ஹதீஸ்கள்
#3743
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரு ரக்அத்கள் தொழு)ததும் “இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தித் தேன். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள் “நீங்கள் எந்த ஊர்க்காரர்?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “கூஃபாவாசி' என்றேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “(நபி (ஸல்) அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங் களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?” என்று ஹுதைஃபா (ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், “ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், “தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?” என்று கேட்டார். - அம்மார் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள்- நான், “ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் (பல் துலக்கும்) “மிஸ்வாக்' குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்- அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்- (இப்னு மஸ்ஊத் -ரலி) அவர்கள் உங்களிடம் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) அவர்கள் “வல்லய்லி இதா யஃக்ஷா வந்நஹாரி இதா தஜல்லா' என்னும் (அத்தியாயம் அல்லைலின்) வசனங்களை எப்படி ஓதினார்கள்?” என்று கேட்க, “வத்தகரி வல்உன்ஸா” என்று (“வமா கலக்க' என்னும் சொல் இல்லாமல் தான் ஓதுவார்கள் என) நான் பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “(ஷாம் நாட்டினரான) இவர்கள், நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஒரு விஷயத்தை (ஓதும் முறையை) விட்டுக்கொடுத்துவிடும்படி என்னை எச்சரிக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.122 இதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3743
- Book Index
- 88
Grades
- -