ஹதீஸ்கள்
#3904
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது) சொற்பொழிவு மேடை மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார் கள். அதில்,) “அல்லாஹ், தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவ(து எதுவாயினும் அ)தைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெருவாழ்வு)தனை எடுத்துக் கொள்ளும்படியும் (இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள) வாய்ப்பளித்தான். அப்போது அந்த அடியார் அல்லாஹ் விடமிருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். மேலும் (நபியவர்களை நோக்கி), “தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்” என்று சொன்னார்கள். நாங்கள் அபூபக் ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம். மக்கள், “இந்த முதியவரைப் பாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவதைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமிருப் பதை எடுத்துக்கொள்ளும்படியும் இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கிய (மகிழ்ச்சியான விஷயத்)தைத் தெரிவித்துக்கொண்டிருக்க இவர், “தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்' என்று (அழுதபடி) கூறுகிறாரே” என்று சொன்னார்கள் -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார்- அபூபக்ர் (ரலி) அவர்கள்தான் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம் தோழமையாலும் தம் செல்வத்தாலும் எனக்குப் பேருபகாரம் புரிந்தவர் அபூபக்ர் அவர்கள்தான். என் சமுதாயத்தாரிóருந்து எவரையேனும் என் உற்ற நண்பராக நான் ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக் ரையே ஆக்கிக்கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாத்தின் (காரணத்தால் உள்ள) நட்பே (சிறந்ததாகும்;) போதுமான தாகும். (எனது இந்தப்) பள்ளிவாசலில் உள்ள வாசல்களில் அபூபக்ரின் வாசல் தவிர மற்றவை கண்டிப்பாக நீடிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.151 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3904
- Book Index
- 129
Grades
- -