ந்து) கூறிவிட்டு, “தங்களுக்கு நான் அடைக்கலம் தரு கிறேன். நீங்கள் (மக்காவிற்கே) திரும்பிச் சென்று உங்களது (அந்த) ஊரிலேயே உங்கள் இறைவனை வழிபடுங்கள்” என்று கூறினார். அபூபக்ர் (அபிசீனிய பயணத்தை ரத்துச் செய்துவிட்டு மக்காவிற்குத்) திரும்பினார்கள். அவர்களுடன் இப்னுத் தஃகினாவும் பயணமா(கித் திரும்பி)னார். மாலையில் இப்னுத் தஃகினா குறைஷிக் குல பிரமுகர்களைப் போய்ச் சந்தித்து அவர்களிடம், “(நாட்டு மக்களுக்காகப் பாடுபடும்) அபூபக்ரைப் போன்றவர்கள் (நாட்டிலிருந்து தாமாக) வெளியேறுவதோ, (பிறரால்) வெளியேற்றப்படுவதோ கூடாது. ஏழைகளுக்கு உழைக்கும், உறவுகளைப் பேணி வாழும், (சிரமப்படுவர்களின்) பாரஞ் சுமந்துவரும், விருந்தினர்களை உபசரித்துவரும், சத்திய சோதனைகளில் (ஆட்படுத்தப்பட்டோருக்கு) உதவிவரும் ஒரு (ஒப்பற்ற) மனிதரையா (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்கு உள்ளாக்குகிறீர்கள்?” என்று கேட்டார். (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தாம் அடைக்கலம் தரப்போவதாகக் கோரிய) இப்னுத் தஃகினாவின் அடைக்கலத்தை குறைஷியர் மறுக்கவில்லை. அவர்கள் இப்னுத் தஃகினாவை நோக்கி, “அபூபக்ர், தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வழிபடவோ, தொழவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ இவற்றைப் பகிரங்கமாகச் செய்யவோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி, மக்கள் (புதிய மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்ப மடைந்துவிடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என அவரிடம் கூறி விடுங்கள்” என்று சொன்னார்கள். அ(வர்கள் கூறிய)தை இப்னுத் தஃகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். அதன்படி அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது இல்லத்திற்குள் தம்முடைய இறைவனை வழிபட்டும், தமது தொழுகை யைப் பகிரங்கப்படுத்தாமலும் தமது வீட்டுக்கு வெளியில் (திருக்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்துவந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுதுகொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது, இணைவைப்பாளர்களின் மனைவி, மக்கள் அபூபக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு (அவர்களைச் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்காக) அவர்கள்மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும்போது தம் கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள். (அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தம்முடைய இளகிய இதயம் படைத்த மனைவி, மக்களை மதம்மாறச் செய்துவிடுமோ என்ற அச்சம்) இணைவைப்பாளர்களான குறைஷியரைப் பீதிக்குள்ளாக்கியது.153 அதனால் அவர்கள் இப்னுத் தஃகினாவிடம் ஆளனுப்பினர். அவரும் குறைஷியரிடம் வந்தார். அப்போது அவர்கள், “அபூபக்ர் தமது இல்லத்திற்குள்ளேயே தம் இறைவனை வழிபட்டுக்கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறிவிட்டுத் தமது வீட்டுமுற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாகத் தொழுதுகொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி, மக்கள் குழப்பத்திற்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே அபூபக்ரைத் தடுத்துவையுங்கள். அவர், அவருடைய இறைவனைத் தமது இல்லத்தில் வழிபடுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்துப் பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால், அவரிடம் உமது (அடைக்கலப்) பொறுப் பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களது உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்கள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூபக்ர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிப்போராகவும் இல்லை” என்று கூறினர். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னுத் தஃகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “நான் எ(ந்)த (நிபந்தனையி)ன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அல்லது எனது (அடைக்கலப்) பொறுப்பை என்னிடம் திரும்பத் தந்துவிட வேண்டும். ஏனென்றால், நான் உடன்படிக்கை செய்துகொண்ட ஒரு மனிதரின் விஷயத்தில் ஏமாற்றப்பட்டேன் என்று அரபியர் கேள்விப்படுவதை நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “உமது அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்துவிடுகிறேன். வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து நான் திருப்திப்படுகிறேன்” என்று கூறினார்கள். அன்றைக்கு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்துகொண்டி ருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து, “இரு கருங்கல் மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் நிறைந்த (மதீனா) பகுதியை நீங்கள் ஹிஜ்ரத் செல்கின்ற நாடாக நான் (கனவில்) காட்டப்பட்டேன்” என்று கூறினார்கள். எனவே, மதீனா நோக்கி ஹிஜ்ரத் சென்றவர்கள் சென்றார்கள். (ஏற்கெனவே) அபிசீனிய நாட்டிற்கு ஹிஜ்ரத் சென்றிருந்த வர்கள் பலர் (முஸ்லிம்கள் மதீனாவில் குடியேறுவதைக் கேள்விப்பட்டு) மதீனா வுக்குத் திரும்பினார்கள். (மக்காவிலிருந்து) அபூபக்ர் அவர்களும் மதீனா நோக்கி (ஹிஜ்ரத் புறப்பட) ஆயத்தமானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சற்று பொறுங்கள். எனக்கு (ஹிஜ்ரத்திற்கு) அனுமதி வழங்கப்படுவதை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “என் தந்தை தங்களுக்கு அர்ப்பணம்; அனுமதியை(த்தான்) எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு, “ஆம் (எதிர்பார்க்கிறேன்)” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ஆகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஹிஜ்ரத்) செல்வதற்காகத் தன்(பயணத்தி)னை நிறுத்தினார்கள். மேலும் அபூபக்ர் அவர்கள் (இந்தப் பயணத்திற் காகவே) தம்மிடம் இருந்த இரு ஊர்தி ஒட்டகங்களுக்கு நான்கு மாதம் கருவேலந் தழையைத் தீனிபோட்டு (வளர்த்து)வந்தார்கள்.154 ஆயிஷா (ரலி) அவர்கள் (தொடர்ந்து) கூறுகிறார்கள்: நாங்கள் ஒருநாள் அபூபக்ர் (ரலி) அவர்களின் இல்லத்தில் உச்சிப் பொழுதில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது தலையை மூடிய வண்ணம் -நம்மிடம் வருகை தராத ஒரு நேரத்தில் (வழக்கத்திற்கு மாற்றமாக)- இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “என் தந்தையும் என் தாயும் (நபி) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதோ (முக்கிய) விஷயம் தான் அவர்களை இந்த நேரத்தில் (இங்கு) வரச்செய்திருக்கிறது” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (இல்லத்திற்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட வுடன் அவர்கள் உள்ளே நுழைந்து, அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “உங்களிடம் இருப்பவர்களை வெளியேபோகச் சொல்லுங்கள். (உங்களிடம் ஒரு ரகசியம் பேச வேண்டும்)” என்று கூறினார்கள். