ஹதீஸ்கள்
#3734
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் பள்ளிவாசலில் இருந்தபொழுது பள்ளிவாசலின் ஒரு மூலையில் தமது ஆடையை (மண்ணில் புரளும்படி) இழுத்துக்கொண்டே சென்றுகொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தார்கள். உடனே, “இவர் யார் என்று பார். இவர் எனக்கு அருகில் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே? (நான் இவருக் குப் புத்திமதி சொல்லியிருப்பேனே)” என்று சொன்னார்கள். அவர்களிடம் ஒரு மனிதர், “அபூஅப்திர் ரஹ்மான் (இப்னு உமர்) அவர்களே! இவரை உங்களுக்குத் தெரியாதா? இவர்தான் உசாமா (ரலி) அவர்களின் மகன் முஹம்மத்” என்று சொன்னார். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது தலையைத் தாழ்த்திக் கொண்டு தம் கையால் தரையில் (கொத்துவது போல்) தட்டியபிறகு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவரைப் பார்த்தால் இவரை நேசிப் பார்கள்” என்று சொன்னார்கள்.117 அத்தியாயம் :
حدثني الحسن بن محمد، حدثنا ابو عباد، يحيى بن عباد حدثنا الماجشون، اخبرنا عبد الله بن دينار، قال نظر ابن عمر يوما وهو في المسجد الى رجل يسحب ثيابه في ناحية من المسجد فقال انظر من هذا ليت هذا عندي. قال له انسان اما تعرف هذا يا ابا عبد الرحمن هذا محمد بن اسامة، قال فطاطا ابن عمر راسه، ونقر بيديه في الارض، ثم قال لو راه رسول الله صلى الله عليه وسلم لاحبه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3734
- Book Index
- 81
Grades
- -
