Loading...

Loading...
நூல்கள்
௧௭௩ ஹதீஸ்கள்
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து மக்காவிலிருந்து) வெளியேறிய செய்தி எங்களுக்கு எட்டியது. உடனே நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணம் புறப்பட்டோம். எங்கள் கப்பல் (திசைமாறி) எங்களை அபிசீனியாவில் மன்னர் நஜாஷீ அவர்களிடம் கொண்டு(போய் இறக்கிவிட்டுச்) சென்றுவிட்டது. நாங்கள் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை(த் தற்செயலாக அங்கே) சந்தித்தோம். நாங்கள் அங்கிருந்து வரும்வரை ஜஅஃபர் (ரலி) அவர்களுடனேயே தங்கினோம். கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டிருந்த வேளையில் சென்று அவர்களை அடைந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் (எங்களை நோக்கி), “கப்பல்காரர்களே! உங்களுக்குத்தான் இரண்டு ஹிஜ்ரத்கள்” என்று சொன்னார்கள்.122 அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، حدثنا ابو اسامة، حدثنا بريد بن عبد الله، عن ابي بردة، عن ابي موسى رضى الله عنه بلغنا مخرج النبي صلى الله عليه وسلم ونحن باليمن فركبنا سفينة فالقتنا سفينتنا الى النجاشي بالحبشة، فوافقنا جعفر بن ابي طالب، فاقمنا معه حتى قدمنا، فوافقنا النبي صلى الله عليه وسلم حين افتتح خيبر، فقال النبي صلى الله عليه وسلم " لكم انتم يا اهل السفينة هجرتان
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (மன்னர்) நஜாஷீ இறந்தபோது நபி (ஸல்) அவர்கள், “இன்று (ஒரு) நல்ல மனிதர் இறந்துவிட்டார். ஆகவே, எழுந்து நின்று உங்கள் சகோதரர் “அஸ்ஹமா'வுக்காக (ஃகாயிப் ஜனாஸா தொழுகை) தொழுங் கள்” என்று சொன்னார்கள்.124 அத்தியாயம் :
حدثنا ابو الربيع، حدثنا ابن عيينة، عن ابن جريج، عن عطاء، عن جابر رضى الله عنه قال النبي صلى الله عليه وسلم حين مات النجاشي " مات اليوم رجل صالح، فقوموا فصلوا على اخيكم اصحمة
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ (இறந்துவிட்டபோது) அவருக்காக (ஃகாயிப் ஜனாஸா) தொழுகை தொழுதார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னே வரிசையாக நின்றுகொண்டோம். நான் இரண்டாவது வரிசையில், அல்லது மூன்றாவது வரிசையில் இருந்தேன்.125 அத்தியாயம் :
حدثنا عبد الاعلى بن حماد، حدثنا يزيد بن زريع، حدثنا سعيد، حدثنا قتادة، ان عطاء، حدثهم عن جابر بن عبد الله الانصاري رضى الله عنهما ان نبي الله صلى الله عليه وسلم صلى على النجاشي فصفنا وراءه فكنت في الصف الثاني او الثالث
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “அஸ்ஹமா' அந் நஜாஷீக்காக (ஃகாயிப்) ஜனாஸா தொழுகை தொழுதார்கள். அப்போது அவர்மீதான தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறினார்கள்.126 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني عبد الله بن ابي شيبة، حدثنا يزيد، عن سليم بن حيان، حدثنا سعيد بن ميناء، عن جابر بن عبد الله رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم صلى على اصحمة النجاشي، فكبر عليه اربعا. تابعه عبد الصمد
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபிசீனியாவின் அதிபர் நஜாஷீ அவர்கள் இறந்துவிட்ட செய்தியை அவர் இறந்த நாளன்றே எங்களுக்கு அறிவித்தார்கள். மேலும், “உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا زهير بن حرب، حدثنا يعقوب بن ابراهيم، حدثنا ابي، عن صالح، عن ابن شهاب، قال حدثني ابو سلمة بن عبد الرحمن، وابن المسيب، ان ابا هريرة رضى الله عنه اخبرهما ان رسول الله صلى الله عليه وسلم نعى لهم النجاشي صاحب الحبشة في اليوم الذي مات فيه، وقال " استغفروا لاخيكم
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை (ஜனாஸா தொழுகை) தொழு மிடத்தில் வரிசையாக நிற்கவைத்துநஜாஷீக்காக ஜனாஸா தொழுகை தொழு (வித்)தார்கள்; (அதில்) நான்கு தக்பீர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
وعن صالح، عن ابن شهاب، قال حدثني سعيد بن المسيب، ان ابا هريرة رضى الله عنه اخبرهم ان رسول الله صلى الله عليه وسلم صف بهم في المصلى، فصلى عليه وكبر اربعا
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போருக்குச் செல்ல விரும்பிய போது, “நாளை நாம் (போருக்காக) முகாமிடப்போகும் இடம் - இறைவன் நாடினால் - “பனூ கினானா' குலத்தாரின் (முஹஸ்ஸப்) பள்ளத்தாக்காகும். அது அவர்கள், “நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்” என்று சூளுரைத்த இடமாகும் என்று கூறினார்கள்.128 அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، قال حدثني ابراهيم بن سعد، عن ابن شهاب، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حين اراد حنينا " منزلنا غدا ان شاء الله بخيف بني كنانة، حيث تقاسموا على الكفر
அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம், “உங்கள் தந்தையின் சகோதரருக்கு (அபூதாலிபுக்கு, அவர் செய்த உதவிகளுக் குக் கைமாறாக) நீங்கள் என்ன பயனை அளித்தீர்கள்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக, அவர் உங்களை (எதிரி களின் தாக்குதலிலிருந்து) பாதுகாப்ப வராகவும், உங்களுக்காக (உங்கள் எதிரிகளிடம்) கோபப்படுபவராகவும் இருந்தாரே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பில்தான் இருக்கிறார். நான் மட்டும் இல்லையென்றால் அவர் நரகத்தின் அடித்தட்டில் இருந்திருப்பார்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن سفيان، حدثنا عبد الملك، حدثنا عبد الله بن الحارث، حدثنا العباس بن عبد المطلب رضى الله عنه قال للنبي صلى الله عليه وسلم ما اغنيت عن عمك فانه كان يحوطك ويغضب لك. قال " هو في ضحضاح من نار، ولولا انا لكان في الدرك الاسفل من النار
முசய்யப் பின் ஹஸ்ன் பின் அபீவஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்துவிட்டபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், “என் தந்தையின் சகோதரரே! “லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை)வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும், “அபூதாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், “(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)” என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; (அவ்விதம் பாவமன்னிப்புக் கோரக் கூடாது என்று) எனக்குத் தடை விதிக்கப்படும்வரை” என்று சொன்னார்கள். அப்போதுதான், “இணைவைப்பாளர் கள் நரகவாசிகள்தான் என்பது தெளிவாகி விட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன் னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர் களாயிருந்தாலும்கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை யில்லை” எனும் (9:113) குர்ஆன் வசனமும், “(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்க ளால் நல்வழியில் செலுத்திவிட முடியாது” எனும் (28:56) குர்ஆன் வசனமும் அருளப் பெற்றன.130 அத்தியாயம் :
حدثنا محمود، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن ابن المسيب، عن ابيه، ان ابا طالب، لما حضرته الوفاة دخل عليه النبي صلى الله عليه وسلم وعنده ابو جهل فقال " اى عم، قل لا اله الا الله. كلمة احاج لك بها عند الله ". فقال ابو جهل وعبد الله بن ابي امية يا ابا طالب، ترغب عن ملة عبد المطلب فلم يزالا يكلمانه حتى قال اخر شىء كلمهم به على ملة عبد المطلب. فقال النبي صلى الله عليه وسلم " لاستغفرن لك ما لم انه عنه ". فنزلت {ما كان للنبي والذين امنوا ان يستغفروا للمشركين ولو كانوا اولي قربى من بعد ما تبين لهم انهم اصحاب الجحيم} ونزلت {انك لا تهدي من احببت}
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டபோது அவர்கள், “அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக்கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள்வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவருடைய மூளை (தகித்துக்) கொதிக்கும்” என்று சொல்ல நான் கேட்டேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “அவரது மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதித்துக்கொண்டிருக்கும்” என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، حدثنا ابن الهاد، عن عبد الله بن خباب، عن ابي سعيد الخدري رضى الله عنه انه سمع النبي صلى الله عليه وسلم وذكر عنده عمه فقال " لعله تنفعه شفاعتي يوم القيامة، فيجعل في ضحضاح من النار، يبلغ كعبيه، يغلي منه دماغه ". حدثنا ابراهيم بن حمزة حدثنا ابن ابي حازم والدراوردي عن يزيد بهذا، وقال تغلي منه ام دماغه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ்வரை சென்றதாகச் சொன்ன சமயம்) என்னை குறைஷியர் நம்ப மறுத்தபோது நான் கஅபாவின் “ஹிஜ்ர்' என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்த படியே நான் அவர்களுக்கு அதன் அடை யாளங்களை விவரிக்கலானேன்.132 இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، حدثني ابو سلمة بن عبد الرحمن، سمعت جابر بن عبد الله رضى الله عنهما انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " لما كذبني قريش قمت في الحجر، فجلا الله لي بيت المقدس، فطفقت اخبرهم عن اياته وانا انظر اليه
