ஹதீஸ்கள்
#3914
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் பின் உமைர் (ரலி) அத்தகையவர்களில் ஒருவர்தான். அவர் உஹுத் போரின்போது கொல்லப்பட்டார். அவரை கஃபனிடு வதற்கு (அவரது) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியால் நாங்கள் அவரது தலையை மூடியபோது அவருடைய கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின; அவருடைய கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரது தலை வெளியே தெரியலாயிற்று. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரது தலையை மூடிவிடும்படியும் அவருடைய கால்கள் இரண்டின்மீதும் “இத்கிர்' புல்லைச் சிறிது போட்டு (மறைத்து)விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து(சுவைத்து)க்கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்.163 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3914
- Book Index
- 139
Grades
- -