ஹதீஸ்கள்
#3893
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம் என்றும், திருடமாட்டோம் என்றும், விபசாரம் புரியமாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்குச்) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக்கொள்ளமாட்டோம்; (இறைவ னிடமே ஒப்படைத்துவிடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்துவிட்டால் அதன் தீர்ப்பு அல்லாஹ் விடமே உண்டு என்றும் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்தோம். அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن ابي الخير، عن الصنابحي، عن عبادة بن الصامت رضى الله عنه انه قال اني من النقباء الذين بايعوا رسول الله صلى الله عليه وسلم. وقال بايعناه على ان لا نشرك بالله شييا، ولا نسرق، ولا نزني، ولا نقتل النفس التي حرم الله، ولا ننتهب، ولا نعصي بالجنة ان فعلنا ذلك، فان غشينا من ذلك شييا كان قضاء ذلك الى الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3893
- Book Index
- 118
Grades
- -