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (இறையில்லம் கஅபா அருகில்) “ஹத்தீமில்' அல்லது “ஹிஜ்ரில்' படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார். -அறிவிப்பாளர்களில் ஒருவரான அனஸ் (ரலி) அவர்கள், “இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறி னார்கள். அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் என்னருகில் இருந்த (அனஸ் (ரலி) அவர்களின் நண்பர்) ஜாரூத் (ரஹ்) அவர்களிடம், “அனஸ் (ரலி) அவர்கள், இங்கிருந்து இதுவரையில்... என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஜாரூத் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் “நெஞ்சின் காறையெலும்பிலிருந்து அடிவயிறுவரை' அல்லது “நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறுவரை' என்ற கருத்தில் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.- பிறகு அ(ந்த வான)வர் (ஜிப்ரீல்) எனது இதயத்தை வெளியில் எடுத்தார். பிறகு, இறைநம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டுவரப் பட்டு, எனது இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறைநம்பிக்கை நிரப்பப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (எனது இதயம், மூடி)வைக்கப்பட்டது. பிறகு கோவேறுக் கழுதையைவிடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்தில் அமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டுவரப்பட்டது. -(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ் (ரலி) அவர்களிடம் ஜாரூத் (ரஹ்) அவர்கள், “அது புராக் எனும் வாகனம்தானே, அபூஹம்ஸா அவர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “ஆம், (அது புராக்தான்.) அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்” என்று கூறினார்கள்.- பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வானத் திற்கு அழைத்துச்சென்று அதன் கதவைத் திறக்கும்படி கூறினார். அப்போது, “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்' என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரச்சொல்லி) அவரிடம் ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்' என்றார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. அப்போது (அந்த வானத்தின் காவலர்) கதவைத் திறந்தார். நான் அங்கு சென்றடைந்தபோது அங்கு (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் இருந்தார்கள். (என்னிடம் ஜிப்ரீல்) “இவர்கள் உங்கள் தந்தை ஆதம். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று கூறினார். அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, ஆதம் (அலை) அவர்கள், “(என்) நல்ல மகனும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்று சொன்னார்கள். பிறகு (என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல்) இரண்டாம் வானத்தில் ஏறி அதைத் திறக்கும்படி சொன்னார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளிக்க, “உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று வினவப்பட்டது. (அதற்கு) அவர், “முஹம்மத்' என்று பதிலளித்தார், “(அவரை அழைத்து வரும் படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்' என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் காவலர் கதவைத்) திறந்தார். நான் அங்கு சென்றடைந்த போது, அங்கு யஹ்யா (அலை) அவர்களும், ஈசா (அலை) அவர்களும் இருந்தனர். -அவ்விருவரும் சிற்றன்னையின் மக்களாவர்.-134 இது யஹ்யா அவர்களும், ஈசா அவர்களும் ஆவர். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் (அவர்கள் இருவருக்கும்) சலாம் சொன்னபோது அவர்கள் சலாமிற்குப் பதில் கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும், “நல்ல சகோதரரும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினர். பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு மூன்றாம் வானத்திற்கு ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். “யார் அது?” என்று கேட்கப் பட்டது. அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளித் தார். “உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மத்' என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டி ருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்' என்று பதிலளித்தார். “அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்த போது அங்கு யூசுஃப் (அலை) அவர்கள் இருந்தார்கள். “இவர்கள்தான் (இறைத்தூதர்) யூசுஃப். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்களும் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, “நல்ல சகோதரரும் நல்ல இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் நான்காம் வானத்திற்கு ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்குமாறு சொன்னார். “யார் அது” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மத்' என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று வினவப்பட்ட போது, “ஆம்' என்று அவர் பதிலுரைத்தார். “அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (எனக்கு வாழ்த்துச்) சொல்லப்பட்டு(க் கதவும்) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்தபோது அங்கு இத்ரீஸ் (அலை) அவர்கள் இருந்தார்கள். “இவர்கள்தான் இத்ரீஸ் (அலை) அவர்கள். இவர்களுக்கு சலாம் கூறுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்களும் எனக்குப் பதில் சலாம் கூறினார்கள். பிறகு, “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்தும்) சொன்னார்கள். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் ஐந்தாம் வானத்திற்கு வந்து சேர்ந்து அதைத் திறக்கும்படி சொன்னார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். “உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று வினவப்பட்டது. அவர், “முஹம்மத்' என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்' என்றார். “அவர் வரவு நல்வரவாகட்டும். அவர் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. நான் அங்கு சென்றடைந்தபோது ஹாரூன் (அலை) அவர்கள் அங்கிருந் தார்கள். “இவர்கள்தான் ஹாரூன். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் சொன்னார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு அவர்கள், “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் “ என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு என்னுடன் அவர் ஆறாம் வானத்திற்கு ஏறினார். (அதன் கதவைத்) திறக்கும்படி கூறினார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். “உங்களுடன் யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மத்' என்றார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்' என்றார். (அந்த வானத்தின் காவலர்,) “அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொன்னார். அங்கு நான் சென்றடைந்தபோது மூசா (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். “இவர்கள்தான் மூசா. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன் னார்கள். பிறகு, “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வர வாகட்டும்” என்று (வாழ்த்துச்) சொன்னார் கள். நான் (மூசா (அலை) அவர்களைக்) கடந்து சென்றபோது அவர்கள் அழுதார் கள். “தங்கள் அழுகைக்கு என்ன காரணம்?” என்று அவர்களிடம் கேட்கப் பட்டது. அவர்கள், “என் சமுதாயத்தாரில் சொர்க்கம் புகுபவர்களைவிட அதிகமான வர்கள், எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால்தான் அழுகிறேன்” என்று பதிலளித்தார்கள். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் ஏழாவது வானத்திற்கு ஏறினார். (அதன் கதவைத்) திறக்கும்படி ஜிப்ரீல் கூறினார். “யார் அது?' என்று கேட்கப்பட் டது. அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று வினவப்பட்டபோது அவர், “முஹம்மத்' என்று பதில் சொன்னார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்' என்றார். (அந்த வானத்தின் காவலர்,) “அவரது வரவு நல்வரவாகட்டும், அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொன்னார். நான் அங்கு சென்றடைந்தபோது, இப்ராஹீம் (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். “இவர்கள்தான் உங்கள் தந்தை. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்குப்) பதில் சலாம் உரைத்தார்கள். அவர்கள், “நல்ல மகனும், நல்ல இறைத்தூதருமான இவரது வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்துச் சொன்னார்கள். பிறகு, (வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) “சித்ரத்துல்முன்(த்)தஹா' எனும் இடத்திற்கு நான் கொண்டுசெல்லப்பட்டேன். அதன் (இலந்தைப்) பழங்கள் (யமனில் உள்ள) “ஹஜர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள்போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகள் போலிருந்தன. “இதுதான் சித்ரத்துல் முன்(த்)தஹா” என்று ஜிப்ரீல் (அறிமுகப்படுத்திக்) கூறினார். அங்கு (அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடிவருகின்ற) நான்கு ஆறுகள் இருந்தன. இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. “ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை?” என்று நான் கேட்டேன். அவர், “உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத் தில் உள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை)வையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நீல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். பிறகு, “அல்பைத்துல் மஅமூர்' (எனும் “வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறையில்லம்') எனக்கு (அருகே கொண்டுவந்து) காட்டப்பட்து. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் மதுவும், ஒரு பாத்திரத்தில் பாலும் இன்னொரு பாத்திரத்தில் தேனும் கொண்டுவரப்பட்டது. நான் பாலை (தேர்ந்து) எடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்.) அப்போது ஜிப்ரீல், “இதுதான் நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும்” என்று கூறினார்கள். பிறகு என்மீது ஒவ்வொரு தினத்திற்கும் ஐம்பது (வேளைத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் திரும்பிவந்தபோது மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், “உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?” என்று கேட்டார்கள். “ஒவ்வொரு நாளும் ஐம்பது (வேளைத்) தொழுகை (கட்டாயக் கடமையாக நிறைவேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது” என்று நான் பதிலளித்தேன். உங்கள் சமுதாயத்தார் ஒரு தினத்திற்கு ஐம்பது வேளைத் தொழுகையைத் தாங்கமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுக்கு முன் மக்களிடம் அனுபவப்பட்டுள்ளேன். இஸ்ரவேலர்களுடன் பழகி நன்கு பக்குவப் பட்டுள்ளேன். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் உங்கள் சமுதாயத்தாருக்காக (தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைத்துக் தரும்படி கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். (இறைவனிடம் குறைத்துத் தரும்படி கேட்டேன்) இறைவன் (ஐம்பதிலிருந்து) பத்தை எனக்குக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். முன்பு போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும் படி) சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். அப்போது (நாற்பதிலிருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போதும் முன்பு போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) கூறினார்கள். நான் (இறைவனிடம்) திரும்பிச் சென்றேன். எனக்கு (முப்பதி óருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் முன்பு போலவே (குறைத்து கேட்கும்படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். எனக்கு (இருபதிலிருந்து பத்து குறைக்கப்பட்டு) தினந்தோறும் பத்து (வேளைத்) தொழுகைகள் (தொழும்படி) உத்தரவிடப்பட்டது. நான் (மூசா (அலை) அவர்களிடம்) திரும்பி வந்தேன். அப்போதும் அவர்கள் முன்பு போலவே சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். ஒவ்வொரு நாளும் ஐந்து (வேளைத்) தொழுகைகள் (நிறைவேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது. நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது, “உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?”என்று கேட்டார்கள். ஒவ்வொரு நாளைக்கும் ஐந்து (நேரத்) தொழுகைகள் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளன” என்று சொன்னேன். “ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகைகளை உங்கள் சமுதாயத்தார் தாங்கமாட்டார்கள். உங்களுக்கு முன்பே மக்களுடன் பழகி நான் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். நான் இஸ்ர வேலர்களுடன் பழகி நன்கு பக்குவப் பட்டுள்ளேன். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று உங்கள் சமுதாயத்தாருக்காக இன்னும் குறைத்துத் தரும்படி கேளுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “(கடமையான தொழுகை களின் எண்ணிக்கையைக் குறைத்துத் தரும்படி பலமுறை இறைவனிடம்) எனக்கே வெட்கமேற்படும்வரையில் நான் கேட்டுவிட்டேன். ஆகவே, நான் திருப்தி யடைகிறேன்; (இந்த எண்ணிக்கையை) ஒப்புக்கொள்கிறேன்” என்று கூறினேன். பிறகு (அந்த இடத்தை) நான் கடந்தபோது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து), “நான் என் (ஐந்து நேரத் தொழுகை எனும்) விதியை நடைமுறைப்படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளை களிலிருந்து ஐந்து நேரமாகக் குறைத்துக் கடமையை) எளிதாக்கிவிட்டேன்” என்று ஒரு (அசரீரிக்) குரல் ஒலித்தது.135 அத்தியாயம் :
