ஹதீஸ்கள்
#3909
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அஸ்மா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நான் (என் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரை (மக்காவில்) கருவுற்றிருந் தேன். கர்ப்பக் காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டேன்; மதீனா வந்தேன். (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தேன். பிறகு, நபி (ஸல்) அவர்களிடம் குழந்தையைக் கொண்டுசென்று அவர்களின் மடியில் அவனை வைத்தேன். பிறகு அவர்கள் பேரீச்சம்பழம் ஒன்றைக் கொண்டுவரும்படி கூறி அதை மென்று அவனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ்நீர்தான் அவனது வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை மென்று அவனது வாயினுள் வைத்துத் தேய்த்துவிட்டார்கள். பிறகு அவனுக்காக துஆ செய்து, இறைவனிடம் அருள்வளம் வேண்டி இறைஞ்சினார்கள். அவன்தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதில், “அஸ்மா (ரலி) அவர்கள் நபி (ஸல்-அவர்களிடம் மதீனா) நோக்கி கர்ப்பிணியான நிலையில் ஹிஜ்ரத் செய்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3909
- Book Index
- 134
Grades
- -