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் (இல்லத்திற்குள் இருக்கும்) இவர்கள் உங்களுடைய (துணைவியின்) குடும்பத்தார்தான். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்ல எனக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது” என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “தங்களுடன் நானும் வர விரும்புகிறேன்! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். “சரி! (நீங்களும் வாருங்கள்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த என் இரு ஊர்தி ஒட்டகங்களில் ஒன்றைத் தாங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “விலைக்குத்தான் (இதை நான் எடுத்துக்கொள்வேன்)” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அவர்கள் இருவருக்காகவும் தேவையான பயண ஏற்பாடுகளை வெகு விரைவாக நாங்கள் செய்து முடித்தோம். ஒரு தோல்பையில் பயண உணவை நாங்கள் தயார் செய்துவைத்தோம். அப்போது அபூபக்ரின் மகள் (என் சகோதரி) அஸ்மா தனது இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டை(க் கிழித்து) அதை அந்தப் பையின் வாய்மீது வைத்துக் கட்டினார்கள். இதனால்தான் அவர்களுக்கு “கச்சுடையாள்' என்று பெயர் வந்தது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (பயணம் புறப்பட்டு) “ஸவ்ர்' மலையில் உள்ள ஒரு குகைக்கு வந்து சேர்ந்து அதில் மூன்று நாட்கள் ஒளிந்திருந்தார்கள். (அந்த மூன்று நாட்களில்) அவர்கள் இருவருடன் அப்துல்லாஹ் பின் அபீபக்ரும் இரவில் வந்து தங்கியிருப்பார் -அவர் சமயோசித அறிவு படைத்த, புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார்- பின்னிரவு (சஹர்) நேரத்தில் அவர்கள் இருவரைவிட்டுப் புறப்பட்டு மக்கா குறைஷியருடன் இரவில் தங்கியிருந்தவர் போல அவர்களுடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவரைப் பற்றி (குறைஷியரால் செய்யப்படும்) சூழ்ச்சிகளைக் கேட்டு, அவற்றை நினைவில் இருத்திக்கொண்டு இருள் கவிழும் நேரத்தில் அவர்கள் இருவரிடமும் அந்தச் செய்திகளைக் கொண்டுவந்துவிடுவார். அவர்கள் இருவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை ஆமிர் பின் ஃபுஹைரா (அபூபக்ர் அவர்களின்) மந்தையிலிருந்து ஒரு பால் தரும் ஆட்டை மேய்த்து வருவார். இரவில் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிடமும் ஓட்டிவருவார். அந்தப்பாலிலேயே இருவரும் இரவைக் கழித்துவிடுவார்கள்-அது புத்தம் புதிய, அடர்த்தி அகற்றப்பட்ட பாலாகும் -அந்த ஆட்டை ஆமிர் பின் ஃபுஹைரா இரவின் இருட்டு இருக்கும்போதே விரட்டிச் சென்றுவிடுவார். இதை (அவர்கள் இருவரும் அந்தக் குகையில் தங்கியிருந்த) மூன்று இரவுகளில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்துவந்தார். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் பனூ அப்த் பின் அதீ குலத்தில் “பனூ அத்தீல்' எனும் கிளையைச் சேர்ந்த கை தேர்ந்த ஒருவரை155 பயண வழிகாட்டி யாக இருக்கக் கூலிக்கு அமர்த்தினர். அவர் ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ எனும் குலத்தாருடன் நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தார். (ஆனாலும்) அவர் குறைஷி இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அவரை நம்பி, தங்களது இரு ஊர்தி ஒட்டகங்களை ஒப்படைத்து மூன்று இரவுகளுக்குப் பின் “ஸவ்ர்' குகைக்கு வந்துவிடுமாறு வாக்குறுதி வாங்கியிருந்தனர். மூன்றாம் (நாள்) அதிகாலையில் அந்த இரு ஊர்திகளுடன் (அவர் ஸவ்ர் குகைக்கு வந்து சேர்ந்தார்.) அவர்கள் இருவருடன் ஆமிர் பின் ஃபுஹைராவும் பயண வழிகாட்டியும் சென்றனர். பயண வழிகாட்டி அவர்களைக் கடற்கரைப் பாதையில் அழைத்துச் சென்றார்.156 அத்தியாயம் :
சுராகா பின் (மாலிக் பின்) ஜுஅஷும் (ரலி) அவர்கள் கூறியதாவது: குறைஷிக் குலத்தின் தூதுவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை யும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் கொலை செய்பவருக்கு, அல்லது (உயிருடன்) கைதுசெய்து வருபவருக்கு இருவரில் ஒவ்வொருவருக்கும் (நூறு ஒட்டகம் என்று) பரிசை நிர்ணயம் செய்(து அறிவித்)தவர்களாக எங்களிடம் வந்த னர். அப்போது நான் எங்களது பனூ முத்லிஜ் சமுதாயத்தின் அவைகளில் ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து வந்து, அமர்ந்துகொண்டிருந்த எங்களிடையே நின்றுகொண்டு, “சுராகாவே! சற்றுமுன் நான் கடலோரத்தில் சில உருவங்களைப் பார்த்தேன். அவர்கள் முஹம்மதும் அவருடைய தோழர்களும் தான் என்று நான் கருதுகிறேன்” என்று கூறினார். அவர்கள் முஹம்மதும் தோழர்களும் தான் என்று நான் அறிந்துகொண்டேன். (இருப்பினும் அவரைத் திசை திருப்புவதற் காக) “அவர்கள் முஹம்மதும் தோழர்களும் அல்லர். மாறாக, இன்னார் இன்னாரைத்தான் நீ பார்த்திருப்பாய். அவர்கள் எங்கள் கண்ணெதிரேதான் (தங்களின் காணாமற்போன ஒட்டகங்களைத் தேடிப்)போனார்கள்” என்று நான் அவரிடம் கூறினேன். பிறகு அந்த அவையிலேயே சிறிது நேரம் இருந்தேன். அதற்குப் பிறகு எழுந்து (எனது இல்லத்திற்குள்) நுழைந்து என் அடிமைப் பெண்ணிடம் எனது குதிரையை வெளியே கொண்டுவரும்படி உத்தரவிட்டேன். - அப்போது குதிரை ஒரு மலைக்குன்றுக்கு அப்பால் இருந்தது.