Loading...

Loading...
நூல்கள்
௧௨௭ ஹதீஸ்கள்
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள், (ஃபாத்திமா இருக்கவே,) அபூஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண்பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள் களுக்காக (அவர்கள் மனத் துன்பத்திற்கு ஆளாக்கப்படும்போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்” என்று சொன் னார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்ற) எழுந்தார் கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “இறைவாழ்த்துக்குப்பின்! அபுல்ஆஸ் பின் அர்ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தம் மனைவியைத் திருப்பி அனுப்பிவிடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்துகொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்றுசேர முடியாது” என்று சொன்னார்கள்.109 எனவே, அலீ (ரலி) அவர்கள் (அபூஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டுவிட்டார்கள். மற்றோர் அறிவிப்பில், மிஸ்வர் (ரலி) அவர்கள் கூடுதலாகக் கூறியிருப்பதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் உரையைச் செவியுற்றேன். அவர்கள் பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம்முடைய மருமகன் ஒருவரை (அபுல் ஆஸை) நினைவுகூர்ந்து அவர் (அவருடைய மாமனாரான) தம்முடன் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைப் பாராட்டிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது அவர்கள், “அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்துகொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார், அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்” என்று சொன் னார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال حدثني علي بن حسين، ان المسور بن مخرمة، قال ان عليا خطب بنت ابي جهل، فسمعت بذلك، فاطمة، فاتت رسول الله صلى الله عليه وسلم فقالت يزعم قومك انك لا تغضب لبناتك، هذا علي ناكح بنت ابي جهل، فقام رسول الله صلى الله عليه وسلم فسمعته حين تشهد يقول " اما بعد انكحت ابا العاص بن الربيع، فحدثني وصدقني، وان فاطمة بضعة مني، واني اكره ان يسوءها، والله لا تجتمع بنت رسول الله صلى الله عليه وسلم وبنت عدو الله عند رجل واحد ". فترك علي الخطبة. وزاد محمد بن عمرو بن حلحلة عن ابن شهاب عن علي عن مسور، سمعت النبي صلى الله عليه وسلم وذكر صهرا له من بني عبد شمس فاثنى عليه في مصاهرته اياه فاحسن قال " حدثني فصدقني، ووعدني فوفى لي
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உசாமா (ரலி) அவர்களின் தலைமையைக் குறைகூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறைகூறுகிறீர்கள் என்றால்- (இது ஒன்றும் புதிதல்ல). இதற்குமுன் (மூத்தா போரின்போது) இவருடைய தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறைகூறிக் கொண்டிருந்தீர்கள்.112 அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவருடைய மகனான) இவர் (உசாமா)தான் அவருக்குப்பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا خالد بن مخلد، حدثنا سليمان، قال حدثني عبد الله بن دينار، عن عبد الله بن عمر رضى الله عنهما قال بعث النبي صلى الله عليه وسلم بعثا، وامر عليهم اسامة بن زيد، فطعن بعض الناس في امارته، فقال النبي صلى الله عليه وسلم " ان تطعنوا في امارته فقد كنتم تطعنون في امارة ابيه من قبل، وايم الله، ان كان لخليقا للامارة، وان كان لمن احب الناس الى، وان هذا لمن احب الناس الى بعده