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(நபியே! இப்போது) நாம் உங்களுக்குக் காட்டிய (அந்த இரவுக்) காட்சியையும், குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரத்தையும் (இந்த) மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்” என்ற (17:60) இறைவசனத்திற்கு விளக்கம் அளித்தபோது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திசுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களுக்குக் காட்டப்பட்ட காட்சிகளைக் குறிக்கும். குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரம் என்பது “ஸக்கூம்' என்னும் (நரகத்திலுள்ள கள்ளிச்) செடியைக் குறிக்கும்” என்று சொன்னார்கள்.136 அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا عمرو، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما في قوله تعالى {وما جعلنا الرويا التي اريناك الا فتنة للناس} قال هي رويا عين، اريها رسول الله صلى الله عليه وسلم ليلة اسري به الى بيت المقدس. قال والشجرة الملعونة في القران قال هي شجرة الزقوم
அப்துர் ரஹ்மான் பின் அப்தில் லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (முதுமையடைந்து) கண்பார்வையிழந்து விட்டபோது அவர்களைக் கரம் பிடித்து அழைத்துச் செல்பவர்களாயிருந்த (அவர்களின் மகனும் என் தந்தையுமான) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: என் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள், தபூக் போரின்போது, நபி (ஸல்) அவர்களுடன் செல்லாமல் (அசிரத்தை காரணமாக) தாம் பின்தங்கிவிட்ட வேளை குறித்து என்னிடம் பேசியதை நான் செவியுற்றேன்... என்று கூறிவிட்டு முழு ஹதீஸையும் சொன்னார்கள்.138 இப்னு புகைர் (ரஹ்) அவர்கள் உகைல் (ரஹ்) வாயிலாக அறிவிக்கும் அறிவிப்பில், கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுவதாக அறிவிக்கிறார்கள்: “அல்அகபா' (எனுமிடத்தில் உறுதி மொழி அளித்த நிகழ்ச்சி நடந்த) இரவில் இஸ்லாத்தை ஏற்பதாக (மதீனாவாசிகளான) நாங்கள் பிரமாணம் செய்த வேளையில் நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். இதற்குப் பதிலாகப் பத்ர் போரில் கலந்து (கொள்கின்ற வாய்ப்பைப் பெற்றுக்) கொள்ளுதல் எனக்கு இருந்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; “அல்அகபா' பிரமாணத்தைவிட “பத்ர்' மக்களிடையே பெயர் பெற்றதாக இருந் தாலும் சரியே! அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، حدثنا احمد بن صالح، حدثنا عنبسة، حدثنا يونس، عن ابن شهاب، قال اخبرني عبد الرحمن بن عبد الله بن كعب بن مالك، ان عبد الله بن كعب وكان قايد كعب حين عمي قال سمعت كعب بن مالك يحدث حين تخلف عن النبي صلى الله عليه وسلم في غزوة تبوك. بطوله، قال ابن بكير في حديثه ولقد شهدت مع النبي صلى الله عليه وسلم ليلة العقبة حين تواثقنا على الاسلام، وما احب ان لي بها مشهد بدر وان كانت بدر، اذكر في الناس منها
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் இரு மாமன்மார்களும் அல்அகபா உடன்படிக்கையில் கலந்துகொண்டனர். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், “அந்த இருவரில் ஒருவர் பராஉ பின் மஅரூர் (ரலி) அவர்களாவார்”139 என்று சொன்னார் என அபூஅப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال كان عمرو يقول سمعت جابر بن عبد الله رضى الله عنهما يقول شهد بي خالاى العقبة. قال ابو عبد الله قال ابن عيينة احدهما البراء بن معرور
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்அகபா உடன்படிக்கையில் கலந்துகொண்டவர்களில் நானும், என் தந்தையும், என் இரு தாய்மாமன்மார்களும் அடங்குவோம். அத்தியாயம் :