- எனக்காக அதை அவள் (அங்கே) கட்டிவைத்திருந்தாள். பின்பு, நான் என்னுடைய ஈட்டியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புற வாசல் வழியாக வெளியேறினேன். (ஈட்டியை நான் தாழ்த்திப் பிடித்திருந்ததால்) அதன் கீழ் முனையால் (என்னையும் அறியாம லேயே) தரையில் கோடு கிழித்தேன். மேலும், அதன்மேல் நுனியை தாழ்த்திக் கொண்டு என் குதிரையிடம் வந்து அதன் மீது ஏறிக்கொண்டேன். அதன் முன்னங் கால் இரண்டையும் ஒரே நேரத்தில் உயர்த்தி ஒரே நேரத்தில் பூமியில் வைக்குமாறு செய்து மிக வேகமாகப் புறப்பட்டு அவர்களை நெருங்கினேன். அப்போது எனது குதிரை காலிடறி அதிலிருந்து நான் விழுந்துவிட்டேன். உடனே நான் எழுந்து எனது கையை அம்புக்கூட்டை நோக்கி நீட்டி, அதிலி ருந்து (சகுனச் சொற்கள் எழுதப்பட்ட) அம்புகளை எடுத்தேன். அவற்றின் மூலம் என்னால் அவர்களுக்குப் பாதிப்பை உருவாக்க முடியுமா; அல்லது முடியாதா என்று குறிபார்த்தேன். நான் விரும்பாத (வகையில், என்னால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியாது என்ப)தே வந்தது. என் அம்புகளுக்கு மாறு செய்துவிட்டு எனது குதிரையில் ஏறினேன். அது பாய்ந்த வண்ணம் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருக்குர்ஆன்) ஓதியதை நான் கேட்டேன். அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. அபூபக்ர் அவர்கள் அடிக் கடி திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். (அப்போது) எனது குதிரையின் முன்கால்கள் இரண்டும் முட்டுக் கால்கள்வரையிலும் பூமியில் புதைந்துகொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். பிறகு (அதை எழச்செய்வதற்காக) அதை நான் அரற்றினேன். அது எழுந்(திருக்க முயற்சித்)தது. (ஆனால்,) அதன் கால்களை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அது நேராக எழுந்து நின்றபோது இரு முன்னங்கால்களின் அடிச் சுவட்டிலிருந்து புகை போல வானத்தில் பரவலாகப் புழுதி கிளம்பிற்று. உடனே நான் (எனது) அம்புகளைக் கொண்டு (சகுனக்) குறிபார்த்தேன். நான் விரும்பாததே வந்தது. உடனே நான் எனக்கு (உயிர்) பாதுகாப்பு நல்கும்படி அவர்களை அழைத்தேன். உடனே அவர்கள் நின்றுவிட்டனர். நான் எனது குதிரையிலேறி அவர்களிடம் வந்து சேர்ந்தேன். அவர்களைவிட்டு (எனது குதிரை) தடுக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியை நான் கண்டபோது எனது மனதிற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மார்க்க) விஷயம் மேலோங்கும் என்று தோன்றியது. நான் அல்லாஹ்வின் தூதரிடம், “உங்களுடைய (குறைஷி) சமுதாயத்தார் உங்களுக்காகப் பரிசை நிர்ணயித்துள்ள னர்” என்று கூறிவிட்டு அந்த (குறைஷி) மக்கள் முஸ்லிம்களைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்ற தகவல்களை அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். மேலும், எனது பயண உணவுப் பொருள் களை எடுத்துக்காட்டினேன். அவர்கள் என்னிடமிருந்து ஒன்றையும் (எடுத்து) எனக்கு குறைவு செய்யவுமில்லை; (என்னிடமிருந்த எதையும்) அவர்கள் இருவரும் என்னிடம் கேட்கவுமில்லை. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “எங்களைப் பற்றி(ய செய்தியை) மறைத்துவிடு” என்று கூறினார்கள். உடனே, நான் நபி (ஸல்) அவர்களிடம் எனக்கு ஒரு பாதுகாப்புப் பத்திரம் எழுதித் தரும்படி வேண்டினேன். அப்போது, நபி (ஸல்) அவர்கள் ஆமிர் பின் ஃபுஹைராவுக்கு உத்தரவிட அவர் பாடமிடப்பட்ட தோல் துண்டில் (பாதுகாப்புப் பத்திரத்தின் வாசகத்தை) எழுதினார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சகாக்களுடன் மதீனா நோக்கிச்) சென்றார்கள்.157 உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஷாம் நாட்டிலிருந்து (வியாபாரத்தை முடித்துக்கொண்டு) திரும்பிக்கொண்டிருந்த முஸ்லிம்களின் வணிகக் குழுவிலிருந்த ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள். அப்போது ஸுபைர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும், அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் வெண்ணிற ஆடைகளைப் போர்த்தினார்கள். மதீனா விலிருந்த முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டதைக் கேள்விப்பட்டு, ஒவ்வொரு நாள் காலையிலும் (மதீனா வின் புறநகர்ப் பகுதியிலிருந்த கருங்கற்கள் நிறைந்த) “அல்ஹர்ரா' எனுமிடத்திற்கு வந்து நண்பகலின் வெப்பம் அவர்களைத் திருப்பியனுப்பும்வரையில் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந் தனர். அப்படி ஒருநாள் நீண்ட நேரம் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துவிட்டு (ஊருக்குள்) அவர்கள் திரும்பித் தத்தமது வீட்டுக்குள் ஒதுங்கியபோது யூதர்களில் ஒருவர் அவர்களது கோட்டைகளில் ஒன்றின் மீது எதையோ பார்ப்பதற்காக ஏறியிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் வெண்ணிற ஆடையில், கானல் நீர் விலக வருவதைப் பார்த்தார். அந்த யூதரால் (தம்மைக்) கட்டுப்படுத்த இயலாமல் உரத்த குரலில், “அரபுக் குழாமே! இதோ நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுடைய நாயகர்” என்று கூவினார். உடனே, முஸ்லிம்கள் (நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்புடன் வரவேற்பதற்காக). ஆயுதங்களை நோக்கிக் கிளர்ந்தெழுந்தனர். அந்த (கருங்கற்கள் நிறைந்த) அல்ஹர்ராவின் பரப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் வலப் பக்கமாகத் திரும்பி (“குபா'வில் உள்ள) பனூஅம்ர் பின் அவ்ஃப் குலத்தாரி(ன் குடியிருப்புப் பகுதியி)ல் தங்கினார்கள். இது ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள்கிழமை நடந்தது. அப்போது மக்களை நோக்கி அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த -நபி (ஸல்) அவர்களைப் பார்த்திராத- அன்சாரிகளில் சிலர் (அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று எண்ணிக் கொண்டு) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முகமன் கூறிக்கொண்டிருந்தனர். இறுதியில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது வெயில் பட்டபோது உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் சென்று தமது துண்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது நிழலிட்டார்கள். அப்போதுதான் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அறிந்து கொண்டனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடையே (குபாவில்) பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியிருந்து “இறையச் சத்தின்மீது அடித்தளமிடப்பட்ட (மஸ்ஜித் குபா) பள்ளிவாசலை' நிறுவினார்கள். (தாம் தங்கியிருந்த நாட்களில்) அந்தப் பள்ளி வாசலில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். பிறகு தமது வாகனத்தில் ஏறிப் பயணமானார்கள். அவர்களுடன் மக்களும் நடந்து சென்றனர். முடிவாக (அவர்களது) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசல் (அமைந்துள்ள இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக்கொண்டது. அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்குதான் தொழுதுகொண்டிருந்தனர். அது சஅத் பின் ஸுராரா (ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்த சஹ்ல், சுஹைல் என்ற இரு அநாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம் பழம் (உலரவைக்கப்படும்) களமாக இருந்தது. அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் இதுதான் (நமது) தங்குமிடம்” என்று