Loading...

Loading...
நூல்கள்
௧௨௭ ஹதீஸ்கள்
பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அலீ (ரலி) அவர்களின் மகன் ஹசன் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோள்மீது அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!” என்று பிரார்த்திக்கக் கண்டேன். அத்தியாயம் :
حدثنا حجاج بن المنهال، حدثنا شعبة، قال اخبرني عدي، قال سمعت البراء رضى الله عنه قال رايت النبي صلى الله عليه وسلم والحسن على عاتقه يقول " اللهم اني احبه فاحبه
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களைச் சுமந்தபடி, “என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் (உங்கள் பாட்டனார்) நபி (ஸல்) அவர்களைத்தான் (உருவ அமைப்பில்) ஒத்திருக்கிறீர்கள். (உங்கள் தந்தையான) அலீ அவர்களை ஒத்திருக்கவில்லை” என்று சொல்லக் கண்டேன். அப்போது அலீ (ரலி) அவர்கள் (அதைக் கேட்டு) சிரித்துக்கொண்டிருந்தார்கள்.131 அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا عبد الله، قال اخبرني عمر بن سعيد بن ابي حسين، عن ابن ابي مليكة، عن عقبة بن الحارث، قال رايت ابا بكر رضى الله عنه وحمل الحسن وهو يقول بابي شبيه بالنبي، ليس شبيه بعلي. وعلي يضحك
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்துவாருங்கள்; அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்) என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.132 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني يحيى بن معين، وصدقة، قالا اخبرنا محمد بن جعفر، عن شعبة، عن واقد بن محمد، عن ابيه، عن ابن عمر رضى الله عنهما قال قال ابو بكر ارقبوا محمدا صلى الله عليه وسلم في اهل بيته
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹசன் பின் அலீ (ரலி) அவர்களை விட நபி (ஸல்) அவர்களை (உருவ அமைப்பில்) ஒத்தவர்களாக வேறெவரும் இருக்கவில்லை.133 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني ابراهيم بن موسى، اخبرنا هشام بن يوسف، عن معمر، عن الزهري، عن انس،. وقال عبد الرزاق اخبرنا معمر، عن الزهري، اخبرني انس، قال لم يكن احد اشبه بالنبي صلى الله عليه وسلم من الحسن بن علي
அப்துர் ரஹ்மான் பின் அபீ நுஅம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (இராக்வாசி) ஒருவர் இஹ்ராம் கட்டியவரைக் குறித்து வினவினார். -அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், “இஹ்ராம் கட்டியவர் ஈயைக் கொல்வது (அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது) குறித்துக் கேட்டார் என எண்ணுகிறேன்” என்று கூறுகிறார்- அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இராக்வாசிகள் ஈயைக் (கொல்ல அனுமதியுண்டா இல்லையா என்பது) குறித்துக் கேட்கிறார்கள். அவர்களோ ஏற்கெனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளின் மகனை (ஹுசைனை)க் கொன்றுவிட்டார்கள். (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் இருவரும் (ஹசன் (ரலி) அவர்களும் ஹுசைன் (ரலி) அவர்களும்) உலகின் இரு துளசி மலர்கள் ஆவர்” என்று (அவர்களைக் குறித்து) சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.134 அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن محمد بن ابي يعقوب، سمعت ابن ابي نعم، سمعت عبد الله بن عمر، وساله، عن المحرم،، قال شعبة احسبه يقتل الذباب فقال اهل العراق يسالون عن الذباب وقد قتلوا ابن ابنة رسول الله صلى الله عليه وسلم، وقال النبي صلى الله عليه وسلم " هما ريحانتاى من الدنيا
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள், “அபூபக்ர் எங்கள் தலைவராவார். அவர்கள், எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள்” என்று சொல்வார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا عبد العزيز بن ابي سلمة، عن محمد بن المنكدر، اخبرنا جابر بن عبد الله رضى الله عنهما قال كان عمر يقول ابو بكر سيدنا، واعتق سيدنا. يعني بلالا
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் உங்களுக் காக (அடிமையான) என்னை விலைக்கு வாங்கியிருந்தால் என்னை (மதீனா விலேயே) வைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக என்னை நீங்கள் வாங்கியிருந்தால் என்னை அல்லாஹ் வுக்காக செயலாற்ற விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள்.137 அத்தியாயம் :
حدثنا ابن نمير، عن محمد بن عبيد، حدثنا اسماعيل، عن قيس، ان بلالا، قال لابي بكر ان كنت انما اشتريتني لنفسك فامسكني، وان كنت انما اشتريتني لله فدعني وعمل الله
