ஹதீஸ்கள்
#3915
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அபூபுர்தா பின் அபீமூசா அல்அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “என் தந்தை (உமர் (ரலி) அவர்கள்) உங்கள் தந்தை (அபூமூசா (ரலி) அவர்கள்) இடம் என்ன சொன்னார் கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “தெரியாது” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: என் தந்தை உங்கள் தந்தையிடம், “அபூமூசாவே! நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஸ்லாத்தை ஏற்றதும், அவர்களுடன் ஹிஜ்ரத் செய்ததும், அவர் களுடன் (சேர்ந்து) அறப்போர் புரிந்ததும், அவர்களுடன் (இணைந்து) நாம் புரிந்த நற்செயல்களும் (இவையெல்லாம்) நிச்சய மாகப் பலன் தரும் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? மேலும், நபியவர் களுக்குப்பின் நாம் புரிந்த செயல்கள் அனைத்தும் (அவற்றிலுள்ள நிறைகளும் குறைகளும்) சரிக்குச் சரிநிகராகி (இறை வனின் தண்டனையிலிருந்து) நாம் தப்பித் துக்கொள்வோம் என்பதும் (உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா?)” என்று கேட்டார்கள். அதற்கு (என் தந்தையிடம்) உங்கள் தந்தை (அபூமூசா), “இல்லை; இறைவன் மீதாணையாக! நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு அறப்போர் புரிந்துள்ளோம்; தொழுதுள்ளோம்; நோன்பு நோற்றுள்ளோம்; நற்செயல்கள் நிறையப் புரிந்துள்ளோம். மேலும், நம் கரங்களால் நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இவற்றுக்கெல்லாம் (இறைவன் நமக்குப் பிரதிபலன் அளிப்பான் என) நாம் எதிர்பார்க்கின்றோம்” என்று பதிலளித்தார்கள். உடனே என் தந்தை (உமர்), “ஆனால், உமரின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன்மீது ஆணையாக! நானோ, (நபியவர்களுடன் நாம் புரிந்த நற்செயல்களான) அவற்றின் பலன் நிச்சயம் நமக்குக் கிடைக்கும் என்பதும், நபிகளாருக்குப்பின் நாம் புரிந்த செயல்கள் அனைத்தும் (அவற்றிலுள்ள நிறைகளும் குறைகளும்) சரிக்குச் சரிநிகராகி (இறைவனின் தண்டனையிலிருந்து) நாம் தப்பித்துக்கொள்வோம் என்பதும் போதும் என்றே நான் விரும்புகிறேன்” எனக் கூறினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் தந்தை (உமர்) என் தந்தையைவிடச் சிறந்தவர்” என்று சொன்னேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3915
- Book Index
- 140
Grades
- -