கூறினார்கள். பிறகு அந்த இரு சிறுவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அந்தக் களத்தை பள்ளிவாசல் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும், “இல்லை; அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் அல்லாஹ் வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களிட மிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிட மிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும்போது அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள். (அப்போது,) “இந்தச் சுமை கைபரின் சுமையல்ல. இது எங்களது இறைவனிடம் (சேமித்துவைக்கப்படும்) நீடித்த நன்மையும் (கைபரின் சுமையை விடப்) பரிசுத்தமானதுமாகும்” என்று (“ரஜ்ஸ்' எனும் ஈரசைச் சீரில் அமைந்த பாடலைப் பாடியபடி) கூறிக்கொண்டிருந்தார்கள். மேலும், “இறைவா (உண்மையான) பலன் மறுமையின் பலனே. ஆகவே (மறுமைப் பலனுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் கருணை காட்டுவாயாக” என்று கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் ஒருவரின் கவிதையை நபியவர்கள் பாடிக்காட்டி னார்கள். அவரது பெயர் என்னிடம் கூறப்படவில்லை (என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு தொடர்ந்து) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பாடல் (வரி)களைத் தவிர ஒரு முழுமையான கவிதையின் பாடலைப் பாடியதாக எனக்கு ஹதீஸ்களில் (செய்தி) எட்டவில்லை. அத்தியாயம் :
அஸ்மா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (ஹிஜ்ரத்தின்போது) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் மதீனா செல்ல நாடிய சமயம் நான் அவர்கள் இருவருக்கும் பயண உணவைத் தயாரித் தேன். என் தந்தை (அபூபக்ர்-ரலி) அவர்களிடம், “இதைக் கட்டுவதற்கு என்னிடம் என் இடுப்புக் கச்சுத் தவிர வேறெதுவும் இல்லை” என்று சொன்னேன். அவர்கள், “அப்படியென்றால் அதை இரண்டாகக் கிழி” என்று சொன்னார்கள். நான் அவ்வாறே செய்(து என் இடுப்புக் கச்சை இரண்டாகக் கிழித்துப் பயண உணவைக் கட்டி முடித்)தேன். ஆகவே நான், “இரு கச்சுடையாள்” என்று (புனை பெயர்) சூட்டப்பட்டேன்.158 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “அஸ்மா கச்சுடையாள்' என்று சொன்னார் கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن ابي شيبة، حدثنا ابو اسامة، حدثنا هشام، عن ابيه، وفاطمة، عن اسماء، رضى الله عنها صنعت سفرة للنبي صلى الله عليه وسلم وابي بكر حين ارادا المدينة، فقلت لابي ما اجد شييا اربطه الا نطاقي. قال فشقيه. ففعلت، فسميت ذات النطاقين
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்றபோது சுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் என்பவர் அவர்களைப் (பிடித்துவரப்) பின்தொடர்ந்து சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராக (அவரைச் செயலிழக்கச் செய்யும்படி) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரது குதிரை அவருடனேயே பூமியில் புதையுண்டது. சுராக்கா (நபியவர்களிடமே), “எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங் கள். நான் உங்களுக்குத் தீங்கு செய்யமாட்டேன்” என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாகத்துடனிருக்க, ஓர் ஆட்டிடையர் அவ்வழியே சென்றார். உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு கிண்ணத்தை எடுத்து (ஆடு ஒன்றிலிருந்து) சிறிது பாலை அதில் கறந்து அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அபூபக்ர் அவர்கள் திருப்தியடையும்வரை நபி (ஸல்) அவர்கள் (அதிலிருந்து) அருந்தி னார்கள்.159 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن ابي اسحاق، قال سمعت البراء رضى الله عنه قال لما اقبل النبي صلى الله عليه وسلم الى المدينة تبعه سراقة بن مالك بن جعشم، فدعا عليه النبي صلى الله عليه وسلم فساخت به فرسه. قال ادع الله لي ولا اضرك. فدعا له. قال فعطش رسول الله صلى الله عليه وسلم فمر براع، قال ابو بكر فاخذت قدحا فحلبت فيه كثبة من لبن، فاتيته فشرب حتى رضيت
அஸ்மா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நான் (என் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரை (மக்காவில்) கருவுற்றிருந் தேன். கர்ப்பக் காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டேன்; மதீனா வந்தேன். (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தேன். பிறகு, நபி (ஸல்) அவர்களிடம் குழந்தையைக் கொண்டுசென்று அவர்களின் மடியில் அவனை வைத்தேன். பிறகு அவர்கள் பேரீச்சம்பழம் ஒன்றைக் கொண்டுவரும்படி கூறி அதை மென்று அவனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ்நீர்தான் அவனது வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை மென்று அவனது வாயினுள் வைத்துத் தேய்த்துவிட்டார்கள். பிறகு அவனுக்காக துஆ செய்து, இறைவனிடம் அருள்வளம் வேண்டி இறைஞ்சினார்கள். அவன்தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதில், “அஸ்மா (ரலி) அவர்கள் நபி (ஸல்-அவர்களிடம் மதீனா) நோக்கி கர்ப்பிணியான நிலையில் ஹிஜ்ரத் செய்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அத்தியாயம் :
حدثني زكرياء بن يحيى، عن ابي اسامة، عن هشام بن عروة، عن ابيه، عن اسماء رضى الله عنها انها حملت بعبد الله بن الزبير، قالت فخرجت وانا متم، فاتيت المدينة، فنزلت بقباء، فولدته بقباء، ثم اتيت به النبي صلى الله عليه وسلم فوضعته في حجره، ثم دعا بتمرة، فمضغها، ثم تفل في فيه، فكان اول شىء دخل جوفه ريق رسول الله صلى الله عليه وسلم، ثم حنكه بتمرة ثم دعا له وبرك عليه، وكان اول مولود ولد في الاسلام. تابعه خالد بن مخلد عن علي بن مسهر عن هشام عن ابيه عن اسماء رضى الله عنها انها هاجرت الى النبي صلى الله عليه وسلم وهى حبلى
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (முஹாஜிர்களிலேயே) இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் ஆவார். (அவர் பிறந் தவுடன்) அவரை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து, அதை மென்று அவரது வாய்க்குள் நுழைத்தார்கள். அவரது வயிற்றினுள் முதலாவதாக நுழைந்தது நபி (ஸல்) அவர்களது உமிழ் நீரேயாகும். அத்தியாயம் :
حدثنا قتيبة، عن ابي اسامة، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت اول مولود ولد في الاسلام عبد الله بن الزبير، اتوا به النبي صلى الله عليه وسلم فاخذ النبي صلى الله عليه وسلم تمرة فلاكها ثم ادخلها في فيه، فاول ما دخل بطنه ريق النبي صلى الله عليه وسلم