حدثنا مسدد، حدثنا عبد الوارث، عن خالد، عن عكرمة، عن ابن عباس،، قال ضمني النبي صلى الله عليه وسلم الى صدره وقال " اللهم علمه الحكمة
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை நபி (ஸல்) அவர்கள் தம் நெஞ்சோடணைத்து, “இறைவா! இவருக்கு ஞானத்தைக் கற்றுத்தருவாயாக!” எனப் பிராத்தித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “இறைவா! இவருக்கு (உன்) வேதத்தைக் கற்றுத்தருவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள் என வந்துள்ளது.139 மேலும், “ஞானம்' (ஹிக்மத்) என்பதற்கு, “நபித்துவம்' அல்லாத விஷயங்களில் சரியான கருத்தை அறிந்துகொள்வது என்று பொருள். அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، وقال، " علمه الكتاب ". حدثنا موسى، حدثنا وهيب، عن خالد، مثله. والحكمة الاصابة في غير النبوة
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஸைத் (பின் ஹாரிஸா-ரலி) அவர்களும் ஜஅஃபர் (பின் அபீதாலிப்-ரலி) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) உயிர்நீத்துவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்துசேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப்பெற்று மக்களுக்கு) நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். “(முதலில்) இஸ்லாமியச் சேனையின் கொடியை ஸைத் (தமது கையில்) எடுத்தார்; அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஅஃபர் (தமது கையில்) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு இப்னு ரவாஹா (தம் கையில் கொடியை) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன. இறுதியில் அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் பின் அல்வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரது கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்துவிட்டான்” என்று (போர்க்கள நிகழ்ச்சிகளை விவரித்துச்) சொன்னார்கள்.141 அத்தியாயம் :
حدثنا احمد بن واقد، حدثنا حماد بن زيد، عن ايوب، عن حميد بن هلال، عن انس رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم نعى زيدا وجعفرا وابن رواحة للناس قبل ان ياتيهم خبرهم، فقال " اخذ الراية زيد فاصيب، ثم اخذ جعفر فاصيب، ثم اخذ ابن رواحة فاصيب وعيناه تذرفان حتى اخذ سيف من سيوف الله حتى فتح الله عليهم
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றியப் பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “அவர் எத்தகைய மனிதரென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், அபூஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை பின் கஅப், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்லி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா, முஆத் (ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா (இவர்களிரு வரில் யாரை முதலில் குறிப்பிட்டார்) என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن عمرو بن مرة، عن ابراهيم، عن مسروق، قال ذكر عبد الله عند عبد الله بن عمرو، فقال ذاك رجل لا ازال احبه بعد ما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " استقريوا القران من اربعة من عبد الله بن مسعود، فبدا به، وسالم مولى ابي حذيفة، وابى بن كعب، ومعاذ بن جبل ". قال لا ادري بدا بابى او بمعاذ
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن سليمان، قال سمعت ابا وايل، قال سمعت مسروقا، قال قال عبد الله بن عمرو ان رسول الله صلى الله عليه وسلم لم يكن فاحشا ولا متفحشا وقال " ان من احبكم الى احسنكم اخلاقا ". وقال " استقريوا القران من اربعة من عبد الله بن مسعود، وسالم مولى ابي حذيفة، وابى بن كعب، ومعاذ بن جبل
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن سليمان، قال سمعت ابا وايل، قال سمعت مسروقا، قال قال عبد الله بن عمرو ان رسول الله صلى الله عليه وسلم لم يكن فاحشا ولا متفحشا وقال " ان من احبكم الى احسنكم اخلاقا ". وقال " استقريوا القران من اربعة من عبد الله بن مسعود، وسالم مولى ابي حذيفة، وابى بن كعب، ومعاذ بن جبل