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, என்னிடம் (இருவரின் சாயலை வைத்து) உறவு முறையை கணிப்பவர் ஒருவர் வந்தார். உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களும், ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் அப்போது ஒருக்களித் துப் படுத்திருந்தார்கள். அந்த மனிதர் (இருவரின் கால்களையும் பார்த்து), “இந்தக் கால்கள் (ஒன்றுக்கொன்று உறவுள்ளவை;) ஒன்று மற்றொன்றிருந்து தோன்றியவை” என்று சொன்னார். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைந்து அவரை வியந்தார்கள்; அதை எனக்குத் தெரிவித்தார்கள்.113 அத்தியாயம் :
حدثنا يحيى بن قزعة، حدثنا ابراهيم بن سعد، عن الزهري، عن عروة، عن عايشة رضى الله عنها قالت دخل على قايف والنبي صلى الله عليه وسلم شاهد، واسامة بن زيد وزيد بن حارثة مضطجعان، فقال ان هذه الاقدام بعضها من بعض. قال فسر بذلك النبي صلى الله عليه وسلم واعجبه، فاخبر به عايشة
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (திருட்டுக் குற்றத்தின் காரணமாக கை வெட்டும் தண்டனைக்கு உள்ளாக விருந்த) மக்ஸூமீ குலத்துப் பெண்ணொருத்தியின் விஷயம் குறைஷியரைக் கவலையில் ஆழ்த்தியது. அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப்பிள்ளையான உசாமா (ரலி) அவர்களைத் தவிர வேறெவர் அவர்களிடம் துணிச்சலுடன் (தண்டனையைத் தளர்த்துவது குறித்துப்) பேச முடியும்” என்று (தமக்குள்) பேசிக்கொண்டார்கள்.115 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا ليث، عن الزهري، عن عروة، عن عايشة، رضى الله عنها ان قريشا، اهمهم شان المخزومية، فقالوا من يجتري عليه الا اسامة بن زيد، حب رسول الله صلى الله عليه وسلم
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருடிவிட்டாள். மக்கள், “அவள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களிடம் (தண்டனையைத் தளர்த்தும்படி பரிந்து) பேசுவது யார்?” என்று (தமக்குள்) விசாரித்துக்கொண் டனர். எவரும் நபி (ஸல்) அவர்களிடம் பேசத் துணியவில்லை. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவாகளிடம் (அது குறித்துப் பரிந்து) பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இஸ்ரவேலர்கள் தம்மிடையேயுள்ள வலியவர் (உயர் குலத்தவர்) எவரேனும் திருடிவிட்டால் அவரைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார்கள்; தம்மிடையேயுள்ள பலவீனர் எவரேனும் திருடிவிட்டால் அவரது கையைத் துண்டித்து விடுவார்கள். திருடியவர் (என் மகள்) ஃபாத்திமாவாகவே இருந்தாலும்கூட அவரது கையை நான் துண்டித் திருப்பேன்” என்று சொன்னார்கள்.116 அத்தியாயம் :
حدثنا علي، حدثنا سفيان، قال ذهبت اسال الزهري عن حديث المخزومية، فصاح بي، قلت لسفيان فلم تحتمله عن احد قال وجدته في كتاب كان كتبه ايوب بن موسى عن الزهري عن عروة عن عايشة رضى الله عنها ان امراة من بني مخزوم سرقت، فقال��ا من يكلم فيها النبي صلى الله عليه وسلم فلم يجتري احد ان يكلمه، فكلمه اسامة بن زيد، فقال " ان بني اسراييل كان اذا سرق فيهم الشريف تركوه، واذا سرق الضعيف قطعوه، لو كانت فاطمة لقطعت يدها
அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் பள்ளிவாசலில் இருந்தபொழுது பள்ளிவாசலின் ஒரு மூலையில் தமது ஆடையை (மண்ணில் புரளும்படி) இழுத்துக்கொண்டே சென்றுகொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தார்கள். உடனே, “இவர் யார் என்று பார். இவர் எனக்கு அருகில் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே? (நான் இவருக் குப் புத்திமதி சொல்லியிருப்பேனே)” என்று சொன்னார்கள். அவர்களிடம் ஒரு மனிதர், “அபூஅப்திர் ரஹ்மான் (இப்னு உமர்) அவர்களே! இவரை உங்களுக்குத் தெரியாதா? இவர்தான் உசாமா (ரலி) அவர்களின் மகன் முஹம்மத்” என்று சொன்னார். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது தலையைத் தாழ்த்திக் கொண்டு தம் கையால் தரையில் (கொத்துவது போல்) தட்டியபிறகு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவரைப் பார்த்தால் இவரை நேசிப் பார்கள்” என்று சொன்னார்கள்.117 அத்தியாயம் :