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) அவர்கள் வர (மக்காவிலிருந்து) மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (இளநரையின் காரணத்தால் தோற்றத்தில்) மூத்தவராகவும், (மதீனாவாசி களிடையே வியாபார நிமித்தமாக அடிக்கடி சென்றதில் அவர்களிடையே) அறிமுகமானவராகவும் இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நரை விழாத காரணத்தால் உருவத்தில்) இளையவராகவும் (வெளியூர் சென்று நீண்ட காலமாகிவிட்டதால் அந்த மக்களிடையே) அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள். (அவர்கள் இருவரும் ஹிஜ்ரத் சென்ற அந்தப் பயணத்தின்போது) அபூபக்ர் (ரலி) அவர்களை ஒரு மனிதர் சந்தித்து, “அபூபக்ரே! உமக்கு முன்னால் உள்ள இந்த மனிதர் யார்?” என்று கேட்கிறார். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள், “இந்த மனிதர் எனக்கு வழிகாட்டுபவர்” என்று (நபி (ஸல்) அவர்களை எதிரிக்குக் காட்டிக் கொடுத்துவிடாமலும், அதே சமயம் உண்மைக்குப் புறம்பில்லாமலும் இரு பொருள்படும்படி) பதிலளிக்கிறார்கள். இதற்கு, “(பயணத்தில்) பாதை (காட்டுபவர்)' என்றே அபூபக்ர் பொருள் கொள்கிறார் என எண்ணுபவர் எண்ணிக்கொள்வார். ஆனால், “நன்மார்க்கத்திற்கு (வழி காட்டுபவர்)' என்ற பொருளையே அபூபக்ர் கொண்டிருந்தார்கள். அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு (அவர்களுக்குப் பின்னால்) ஒரு குதிரை வீரர் (சுராக்கா) அவர்களைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இதோ!) இந்தக் குதிரை வீரர் நம்மை (நெருங்கி) வந்தடைந்துவிட்டார்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்து விட்டு, “இறைவா! அவரைக் கீழே விழச் செய்!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே குதிரை அவரைக் கீழே தள்ளிவிட்டது; பிறகு கனைத்துக்கொண்டே எழுந்து நின்றது. (உடனே சுராக்கா மனம் திருந்தி), “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பியதை எனக்கு உத்தரவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இங்கேயே நின்றுகொள். எங்களைப் பின்தொடர்ந்து வரும் எவரையும் விட்டுவிடாதே” என்று கூறினார்கள். இந்த சுராக்கா முற்பகலில் அல்லாஹ்வின் நபிக்கெதிராகப் போரிடுபவராக இருந்தார்; பிற்பகலில் நபியைக் காக்கும் ஆயுதமாக மாறினார். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கருங்கற்கள் நிறைந்த) “அல்ஹர்ரா' பகுதியில் இறங்கி(த் தங்கி)னார்கள். (அங்கே குபாவில் ஒரு பள்ளிவாசலையும் கட்டச் செய்தார்கள்.) பிறகு, (குபாவிலிருந்துகொண்டு மதீனாவாசிகளான) அன்சாரிகளிடம் ஆளனுப்பினார்கள். உடனே அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் வந்து, அவர்கள் இருவருக்கும் சலாம் சொன்னார்கள். பிறகு, “(இப்போது) நீங்கள் இருவரும் அச்சமற்றவர்களாவும் (ஆணையிடும்) அதிகாரம் படைத்தவர்களாவும் பயணம் செய்யலாம்” என்று கூறினர். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (மதீனா நோக்கிப்) பயணமாயினர். அன்சாரிகள் (அவர்களுக்குப் பாதுகாப்பாக) ஆயுதங் களுடன் (அவர்களைச்) சூழ்ந்தபடி சென்றனர். அப்போது மதீனாவில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்துவிட்டார் கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்துவிட்டார்கள்” என்று சொல்லப்பட்டது. எதிர்பார்த்துக்கொண்டிருந்த மக்கள், “அல்லாஹ்வின் தூதர் வந்துவிட்டார்கள்” என்று கூறலாயினர். நபி (ஸல்) அவர்கள் சிறிது தூரம் பயணித்த பின்னர் (தமது வாகனத்திலிருந்து) அபூஅய்யூப் (அல்அன்சாரீ -ரலி) அவர்களின் வீட்டிற்குப் பக்கத்தில் இறங்கினார்கள். (அங்கே) நபியவர்கள் தம் குடும்பத்தாரிடம் உரையாற்றிக்கொண்டிருந்தார்கள். அப்போது தமது குடும்பத்தாருக்குச் சொந்தமான பேரீச்சந்தோட்டத்தில் கனிகளைப் பறித்துக் கொண்டிருந்த (யூத அறிஞர்) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் இதைக் கேட்டுவிட்டு, குடும்பத்தாருக்காகப் பறித்தவற்றை அவர்களுக்கென எடுத்துவைக்கத் தவறி, அவற்றைத் தம்முடன் கொண்டுவந்துவிட்டார். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்(கள் மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்த அறிவுரைகளை160 அவர்)களிடமிருந்து கேட்டுவிட்டுத் தம் வீட்டாரிடம் திரும்பிச் சென்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எங்கள் குடும்பத்தாரின் வீடுகளில் அருகிலிருப்பது எது?”161 என்று கேட் டார்கள். அதற்கு அபூஅய்யூப் அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது என் வீடு. இதுதான் என் (வீட்டு) வாசல். (நானே உங்கள் குடும்பத்தாரில் மிக அருகில் உள்ளவன்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சென்று மதிய ஓய்வு கொள்வதற்காக (உங்கள் வீட்டை) எமக்குத் தயார் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அபூஅய்யூப் (ரலி) அவர்கள், “உயர்ந்தவ னான அல்லாஹ்வின் அருள்வளத்துடன் நீங்கள் இருவரும் எழுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர் களின் இல்லத்திற்கு) வந்தபோது (யூத அறிஞர்) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் வந்து (சில விளக்கங்களைக் கேட்டு உறுதி செய்துகொண்ட பிறகு), “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும், தாங்கள் சத்திய (மார்க்க)த்துடன் வந்துள்ளீர்கள் என்றும் நான் சாட்சியம் அளிக்கிறேன். யூதர்கள் என்னைப் பற்றி, நான் அவர்களின் தலைவன் என்றும், அவர்களின் தலைவருடைய மகன் என்றும், அவர்களில் நான் மிகவும் அறிந்தவன் என்றும், அவர்களில் மிகவும் அறிந்தவரின் மகன் என்றும் அறிந்துள்ளனர். நான் முஸ்லிமாகிவிட்டேன் என்பதை அவர்கள் அறியும் முன்பாக அவர்களை அழைத்து என்னைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள். ஏனெனில், நான் முஸ்óமாகிவிட்டேன் என்பதை அவர்கள் அறிந்தால் என்னிடம் இல்லாத (குற்றங்குறைகள் முதலிய)வற்றை என்னிடமிருப்பதாகக் கூறுவர்” என்று சொன்னார்கள். (யூதர்களை அழைத்து வரும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். யூதர்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். (உடனே அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் ஓரிடத்தில் மறைந்துகொண்டார்கள்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யூதப் பெருமக்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்! (இல்லையேல்,) உங்களுக்குக் கேடுதான். எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! நான் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதர்தான் என்றும், நான் சத்திய(மார்க்க)த்துடன் உங்களிடம் வந்துள்ளேன் என்றும் நீங்கள் அறிவீர்கள். எனவே, நீங்கள் முஸ்லிமாகிவிடுங்கள்” என்று