ஹதீஸ்கள்
#3901
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள், “இறைவா! உன் பாதையில் யாரை எதிர்த்துப் போர் புரிய நான் மிகவும் விரும்புகின்றேனோ அவர்கள் உன் தூதரை நம்ப மறுத்து அவர்களை (மக்கா விலிருந்து) வெளியேற்றிய சமுதாயத்தார் தான் என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் அவர்களுக்குமிடையிலான போரை நீ முடித்து வைத்துவிட்டாய் என நான் எண்ணுகிறேன்” என்று (தம் மரணத் தறுவாயில்) கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவே வரும் மற்றோர் அறிவிப்பில், “உன் னுடைய நபியை நம்ப மறுத்து அவர்களை வெளியேற்றிய குறைஷிச் சமுதாயத்தார் தான்” என்று (சிறிய வித்தியாசத்துடன்) சஅத் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3901
- Book Index
- 126
Grades
- -