حدثني الحسن بن محمد، حدثنا ابو عباد، يحيى بن عباد حدثنا الماجشون، اخبرنا عبد الله بن دينار، قال نظر ابن عمر يوما وهو في المسجد الى رجل يسحب ثيابه في ناحية من المسجد فقال انظر من هذا ليت هذا عندي. قال له انسان اما تعرف هذا يا ابا عبد الرحمن هذا محمد بن اسامة، قال فطاطا ابن عمر راسه، ونقر بيديه في الارض، ثم قال لو راه رسول الله صلى الله عليه وسلم لاحبه
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சிறுவர்களா யிருந்த) என்னையும் ஹசன் (ரலி) அவர்களையும் கையிலெடுத்து, “இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!” என்று பிரார்த்திப் பார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا معتمر، قال سمعت ابي، حدثنا ابو عثمان، عن اسامة بن زيد رضى الله عنهما حدث عن النبي صلى الله عليه وسلم انه كان ياخذه والحسن فيقول " اللهم احبهما فاني احبهما
உசாமா பின் ஸைத் (ரலி) அவர் களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உம்மு அய்மனின் மகனான அய்மனின் மகன் ஹஜ்ஜாஜ் என்பவர் (பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தபோது) தம் ருகூவையும் சுஜூதையும் முழுமையாகச் செய்யாமலிருப்பதைக் கண்டு இப்னு உமர் (ரலி) அவர்கள், “மீண்டும் தொழுங்கள்” என்று சொன்னார்கள். உம்மு அய்மனின் மகனான அய்மன், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரராய் இருந்தார்; மேலும் அன்சாரிகளில் ஒருவராகவும் இருந்தார். அத்தியாயம் :
وقال نعيم عن ابن المبارك، اخبرنا معمر، عن الزهري، اخبرني مولى، لاسامة بن زيد. ان الحجاج بن ايمن ابن ام ايمن،، وكان، ايمن ابن ام ايمن اخا اسامة لامه، وهو رجل من الانصار، فراه ابن عمر لم يتم ركوعه ولا سجوده فقال اعد
உசாமா பின் ஸைத் (ரலி) அவர் களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஹஜ்ஜாஜ் பின் அய்மன் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்(து தொழு)தார். அப்போது அவர் தமது ருகூவையும் முழுமையாக நிறைவேற்றவில்லை; தன் சுஜூதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜை நோக்கி), “திரும்பத் தொழுங்கள்” என்று சொன்னார்கள். அவர் திரும்பிச் சென்றபோது என்னிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள், “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான், “உம்மு அய்மனின் மகன் அய்மனுடைய மகன் ஹஜ்ஜாஜ்தான் இவர்” என்று சொன்னேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “இவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்திருந்தால் நேசித்திருப்பார்கள்” என்று சொன்னார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள், (உசாமா (ரலி) அவர்களின் மீது) கொண்டிருந்த நேசத்தையும் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் பெற்றெடுத்த (மற்ற) பிள்ளைகளின் மீது கொண்டிருந்த நேசத்தையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். அறிவிப்பாளர் சுலைமான் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உம்மு அய்மன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாயாக இருந்தார்கள். அத்தியாயம் :
قال ابو عبد الله وحدثني سليمان بن عبد الرحمن، حدثنا الوليد، حدثنا عبد الرحمن بن نمر، عن الزهري، حدثني حرملة، مولى اسامة بن زيد انه بينما هو مع عبد الله بن عمر اذ دخل الحجاج بن ايمن فلم يتم ركوعه ولا سجوده، فقال اعد. فلما ولى قال لي ابن عمر من هذا قلت الحجاج بن ايمن ابن ام ايمن. فقال ابن عمر لو راى هذا رسول الله صلى الله عليه وسلم لاحبه، فذكر حبه وما ولدته ام ايمن. قال وحدثني بعض اصحابي عن سليمان وكانت حاضنة النبي صلى الله عليه وسلم