கூறி னார்கள். யூதர்கள் (ஏற்க மறுத்து), “அ(த்தகைய தூதர் ஒரு)வரை நாங்கள் அறியமாட்டோம்” என்று -நபி (ஸல்) அவர்களிடம் கூற, நபியவர்கள் அதையே மூன்று முறை- கூறினார்கள். (பிறகு,) நபி (ஸல்) அவர்கள், “உங்களிடையே அப்துல்லாஹ் பின் சலாம் எத்தகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அவர்கள், “அவர் எங்களின் தலைவர்; எங்களுடைய தலைவரின் மகன்; மேலும் எங்களில் மிகப் பெரிய அறிஞர்; மிகப் பெரிய அறிஞரின் மகன்” என்று கூறினர். “அவர் முஸ்லிமாகிவிட்டால் (என்ன செய்வீர்கள்?) கூறுங்கள்” என்றார்கள். அவர்கள், “அல்லாஹ் காப்பாற்றட்டும்! அவர் முஸ்லிமாகமாட்டார்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அவர் முஸ்லிமாகிவிட்டால் (என்ன செய்வீர்கள்?) கூறுங்கள்” என்று (மீண்டும்) கேட்க, அவர்கள் (முன்பு போலவே), “அல்லாஹ் காப்பாற்றட்டும்! அவர் முஸ்லிமாகமாட்டார்” என்று கூறினர். “அவர் முஸ்லிமாகிவிட்டால் கூறுங்கள்” என்று (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர்கள், “அல்லாஹ் காப்பாற்றட்டும்! அவர் முஸ்லிமாகமாட்டார்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “இப்னு சலாமே! இவர்களிடம் வாருங்கள்” என்று சொன்னார்கள். உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் வெளியே வந்து, “யூதப் பெருமக்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீதாணையாக! இவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதையும் இவர்கள் சத்திய (மார்க்க)த் துடன் வந்துள்ளார்கள் என்பதையும் நீங்கள் நன்கறிவீர்கள்” என்று கூறி னார்கள். உடனே யூதர்கள், “நீ பொய் சொன் னாய்” என்று கூறினார்கள். உடனே யூதர் களை நபி (ஸல்) அவர்கள் (தம்மிடத்திலிருந்து) வெளியேறச் செய்தார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் முதன்முதலாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு (பொதுநிதியிலிருந்து) நான்காண்டுகளுக்கு நான்காயிரம் (திர்ஹம்/தீனார்) கொடுக்க வேண்டுமென நிர்ணயித்தார்கள். (தமது மகனான) எனக்கு மூவாயிரத்து ஐநூறு கொடுக்க வேண்டும் என நிர்ணயித்தார்கள். அவர்களிடம், “(தங்கள் மகன்) இப்னு உமர் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒருவர்தானே! நான்காயிரம் கொடுக்காமல் அவருக்கு மட்டும் ஏன் குறைவாக நிர்ணயித்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவரை அழைத்துக்கொண்டு ஹிஜ்ரத் செய்துவந்ததெல்லாம் அவருடைய தாய், தந்தையர்தான்” என்று சொன்னார்கள். “அவர் சுயமாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களைப் போன்றவரல்லர்” என்றும் உமர் (ரலி) அவர்கள் சொல்வார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، عن ابن جريج، قال اخبرني عبيد الله بن عمر، عن نافع يعني، عن ابن عمر، عن عمر بن الخطاب، رضى الله عنه قال كان فرض للمهاجرين الاولين اربعة الاف في اربعة، وفرض لابن عمر ثلاثة الاف وخمسماية فقيل له هو من المهاجرين، فلم نقصته من اربعة الاف فقال انما هاجر به ابواه. يقول ليس هو كمن هاجر بنفسه
கப்பாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம்.162 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن الاعمش، عن ابي وايل، عن خباب، قال هاجرنا مع رسول الله صلى الله عليه وسلم
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் பின் உமைர் (ரலி) அத்தகையவர்களில் ஒருவர்தான். அவர் உஹுத் போரின்போது கொல்லப்பட்டார். அவரை கஃபனிடு வதற்கு (அவரது) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியால் நாங்கள் அவரது தலையை மூடியபோது அவருடைய கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின; அவருடைய கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரது தலை வெளியே தெரியலாயிற்று. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரது தலையை மூடிவிடும்படியும் அவருடைய கால்கள் இரண்டின்மீதும் “இத்கிர்' புல்லைச் சிறிது போட்டு (மறைத்து)விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து(சுவைத்து)க்கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்.163 அத்தியாயம் :
وحدثنا مسدد، حدثنا يحيى، عن الاعمش، قال سمعت شقيق بن سلمة، قال حدثنا خباب، قال هاجرنا مع رسول الله صلى الله عليه وسلم نبتغي وجه الله، ووجب اجرنا على الله، فمنا من مضى لم ياكل من اجره شييا، منهم مصعب بن عمير، قتل يوم احد فلم نجد شييا نكفنه فيه، الا نمرة كنا اذا غطينا بها راسه خرجت رجلاه، فاذا غطينا رجليه خرج راسه، فامرنا رسول الله صلى الله عليه وسلم ان نغطي راسه بها، ونجعل على رجليه من اذخر، ومنا من اينعت له ثمرته فهو يهدبها
அபூபுர்தா பின் அபீமூசா அல்அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “என் தந்தை (உமர் (ரலி) அவர்கள்) உங்கள் தந்தை (அபூமூசா (ரலி) அவர்கள்) இடம் என்ன சொன்னார் கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “தெரியாது” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: என் தந்தை உங்கள் தந்தையிடம், “அபூமூசாவே! நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஸ்லாத்தை ஏற்றதும், அவர்களுடன் ஹிஜ்ரத் செய்ததும், அவர் களுடன் (சேர்ந்து) அறப்போர் புரிந்ததும், அவர்களுடன் (இணைந்து) நாம் புரிந்த நற்செயல்களும் (இவையெல்லாம்) நிச்சய மாகப் பலன் தரும் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? மேலும், நபியவர் களுக்குப்பின் நாம் புரிந்த செயல்கள் அனைத்தும் (அவற்றிலுள்ள நிறைகளும் குறைகளும்) சரிக்குச் சரிநிகராகி (இறை வனின் தண்டனையிலிருந்து) நாம் தப்பித் துக்கொள்வோம் என்பதும் (உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா?)” என்று கேட்டார்கள். அதற்கு (என் தந்தையிடம்) உங்கள் தந்தை (அபூமூசா), “இல்லை; இறைவன் மீதாணையாக! நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு அறப்போர் புரிந்துள்ளோம்; தொழுதுள்ளோம்; நோன்பு நோற்றுள்ளோம்; நற்செயல்கள் நிறையப் புரிந்துள்ளோம். மேலும், நம் கரங்களால் நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இவற்றுக்கெல்லாம் (இறைவன் நமக்குப் பிரதிபலன் அளிப்பான் என) நாம் எதிர்பார்க்கின்றோம்” என்று பதிலளித்தார்கள். உடனே என் தந்தை (உமர்), “ஆனால், உமரின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன்மீது ஆணையாக! நானோ, (நபியவர்களுடன் நாம் புரிந்த நற்செயல்களான) அவற்றின் பலன் நிச்சயம் நமக்குக் கிடைக்கும் என்பதும், நபிகளாருக்குப்பின் நாம் புரிந்த செயல்கள் அனைத்தும் (அவற்றிலுள்ள நிறைகளும் குறைகளும்) சரிக்குச் சரிநிகராகி (இறைவனின் தண்டனையிலிருந்து) நாம் தப்பித்துக்கொள்வோம் என்பதும் போதும் என்றே நான் விரும்புகிறேன்” எனக் கூறினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் தந்தை (உமர்) என் தந்தையைவிடச் சிறந்தவர்” என்று சொன்னேன். அத்தியாயம் :
