ஹதீஸ்கள்
#3884
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
முசய்யப் பின் ஹஸ்ன் பின் அபீவஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்துவிட்டபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், “என் தந்தையின் சகோதரரே! “லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை)வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும், “அபூதாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், “(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)” என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; (அவ்விதம் பாவமன்னிப்புக் கோரக் கூடாது என்று) எனக்குத் தடை விதிக்கப்படும்வரை” என்று சொன்னார்கள். அப்போதுதான், “இணைவைப்பாளர் கள் நரகவாசிகள்தான் என்பது தெளிவாகி விட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன் னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர் களாயிருந்தாலும்கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை யில்லை” எனும் (9:113) குர்ஆன் வசனமும், “(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்க ளால் நல்வழியில் செலுத்திவிட முடியாது” எனும் (28:56) குர்ஆன் வசனமும் அருளப் பெற்றன.130 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3884
- Book Index
- 109
Grades
- -