حدثنا اسحاق بن نصر، حدثنا عبد الرزاق، عن معمر، عن الزهري، عن سالم، عن ابن عمر رضى الله عنهما قال كان الرجل في حياة النبي صلى الله عليه وسلم اذا راى رويا قصها على النبي صلى الله عليه وسلم، فتمنيت ان ارى رويا اقصها على النبي صلى الله عليه وسلم، وكنت غلاما اعزب، وكنت انام في المسجد على عهد النبي صلى الله عليه وسلم فرايت في المنام كان ملكين اخذاني فذهبا بي الى النار، فاذا هي مطوية كطى البير، فاذا لها قرنان كقرنى البير، واذا فيها ناس قد عرفتهم، فجعلت اقول اعوذ بالله من النار، اعوذ بالله من النار. فلقيهما ملك اخر فقال لي لن تراع. فقصصتها على حفصة. فقصتها حفصة على النبي صلى الله عليه وسلم فقال " نعم الرجل عبد الله، لو كان يصلي بالليل ". قال سالم فكان عبد الله لا ينام من الليل الا قليلا
حدثنا اسحاق بن نصر، حدثنا عبد الرزاق، عن معمر، عن الزهري، عن سالم، عن ابن عمر رضى الله عنهما قال كان الرجل في حياة النبي صلى الله عليه وسلم اذا راى رويا قصها على النبي صلى الله عليه وسلم، فتمنيت ان ارى رويا اقصها على النبي صلى الله عليه وسلم، وكنت غلاما اعزب، وكنت انام في المسجد على عهد النبي صلى الله عليه وسلم فرايت في المنام كان ملكين اخذاني فذهبا بي الى النار، فاذا هي مطوية كطى البير، فاذا لها قرنان كقرنى البير، واذا فيها ناس قد عرفتهم، فجعلت اقول اعوذ بالله من النار، اعوذ بالله من النار. فلقيهما ملك اخر فقال لي لن تراع. فقصصتها على حفصة. فقصتها حفصة على النبي صلى الله عليه وسلم فقال " نعم الرجل عبد الله، لو كان يصلي بالليل ". قال سالم فكان عبد الله لا ينام من الليل الا قليلا
ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு நல்ல மனிதர்” என்று சொன்னார்கள். இதைத் தம் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، حدثنا ابن وهب، عن يونس، عن الزهري، عن سالم، عن ابن عمر، عن اخته، حفصة ان النبي صلى الله عليه وسلم قال لها " ان عبد الله رجل صالح
ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு நல்ல மனிதர்” என்று சொன்னார்கள். இதைத் தம் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، حدثنا ابن وهب، عن يونس، عن الزهري، عن سالم، عن ابن عمر، عن اخته، حفصة ان النبي صلى الله عليه وسلم قال لها " ان عبد الله رجل صالح
அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். (அங்கு பள்ளிவாசலுக்குச் சென்று) இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு, “இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரைக் கொடு” என்று பிரார்த் தித்தேன். பிறகு ஒரு கூட்டத்தாரிடம் சென்று அவர்களிடம் அமர்ந்தேன். அப்போது முதியவர் ஒருவர் வந்து என் பக்கத்தில் அமர்ந்தார். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். மக்கள், “(இவர்தான் நபித்தோழர்) அபுத்தர்தா” என்று பதிலளித்தார்கள். நான், அபுத்தர்தா (ரலி) அவர்களை நோக்கி, “எனக்கு ஒரு நல்ல நண்பரை அறிவிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். ஆகவே, அவன் உங்களை எனக்குக் கொடுத்திருக்கிறான்” என்று சொன்னேன். அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், “நீங்கள் எந்த ஊர்க்காரர்?” என்று கேட்டார்கள். நான், “கூஃபாவாசி” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “நபியவர்களின் காலணிகளையும் தலையணையையும் தண்ணீர்க் குவளையையும் சுமந்து வந்த உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்) உங்க ளிடையே இல்லையா? தன் நபியின் வாயால் எவரை அல்லாஹ் ஷைத்தானிட மிருந்து காப்பாற்றினானோ அவர் (அம்மார்-ரலி) உங்களிடையே இல்லையா? மேலும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங் களை