حدثنا يحيى بن بشر، حدثنا روح، حدثنا عوف، عن معاوية بن قرة، قال حدثني ابو بردة بن ابي موسى الاشعري، قال قال لي عبد الله بن عمر هل تدري ما قال ابي لابيك قال قلت لا. قال فان ابي قال لابيك يا ابا موسى، هل يسرك اسلامنا مع رسول الله صلى الله عليه وسلم وهجرتنا معه، وجهادنا معه، وعملنا كله معه، برد لنا، وان كل عمل عملناه بعده نجونا منه كفافا راسا براس فقال ابي لا والله، قد جاهدنا بعد رسول الله صلى الله عليه وسلم وصلينا، وصمنا، وعملنا خيرا كثيرا، واسلم على ايدينا بشر كثير، وانا لنرجو ذلك. فقال ابي لكني انا والذي نفس عمر بيده لوددت ان ذلك برد لنا، وان كل شىء عملناه بعد نجونا منه كفافا راسا براس. فقلت ان اباك والله خير من ابي
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، قال ابن شهاب فاخبرني عروة بن الزبير، ان عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت لم اعقل ابوى قط الا وهما يدينان الدين، ولم يمر علينا يوم الا ياتينا فيه رسول الله صلى الله عليه وسلم طرفى النهار بكرة وعشية، فلما ابتلي المسلمون خرج ابو بكر مهاجرا نحو ارض الحبشة، حتى بلغ برك الغماد لقيه ابن الدغنة وهو سيد القارة. فقال اين تريد يا ابا بكر فقال ابو بكر اخرجني قومي، فاريد ان اسيح في الارض واعبد ربي. قال ابن الدغنة فان مثلك يا ابا بكر لا يخرج ولا يخرج، انك تكسب المعدوم، وتصل الرحم وتحمل الكل، وتقري الضيف، وتعين على نوايب الحق، فانا لك جار، ارجع واعبد ربك ببلدك. فرجع وارتحل معه ابن الدغنة، فطاف ابن الدغنة عشية في اشراف قريش، فقال لهم ان ابا بكر لا يخرج مثله ولا يخرج، اتخرجون رجلا يكسب المعدوم، ويصل الرحم، ويحمل الكل، ويقري الضيف، ويعين على نوايب الحق فلم تكذب قريش بجوار ابن الدغنة، وقالوا لابن الدغنة مر ابا بكر فليعبد ربه في داره، فليصل فيها وليقرا ما شاء، ولا يوذينا بذلك، ولا يستعلن به، فانا نخشى ان يفتن نساءنا وابناءنا. فقال ذلك ابن الدغنة لابي بكر، فلبث ابو بكر بذلك يعبد ربه في داره، ولا يستعلن بصلاته، ولا يقرا في غير داره، ثم بدا لابي بكر فابتنى مسجدا بفناء داره وكان يصلي فيه ويقرا القران، فينقذف عليه نساء المشركين وابناوهم، وهم يعجبون منه، وينظرون اليه، وكان ابو بكر رجلا بكاء، لا يملك عينيه اذا قرا القران، وافزع ذلك اشراف قريش من المشركين، فارسلوا الى ابن الدغنة، فقدم عليهم. فقالوا انا كنا اجرنا ابا بكر بجوارك، على ان يعبد ربه في داره، فقد جاوز ذلك، فابتنى مسجدا بفناء داره، فاعلن بالصلاة والقراءة فيه، وانا قد خشينا ان يفتن نساءنا وابناءنا فانهه، فان احب ان يقتصر على ان يعبد ربه في داره فعل، وان ابى الا ان يعلن بذلك فسله ان يرد اليك ذمتك، فانا قد كرهنا ان نخفرك، ولسنا مقرين لابي بكر الاستعلان. قالت عايشة فاتى ابن الدغنة الى ابي بكر فقال قد علمت الذي عاقدت لك عليه، فاما ان تقتصر على ذلك، واما ان ترجع الى ذمتي، فاني لا احب ان تسمع العرب اني اخفرت في رجل عقدت له. فقال ابو بكر فاني ارد اليك جوارك وارضى بجوار الله عز وجل. والنبي صلى الله عليه وسلم يوميذ بمكة، فقال النبي صلى الله عليه وسلم للمسلمين " اني اريت دار هجرتكم ذات نخل بين لابتين ". وهما الحرتان، فهاجر من هاجر قبل المدينة، ورجع عامة من كان هاجر بارض الحبشة الى المدينة، وتجهز ابو بكر قبل المدينة، فقال له رسول الله صلى الله عليه وسلم " على رسلك، فاني ارجو ان يوذن لي ". فقال ابو بكر وهل ترجو ذلك بابي انت قال " نعم ". فحبس ابو بكر نفسه على رسول الله صلى الله عليه وسلم ليصحبه، وعلف راحلتين كانتا عنده ورق السمر وهو الخبط اربعة اشهر. قال ابن شهاب قال عروة قالت عايشة فبينما نحن يوما جلوس في بيت ابي بكر في نحر الظهيرة قال قايل لابي بكر هذا رسول الله صلى الله عليه وسلم متقنعا في ساعة لم يكن ياتينا فيها فقال ابو بكر فداء له ابي وامي، والله ما جاء به في هذه الساعة الا امر. قالت فجاء رسول الله صلى الله عليه وسلم فاستاذن، فاذن له فدخل، فقال النبي صلى الله عليه وسلم لابي بكر " اخرج من عندك ". فقال ابو بكر انما هم اهلك بابي انت يا رسول الله. قال " فاني قد اذن لي في الخروج ". فقال ابو بكر الصحابة بابي انت يا رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم " نعم ". قال ابو بكر فخذ بابي انت يا رسول الله احدى راحلتى هاتين. قال رسول الله صلى الله عليه وسلم " بالثمن ". قالت عايشة فجهزناهما احث الجهاز، وصنعنا لهما سفرة في جراب، فقطعت اسماء بنت ابي بكر قطعة من نطاقها فربطت به على فم الجراب، فبذلك سميت ذات النطاق قالت ثم لحق رسول الله صلى الله عليه وسلم وابو بكر بغار في جبل ثور فكمنا فيه ثلاث ليال، يبيت عندهما عبد الله بن ابي بكر وهو غلام شاب ثقف لقن، فيدلج من عندهما بسحر، فيصبح مع قريش بمكة كبايت، فلا يسمع امرا يكتادان به الا وعاه، حتى ياتيهما بخبر ذلك حين يختلط الظلام، ويرعى عليهما عامر بن فهيرة مولى ابي بكر منحة من غنم، فيريحها عليهما حين يذهب ساعة من العشاء، فيبيتان في رسل وهو لبن منحتهما ورضيفهما، حتى ينعق بها عامر بن فهيرة بغلس، يفعل ذلك في كل ليلة من تلك الليالي الثلاث، واستاجر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رجلا من بني الديل، وهو من بني عبد بن عدي هاديا خريتا والخريت الماهر بالهداية قد غمس حلفا في ال العاص بن وايل السهمي، وهو على دين كفار قريش فامناه، فدفعا اليه راحلتيهما، وواعداه غار ثور بعد ثلاث ليال براحلتيهما صبح ثلاث، وانطلق معهما عامر بن فهيرة والدليل فاخذ بهم طريق السواحل