حدثني ابراهيم بن موسى، اخبرنا هشام، ان ابن جريج، اخبرهم قال عطاء قال جابر انا وابي، وخالي، من اصحاب العقبة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்து கொண்டவரும், இரவில் நடந்த “அல்அகபா' உடன்பாட்டில் கலந்துகொண்ட நபித் தோழர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்அகபா இரவில்) தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வாருங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்க மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், உங்கள் தரப்பிலிருந்து நீங்களே இட்டுக்கட்டும் அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எனக்கு நல்ல விஷயங்களில் மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள். உங்களில் எவர் (இந்த உறுதிமொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்சொன்ன குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்தி லேயே (இஸ்லாமியச் சட்டப்படி) தண்டிக் கப்பட்டுவிட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். இவற்றில் எதையேனும் ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்து விட்டால் (அவரது மறுமை நிலை குறித்த) அவரது விவகாரம் அல்லாஹ்விடம் உண்டு. (மறுமையில்) அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்று சொன்னார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அவற்றுக்காக உறுதிமொழி கொடுத்தோம்.140 அத்தியாயம் :
حدثني اسحاق بن منصور، اخبرنا يعقوب بن ابراهيم، حدثنا ابن اخي ابن شهاب، عن عمه، قال اخبرني ابو ادريس، عايذ الله ان عبادة بن الصامت من الذين شهدوا بدرا مع رسول الله صلى الله عليه وسلم ومن اصحابه ليلة العقبة اخبره ان رسول الله صلى الله عليه وسلم قال وحوله عصابة من اصحابه " تعالوا بايعوني على ان لا تشركوا بالله شييا، ولا تسرقوا، ولا تزنوا، ولا تقتلوا اولادكم، ولا تاتون ببهتان تفترونه بين ايديكم وارجلكم، ولا تعصوني في معروف، فمن وفى منكم فاجره على الله، ومن اصاب من ذلك شييا فعوقب به في الدنيا فهو له كفارة، ومن اصاب من ذلك شييا فستره الله فامره الى الله، ان شاء عاقبه، وان شاء عفا عنه ". قال فبايعته على ذلك
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம் என்றும், திருடமாட்டோம் என்றும், விபசாரம் புரியமாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்குச்) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக்கொள்ளமாட்டோம்; (இறைவ னிடமே ஒப்படைத்துவிடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்துவிட்டால் அதன் தீர்ப்பு அல்லாஹ் விடமே உண்டு என்றும் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்தோம். அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن ابي الخير، عن الصنابحي، عن عبادة بن الصامت رضى الله عنه انه قال اني من النقباء الذين بايعوا رسول الله صلى الله عليه وسلم. وقال بايعناه على ان لا نشرك بالله شييا، ولا نسرق، ولا نزني، ولا نقتل النفس التي حرم الله، ولا ننتهب، ولا نعصي بالجنة ان فعلنا ذلك، فان غشينا من ذلك شييا كان قضاء ذلك الى الله
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்குக் காய்ச்சல் கண்டுவிடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சப்தமிட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக் கத் தொடங்கவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டுசென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரி பெண்கள் இருந்தார்கள். அவர்கள், “நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண் டாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களி டம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (தாம்பத்தியத்தைத் துவங்கு வதற்காகத் தயார்படுத்தி)விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன். அத்தியாயம் :
حدثني فروة بن ابي المغراء، حدثنا علي بن مسهر، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت تزوجني النبي صلى الله عليه وسلم وانا بنت ست سنين، فقدمنا المدينة فنزلنا في بني الحارث بن خزرج، فوعكت فتمرق شعري فوفى جميمة، فاتتني امي ام رومان واني لفي ارجوحة ومعي صواحب لي، فصرخت بي فاتيتها لا ادري ما تريد بي فاخذت بيدي حتى اوقفتني على باب الدار، واني لانهج، حتى سكن بعض نفسي، ثم اخذت شييا من ماء فمسحت به وجهي وراسي ثم ادخلتني الدار فاذا نسوة من الانصار في البيت فقلن على الخير والبركة، وعلى خير طاير. فاسلمتني اليهن فاصلحن من شاني، فلم يرعني الا رسول الله صلى الله عليه وسلم ضحى، فاسلمتني اليه، وانا يوميذ بنت تسع سنين
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நான் உன்னைக் கனவில் இருமுறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண் டேன். எவரோ, “இது உங்கள் மனைவிதான்; (முக்காட்டை) நீக்கிப் பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், “இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப் பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்திவைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا معلى، حدثنا وهيب، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم قال لها " اريتك في المنام مرتين، ارى انك في سرقة من حرير ويقول هذه امراتك فاكشف عنها فاذا هي انت فاقول ان يك هذا من عند الله يمضه