அறிந்தவர் (ஹுதைஃபா-ரலி) உங்களிடையே இல்லையா?” என்று கேட்டுவிட்டு, பிறகு, “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், “வல்லய்லி இதா யஃக்ஷா' என்று தொடங்கும் (திருக்குர்ஆனின் 92ஆம் அத்தியாயம் அல்லைலின்) இறைவசனங்களை எப்படி ஓதுகின்றார்” என்று கேட்டார்கள். நான், “அவர்களுக்கு, “வல்லய்லி இதா யஃக்ஷா வந்நஹாரி இதா தஜல்லா வத்தகரி வல்உன்ஸா' (இப்படித்தான் ஓதுவார்கள்) என்று ஓதிக்காட்டினேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அதை எனக்கு நபி (ஸல்) அவர்கள் தமது வாயால் (இவ்வாறே) ஓதிக்காட்டினார்கள்” என்றார்கள்.121 அத்தியாயம் :
حدثنا مالك بن اسماعيل، حدثنا اسراييل، عن المغيرة، عن ابراهيم، عن علقمة،، قال قدمت الشام فصليت ركعتين، ثم قلت اللهم يسر لي جليسا صالحا، فاتيت قوما فجلست اليهم، فاذا شيخ قد جاء حتى جلس الى جنبي، قلت من هذا قالوا ابو الدرداء. فقلت اني دعوت الله ان ييسر لي جليسا صالحا فيسرك لي، قال ممن انت قلت من اهل الكوفة. قال اوليس عندكم ابن ام عبد صاحب النعلين والوساد والمطهرة وفيكم الذي اجاره الله من الشيطان على لسان نبيه صلى الله عليه وسلم اوليس فيكم صاحب سر النبي صلى الله عليه وسلم الذي لا يعلم احد غيره ثم قال كيف يقرا عبد الله {والليل اذا يغشى}، فقرات عليه {والليل اذا يغشى * والنهار اذا تجلى * والذكر والانثى}. قال والله لقد اقرانيها رسول الله صلى الله عليه وسلم من فيه الى في
அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரு ரக்அத்கள் தொழு)ததும் “இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தித் தேன். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள் “நீங்கள் எந்த ஊர்க்காரர்?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “கூஃபாவாசி' என்றேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “(நபி (ஸல்) அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங் களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?” என்று ஹுதைஃபா (ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், “ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், “தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?” என்று கேட்டார். - அம்மார் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள்- நான், “ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் (பல் துலக்கும்) “மிஸ்வாக்' குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்- அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்- (இப்னு மஸ்ஊத் -ரலி) அவர்கள் உங்களிடம் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) அவர்கள் “வல்லய்லி இதா யஃக்ஷா வந்நஹாரி இதா தஜல்லா' என்னும் (அத்தியாயம் அல்லைலின்) வசனங்களை எப்படி ஓதினார்கள்?” என்று கேட்க, “வத்தகரி வல்உன்ஸா” என்று (“வமா கலக்க' என்னும் சொல் இல்லாமல் தான் ஓதுவார்கள் என) நான் பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “(ஷாம் நாட்டினரான) இவர்கள், நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஒரு விஷயத்தை (ஓதும் முறையை) விட்டுக்கொடுத்துவிடும்படி என்னை எச்சரிக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.122 இதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن مغيرة، عن ابراهيم، قال ذهب علقمة الى الشام، فلما دخل المسجد قال اللهم يسر لي جليسا صالحا. فجلس الى ابي الدرداء فقال ابو الدرداء ممن انت قال من اهل الكوفة. قال اليس فيكم او منكم صاحب السر الذي لا يعلمه غيره يعني حذيفة. قال قلت بلى. قال اليس فيكم او منكم الذي اجاره الله على لسان نبيه صلى الله عليه وسلم يعني من الشيطان، يعني عمارا. قلت بلى. قال اليس فيكم او منكم صاحب