قال ابن شهاب واخبرني عبد الرحمن بن مالك المدلجي وهو ابن اخي سراقة بن مالك بن جعشم ان اباه، اخبره انه، سمع سراقة بن جعشم، يقول جاءنا رسل كفار قريش يجعلون في رسول الله صلى الله عليه وسلم وابي بكر دية كل واحد منهما، من قتله او اسره، فبينما انا جالس في مجلس من مجالس قومي بني مدلج اقبل رجل منهم حتى قام علينا ونحن جلوس، فقال يا سراقة، اني قد رايت انفا اسودة بالساحل اراها محمدا واصحابه. قال سراقة فعرفت انهم هم، فقلت له انهم ليسوا بهم، ولكنك رايت فلانا وفلانا انطلقوا باعيننا. ثم لبثت في المجلس ساعة، ثم قمت فدخلت فامرت جاريتي ان تخرج بفرسي وهى من وراء اكمة فتحبسها على، واخذت رمحي، فخرجت به من ظهر البيت، فحططت بزجه الارض، وخفضت عاليه حتى اتيت فرسي فركبتها، فرفعتها تقرب بي حتى دنوت منهم، فعثرت بي فرسي، فخررت عنها فقمت، فاهويت يدي الى كنانتي فاستخرجت منها الازلام، فاستقسمت بها اضرهم ام لا فخرج الذي اكره، فركبت فرسي، وعصيت الازلام، تقرب بي حتى اذا سمعت قراءة رسول الله صلى الله عليه وسلم وهو لا يلتفت، وابو بكر يكثر الالتفات ساخت يدا فرسي في الارض حتى بلغتا الركبتين، فخررت عنها ثم زجرتها فنهضت، فلم تكد تخرج يديها، فلما استوت قايمة، اذا لاثر يديها عثان ساطع في السماء مثل الدخان، فاستقسمت بالازلام، فخرج الذي اكره، فناديتهم بالامان فوقفوا، فركبت فرسي حتى جيتهم، ووقع في نفسي حين لقيت ما لقيت من الحبس عنهم ان سيظهر امر رسول الله صلى الله عليه وسلم فقلت له ان قومك قد جعلوا فيك الدية. واخبرتهم اخبار ما يريد الناس بهم، وعرضت عليهم الزاد والمتاع، فلم يرزاني ولم يسالاني الا ان قال اخف عنا. فسالته ان يكتب لي كتاب امن، فامر عامر بن فهيرة، فكتب في رقعة من اديم، ثم مضى رسول الله صلى الله عليه وسلم. قال ابن شهاب فاخبرني عروة بن الزبير ان رسول الله صلى الله عليه وسلم لقي الزبير في ركب من المسلمين كانوا تجارا قافلين من الشام، فكسا الزبير رسول الله صلى الله عليه وسلم وابا بكر ثياب بياض، وسمع المسلمون بالمدينة مخرج رسول الله صلى الله عليه وسلم من مكة، فكانوا يغدون كل غداة الى الحرة فينتظرونه، حتى يردهم حر الظهيرة، فانقلبوا يوما بعد ما اطالوا انتظارهم، فلما اووا الى بيوتهم، اوفى رجل من يهود على اطم من اطامهم لامر ينظر اليه، فبصر برسول الله صلى الله عليه وسلم واصحابه مبيضين يزول بهم السراب، فلم يملك اليهودي ان قال باعلى صوته يا معاشر العرب هذا جدكم الذي تنتظرون. فثار المسلمون الى السلاح، فتلقوا رسول الله صلى الله عليه وسلم بظهر الحرة، فعدل بهم ذات اليمين حتى نزل بهم في بني عمرو بن عوف، وذلك يوم الاثنين من شهر ربيع الاول، فقام ابو بكر للناس، وجلس رسول الله صلى الله عليه وسلم صامتا، فطفق من جاء من الانصار ممن لم ير رسول الله صلى الله عليه وسلم يحيي ابا بكر، حتى اصابت الشمس رسول الله صلى الله عليه وسلم فاقبل ابو بكر حتى ظلل عليه بردايه، فعرف الناس رسول الله صلى الله عليه وسلم عند ذلك، فلبث رسول الله صلى الله عليه وسلم في بني عمرو بن عوف بضع عشرة ليلة واسس المسجد الذي اسس على التقوى، وصلى فيه رسول الله صلى الله عليه وسلم، ثم ركب راحلته فسار يمشي معه الناس حتى بركت عند مسجد الرسول صلى الله عليه وسلم بالمدينة، وهو يصلي فيه يوميذ رجال من المسلمين، وكان مربدا للتمر لسهيل وسهل غلامين يتيمين في حجر اسعد بن زرارة، فقال رسول الله صلى الله عليه وسلم حين بركت به راحلته " هذا ان شاء الله المنزل ". ثم دعا رسول الله صلى الله عليه وسلم الغلامين، فساومهما بالمربد ليتخذه مسجدا، فقالا لا بل نهبه لك يا رسول الله، ثم بناه مسجدا، وطفق رسول الله صلى الله عليه وسلم ينقل معهم اللبن في بنيانه، ويقول وهو ينقل اللبن " هذا الحمال لا حمال خيبر هذا ابر ربنا واطهر ". ويقول " اللهم ان الاجر اجر الاخره فارحم الانصار والمهاجره ". فتمثل بشعر رجل من المسلمين لم يسم لي. قال ابن شهاب ولم يبلغنا في الاحاديث ان رسول الله صلى الله عليه وسلم تمثل ببيت شعر تام غير هذه الايات
حدثني محمد، حدثنا عبد الصمد، حدثنا ابي، حدثنا عبد العزيز بن صهيب، حدثنا انس بن مالك رضى الله عنه قال اقبل نبي الله صلى الله عليه وسلم الى المدينة وهو مردف ابا بكر، وابو بكر شيخ يعرف، ونبي الله صلى الله عليه وسلم شاب لا يعرف، قال فيلقى الرجل ابا بكر فيقول يا ابا بكر، من هذا الرجل الذي بين يديك فيقول هذا الرجل يهديني السبيل. قال فيحسب الحاسب انه انما يعني الطريق، وانما يعني سبيل الخير، فالتفت ابو بكر، فاذا هو بفارس قد لحقهم، فقال يا رسول الله، هذا فارس قد لحق بنا. فالتفت نبي الله صلى الله عليه وسلم فقال " اللهم اصرعه ". فصرعه الفرس، ثم قامت تحمحم فقال يا نبي الله مرني بما شيت. قال " فقف مكانك، لا تتركن احدا يلحق بنا ". قال فكان اول النهار جاهدا على نبي الله صلى الله عليه وسلم، وكان اخر النهار مسلحة له، فنزل رسول الله صلى الله عليه وسلم جانب الحرة، ثم بعث الى الانصار، فجاءوا الى نبي الله صلى الله عليه وسلم فسلموا عليهما، وقالوا اركبا امنين مطاعين. فركب نبي الله صلى الله عليه وسلم وابو بكر، وحفوا دونهما بالسلاح، فقيل في المدينة جاء نبي الله، جاء نبي الله صلى الله عليه وسلم. فاشرفوا ينظرون ويقولون جاء نبي الله، جاء نبي الله. فاقبل يسير حتى نزل جانب دار ابي ايوب، فانه ليحدث اهله، اذ سمع به عبد الله بن سلام وهو في نخل لاهله يخترف لهم، فعجل ان يضع الذي يخترف لهم فيها، فجاء وهى معه، فسمع من نبي الله صلى الله عليه وسلم ثم رجع الى اهله، فقال نبي الله صلى الله عليه وسلم " اى بيوت اهلنا اقرب ". فقال ابو ايوب انا يا نبي الله، هذه داري، وهذا بابي. قال " فانطلق فهيي لنا مقيلا ". قال قوما على بركة الله. فلما جاء نبي الله صلى الله عليه وسلم جاء عبد الله بن سلام فقال اشهد انك رسول الله، وانك جيت بحق، وقد علمت يهود اني سيدهم وابن سيدهم، واعلمهم وابن اعلمهم، فادعهم فاسالهم عني قبل ان يعلموا اني قد اسلمت، فانهم ان يعلموا اني قد اسلمت قالوا في ما ليس في. فارسل نبي الله صلى الله عليه وسلم فاقبلوا فدخلوا عليه. فقال لهم رسول الله صلى الله عليه وسلم " يا معشر اليهود، ويلكم اتقوا الله، فوالله الذي لا اله الا هو انكم لتعلمون اني رسول الله حقا، واني جيتكم بحق فاسلموا ". قالوا ما نعلمه. قالوا للنبي صلى الله عليه وسلم قالها ثلاث مرار. قال " فاى رجل فيكم عبد الله بن سلام ". قالوا ذاك سيدنا وابن سيدنا، واعلمنا وابن اعلمنا. قال " افرايتم ان اسلم ". قالوا حاشا لله، ما كان ليسلم. قال " افرايتم ان اسلم ". قالوا حاشا لله، ما كان ليسلم. قال " يا ابن سلام، اخرج عليهم ". فخرج فقال يا معشر اليهود، اتقوا الله، فوالله الذي لا اله الا هو انكم لتعلمون انه رسول الله، وانه جاء بحق. فقالوا كذبت. فاخرجهم رسول الله صلى الله عليه وسلم