ஹதீஸ்கள்
#3912
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் முதன்முதலாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு (பொதுநிதியிலிருந்து) நான்காண்டுகளுக்கு நான்காயிரம் (திர்ஹம்/தீனார்) கொடுக்க வேண்டுமென நிர்ணயித்தார்கள். (தமது மகனான) எனக்கு மூவாயிரத்து ஐநூறு கொடுக்க வேண்டும் என நிர்ணயித்தார்கள். அவர்களிடம், “(தங்கள் மகன்) இப்னு உமர் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒருவர்தானே! நான்காயிரம் கொடுக்காமல் அவருக்கு மட்டும் ஏன் குறைவாக நிர்ணயித்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவரை அழைத்துக்கொண்டு ஹிஜ்ரத் செய்துவந்ததெல்லாம் அவருடைய தாய், தந்தையர்தான்” என்று சொன்னார்கள். “அவர் சுயமாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களைப் போன்றவரல்லர்” என்றும் உமர் (ரலி) அவர்கள் சொல்வார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3912
- Book Index
- 137
Grades
- -