السواك او السرار قال بلى. قال كيف كان عبد الله يقرا {والليل اذا يغشى * والنهار اذا تجلى} قلت {والذكر والانثى}. قال ما زال بي هولاء حتى كادوا يستنزلوني عن شىء سمعته من رسول الله صلى الله عليه وسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நமது நம்பிக்கைக் குரியவர் அபூஉபைதா பின் அல்—ர்ராஹ் அவர்கள்தான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا عبد الاعلى، حدثنا خالد، عن ابي قلابة، قال حدثني انس بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم قال " ان لكل امة امينا، وان اميننا ايتها الامة ابو عبيدة بن الجراح
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான்வாசிகளிடம், “நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்” என்று சொன் னார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த “அமீன்' என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள்.124 அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا شعبة، عن ابي اسحاق، عن صلة، عن حذيفة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لاهل نجران " لابعثن يعني عليكم يعني امينا حق امين ". فاشرف اصحابه، فبعث ابا عبيدة رضى الله عنه
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது (உரையாற்றியபடி) இருக்க ஹசன் (ரலி) அவர்கள், நபி (ஸல்)அவர்களின் பக்கவாட்டில் அமர்ந்திருந் தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களையும் மறுமுறை ஹசன் (ரலி) அவர்களையும் நோக்கியபடி, “இந்த என் (மகளின்) மகன் மக்களின் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்த விருக்கிறான்” என்று சொல்ல நான் கேட்டேன்.128 அத்தியாயம் :
حدثنا صدقة، حدثنا ابن عيينة، حدثنا ابو موسى، عن الحسن، سمع ابا بكرة، سمعت النبي صلى الله عليه وسلم على المنبر والحسن الى جنبه، ينظر الى الناس مرة واليه مرة، ويقول " ابني هذا سيد، ولعل الله ان يصلح به بين فيتين من المسلمين
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சிறுவர்களாயிருந்த) என்னையும் ஹசன் (ரலி) அவர்களையும் (கையில்) எடுத்து, “இறைவா! நான் இவ்விருவரையும் நேசிக்கிறேன். நீயும் இவ்விருவரையும் நேசிப்பாயாக” என்று கூறினார்கள்.129 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا المعتمر، قال سمعت ابي قال، حدثنا ابو عثمان، عن اسامة بن زيد رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم انه كان ياخذه والحسن ويقول " اللهم اني احبهما فاحبهما ". او كما قال
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களுடைய மகன் ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டபின்) அவர்களின் தலை, உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் கொண்டுவரப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டது. உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ஒரு கைக் குச்சியால் அதன் மூக்கிலும் கண்ணிலும்) குத்தத் தொடங்கினான். மேலும் ஹுசைன் (ரலி) அவர்களின் அழகைக் குறித்து ஏதோ சொன்னான்.130 அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிலேயே ஹுசைன் (ரலி) அவர்கள்தான் தோற்றத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிக ஒப்பானவர்களாய் இருந்தார்கள். “வஸ்மா' என்னும் ஒரு வகை மூலிகையால் தமது (தாடிக்கும் முடிக்கும்) சாயமிட்டிருந்தார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن الحسين بن ابراهيم، قال حدثني حسين بن محمد، حدثنا جرير، عن محمد، عن انس بن مالك رضى الله عنه اتي عبيد الله بن زياد براس الحسين عليه السلام فجعل في طست، فجعل ينكت، وقال في حسنه شييا. فقال انس كان اشبههم برسول الله صلى الله عليه وسلم، وكان مخضوبا بالوسمة