ஹதீஸ்கள்
#3733
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருடிவிட்டாள். மக்கள், “அவள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களிடம் (தண்டனையைத் தளர்த்தும்படி பரிந்து) பேசுவது யார்?” என்று (தமக்குள்) விசாரித்துக்கொண் டனர். எவரும் நபி (ஸல்) அவர்களிடம் பேசத் துணியவில்லை. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவாகளிடம் (அது குறித்துப் பரிந்து) பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இஸ்ரவேலர்கள் தம்மிடையேயுள்ள வலியவர் (உயர் குலத்தவர்) எவரேனும் திருடிவிட்டால் அவரைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார்கள்; தம்மிடையேயுள்ள பலவீனர் எவரேனும் திருடிவிட்டால் அவரது கையைத் துண்டித்து விடுவார்கள். திருடியவர் (என் மகள்) ஃபாத்திமாவாகவே இருந்தாலும்கூட அவரது கையை நான் துண்டித் திருப்பேன்” என்று சொன்னார்கள்.116 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3733
- Book Index
- 80
Grades
- -