حدثنا هدبة بن خالد، حدثنا همام بن يحيى، حدثنا قتادة، عن انس بن مالك، عن مالك بن صعصعة رضى الله عنهما ان نبي الله صلى الله عليه وسلم حدثهم عن ليلة اسري به " بينما انا في الحطيم وربما قال في الحجر مضطجعا، اذ اتاني ات فقد قال وسمعته يقول فشق ما بين هذه الى هذه فقلت للجارود وهو الى جنبي ما يعني به قال من ثغرة نحره الى شعرته، وسمعته يقول من قصه الى شعرته فاستخرج قلبي، ثم اتيت بطست من ذهب مملوءة ايمانا، فغسل قلبي ثم حشي، ثم اوتيت بدابة دون البغل وفوق الحمار ابيض ". فقال له الجارود هو البراق يا ابا حمزة قال انس نعم، يضع خطوه عند اقصى طرفه " فحملت عليه، فانطلق بي جبريل حتى اتى السماء الدنيا فاستفتح، فقيل من هذا قال جبريل. قيل ومن معك قال محمد. قيل وقد ارسل اليه قال نعم. قيل مرحبا به، فنعم المجيء جاء ففتح، فلما خلصت، فاذا فيها ادم، فقال هذا ابوك ادم فسلم عليه. فسلمت عليه فرد السلام ثم قال مرحبا بالابن الصالح والنبي الصالح. ثم صعد حتى اتى السماء الثانية فاستفتح، قيل من هذا قال جبريل. قيل ومن معك قال محمد. قيل وقد ارسل اليه قال نعم. قيل مرحبا به فنعم المجيء جاء. ففتح، فلما خلصت، اذا يحيى وعيسى، وهما ابنا الخالة قال هذا يحيى وعيسى فسلم عليهما. فسلمت فردا، ثم قالا مرحبا بالاخ الصالح والنبي الصالح. ثم صعد بي الى السماء الثالثة، فاستفتح قيل من هذا قال جبريل. قيل ومن معك قال محمد. قيل وقد ارسل اليه قال نعم. قيل مرحبا به، فنعم المجيء جاء. ففتح، فلما خلصت اذا يوسف. قال هذا يوسف فسلم عليه. فسلمت عليه فرد، ثم قال مرحبا بالاخ الصالح والنبي الصالح، ثم صعد بي حتى اتى السماء الرابعة، فاستفتح، قيل من هذا قال جبريل. قيل ومن معك قال محمد. قيل اوقد ارسل اليه قال نعم. قيل مرحبا به، فنعم المجيء جاء. ففتح، فلما خلصت الى ادريس قال هذا ادريس فسلم عليه. فسلمت عليه فرد ثم قال مرحبا بالاخ الصالح والنبي الصالح. ثم صعد بي حتى اتى السماء الخامسة، فاستفتح، قيل من هذا قال جبريل. قيل ومن معك قال محمد صلى الله عليه وسلم. قيل وقد ارسل اليه قال نعم. قيل مرحبا به، فنعم المجيء جاء. فلما خلصت فاذا هارون قال هذا هارون فسلم عليه. فسلمت عليه فرد ثم قال مرحبا بالاخ الصالح والنبي الصالح. ثم صعد بي حتى اتى السماء السادسة، فاستفتح، قيل من هذا قال جبريل. قيل من معك قال محمد. قيل وقد ارسل اليه قال نعم. قال مرحبا به، فنعم المجيء جاء، فلما خلصت، فاذا موسى قال هذا موسى فسلم عليه، فسلمت عليه فرد ثم قال مرحبا بالاخ الصالح والنبي الصالح. فلما تجاوزت بكى، قيل له ما يبكيك قال ابكي لان غلاما بعث بعدي، يدخل الجنة من امته اكثر من يدخلها من امتي. ثم صعد بي الى السماء السابعة، فاستفتح جبريل، قيل من هذا قال جبريل. قيل ومن معك قال محمد. قيل وقد بعث اليه. قال نعم. قال مرحبا به، فنعم المجيء جاء فلما خلصت، فاذا ابراهيم قال هذا ابوك فسلم عليه. قال فسلمت عليه، فرد السلام قال مرحبا بالابن الصالح والنبي الصالح. ثم رفعت لي سدرة المنتهى، فاذا نبقها مثل قلال هجر، واذا ورقها مثل اذان الفيلة قال هذه سدرة المنتهى، واذا اربعة انهار نهران باطنان، ونهران ظاهران. فقلت ما هذان يا جبريل قال اما الباطنان، فنهران في الجنة، واما الظاهران فالنيل والفرات. ثم رفع لي البيت المعمور، ثم اتيت باناء من خمر، واناء من لبن واناء من عسل، فاخذت اللبن، فقال هي الفطرة انت عليها وامتك. ثم فرضت على الصلوات خمسين صلاة كل يوم. فرجعت فمررت على موسى، فقال بما امرت قال امرت بخمسين صلاة كل يوم. قال ان امتك لا تستطيع خمسين صلاة كل يوم، واني والله قد جربت الناس قبلك، وعالجت بني اسراييل اشد المعالجة، فارجع الى ربك فاساله التخفيف لامتك. فرجعت، فوضع عني عشرا، فرجعت الى موسى فقال مثله، فرجعت فوضع عني عشرا، فرجعت الى موسى فقال مثله، فرجعت فوضع عني عشرا، فرجعت الى موسى فقال مثله، فرجعت فامرت بعشر صلوات كل يوم، فرجعت فقال مثله، فرجعت فامرت بخمس صلوات كل يوم، فرجعت الى موسى، فقال بما امرت قلت امرت بخمس صلوات كل يوم. قال ان امتك لا تستطيع خمس صلوات كل يوم، واني قد جربت الناس قبلك، وعالجت بني اسراييل اشد المعالجة، فارجع الى ربك فاساله التخفيف لامتك. قال سالت ربي حتى استحييت، ولكن ارضى واسلم قال فلما جاوزت نادى مناد امضيت فريضتي وخففت عن عبادي