ஹதீஸ்கள்
#3748
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களுடைய மகன் ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டபின்) அவர்களின் தலை, உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் கொண்டுவரப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டது. உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ஒரு கைக் குச்சியால் அதன் மூக்கிலும் கண்ணிலும்) குத்தத் தொடங்கினான். மேலும் ஹுசைன் (ரலி) அவர்களின் அழகைக் குறித்து ஏதோ சொன்னான்.130 அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிலேயே ஹுசைன் (ரலி) அவர்கள்தான் தோற்றத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிக ஒப்பானவர்களாய் இருந்தார்கள். “வஸ்மா' என்னும் ஒரு வகை மூலிகையால் தமது (தாடிக்கும் முடிக்கும்) சாயமிட்டிருந்தார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن الحسين بن ابراهيم، قال حدثني حسين بن محمد، حدثنا جرير، عن محمد، عن انس بن مالك رضى الله عنه اتي عبيد الله بن زياد براس الحسين عليه السلام فجعل في طست، فجعل ينكت، وقال في حسنه شييا. فقال انس كان اشبههم برسول الله صلى الله عليه وسلم، وكان مخضوبا بالوسمة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3748
- Book Index
- 93
Grades
- -
