ஹதீஸ்கள்
#3737
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
உசாமா பின் ஸைத் (ரலி) அவர் களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஹஜ்ஜாஜ் பின் அய்மன் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்(து தொழு)தார். அப்போது அவர் தமது ருகூவையும் முழுமையாக நிறைவேற்றவில்லை; தன் சுஜூதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜை நோக்கி), “திரும்பத் தொழுங்கள்” என்று சொன்னார்கள். அவர் திரும்பிச் சென்றபோது என்னிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள், “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான், “உம்மு அய்மனின் மகன் அய்மனுடைய மகன் ஹஜ்ஜாஜ்தான் இவர்” என்று சொன்னேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “இவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்திருந்தால் நேசித்திருப்பார்கள்” என்று சொன்னார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள், (உசாமா (ரலி) அவர்களின் மீது) கொண்டிருந்த நேசத்தையும் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் பெற்றெடுத்த (மற்ற) பிள்ளைகளின் மீது கொண்டிருந்த நேசத்தையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். அறிவிப்பாளர் சுலைமான் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உம்மு அய்மன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாயாக இருந்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3737
- Book Index
- 84
Grades
- -