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குள் சென்று (பள்ளிவாசலில்) இரண்டு ரக்அத்கள் தொழுதேன். அப்போது, “இறைவா! எனக்கு ஒரு நண்பரை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித் தேன். அப்போது முதியவர் ஒருவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவர் அருகே வந்ததும், “அல்லாஹ் என் பிரார்த்தனைக்குப் பதிலளித்து விட்டதாக நம்புகிறேன்” என்று சொன்னேன். அந்த முதியவர், “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். “நான் கூஃபாவாசி” என்று பதிலளித்தேன். அவர், “நபி (ஸல்) அவர்களின் காலணிகளையும் தலையணையையும் தண்ணீர்க் குவளையையும் (சுமந்து பணிவிடை புரிந்து)கொண்டிருந்தவர் (இப்னு மஸ்ஊத் -ரலி) உங்களிடையே இல்லையா? ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப்பட்டவர் (அம்மார்-ரலி) உங்களிடையே இல்லையா? நபி (ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைஃபா -ரலி) உங்களிடையே இல்லையா?” என்று கேட்டார். “உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலி) “வல்லய்லி' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் அத்தியாயம் 92ன்) இறைவசனங்களை எப்படி ஓதினார்கள்?” என்று மேலும் கேட்டார்கள். நான், “வல்லய்லி இதா யஃக்ஷா வந்நஹாரி இதா தஜல்லா வத்தகரி வல்உன்ஸா' என்று (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதுவதைப் போன்று) ஓதிக்காட்டினேன். அம்முதியவர், “நபி (ஸல்) அவர்கள் தமது வாயால் (இவ்வாறே) எனக்கு அதை ஓதிக்கொடுத்தார்கள். ஆனால், (ஷாம் வாசிகளான) இவர்கள் (அதை விட்டு விட்டுப் புதிய முறையில் ஓதும்படி) என்னைத் திருப்ப முனைந்துகொண்டே யிருந்தனர்” என்று சொன்னார்கள்.145 அத்தியாயம் :
حدثنا موسى، عن ابي عوانة، عن مغيرة، عن ابراهيم، عن علقمة، دخلت الشام فصليت ركعتين، فقلت اللهم يسر لي جليسا. فرايت شيخا مقبلا، فلما دنا قلت ارجو ان يكون استجاب. قال من اين انت قلت من اهل الكوفة. قال افلم يكن فيكم صاحب النعلين والوساد والمطهرة اولم يكن فيكم الذي اجير من الشيطان اولم يكن فيكم صاحب السر الذي لا يعلمه غيره كيف قرا ابن ام عبد {والليل} فقرات {والليل اذا يغشى * والنهار اذا تجلى * والذكر والانثى}. قال اقرانيها النبي صلى الله عليه وسلم فاه الى في، فما زال هولاء حتى كادوا يردوني
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அழகிய தோற்றத்திலும் நடைமுறை யிலும் நபி (ஸல்) அவர்களை ஏறக் குறைய ஒத்திருக்கும் ஒரு மனிதரை நாங்கள் பின்பற்றி நடப்பதற்காக (எங்களுக்குக் காட்டும்படி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்டோம். அவர்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு அழகிய தோற் றத்திலும், போக்கிலும், நடத்தையிலும் கிட்டத்தட்ட ஒத்தவராக உம்மு அப்தின் மகனை (இப்னு மஸ்ஊதை-ரலி) அவர்களைவிட வேறெவரையும் நான் அறியமாட்டேன்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن ابي اسحاق، عن عبد الرحمن بن يزيد،، قال سالنا حذيفة عن رجل، قريب السمت والهدى من النبي صلى الله عليه وسلم حتى ناخذ عنه فقال ما اعرف احدا اقرب سمتا وهديا ودلا بالنبي صلى الله عليه وسلم من ابن ام عبد
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம்.146 அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம். அத்தியாயம் :
حدثني محمد بن العلاء، حدثنا ابراهيم بن يوسف بن ابي اسحاق، قال حدثني ابي، عن ابي اسحاق، قال حدثني الاسود بن يزيد، قال سمعت ابا موسى الاشعري رضى الله عنه يقول قدمت انا واخي من اليمن، فمكثنا حينا ما نرى الا ان عبد الله بن مسعود رجل من اهل بيت النبي صلى الله عليه وسلم، لما نرى من دخوله ودخول امه على النبي صلى الله عليه وسلم
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள், தம்மிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப்பின் ஒரு ரக்அத் வித்ர் தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றார். (முஆவியா (ரலி) அவர்கள் ஒரு ரக்அத் வித்ர் தொழுத விஷயத்தைச் சொன்னார்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அவரை (அப்படியே தொழ) விட்டுவிடு. ஏனெனில், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا الحسن بن بشر، حدثنا المعافى، عن عثمان بن الاسود، عن ابن ابي مليكة، قال اوتر معاوية بعد العشاء بركعة وعنده مولى لابن عباس، فاتى ابن عباس فقال دعه، فانه صحب رسول الله صلى الله عليه وسلم
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் நம்பிக்கையாளர்களின் தலைவர் முஆவியா (ரலி) அவர்கள் விஷயமாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? ஏனெனில், அவர் வித்ரை ஒரேயொரு ரக்அத்தாகத் தான் தொழுகிறார்” என்று கூறப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “முஆவியா (மார்க்கச்) சட்டநிபுணர் ஆவார்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابن ابي مريم، حدثنا نافع بن عمر، حدثني ابن ابي مليكة، قيل لابن عباس هل لك في امير المومنين معاوية، فانه ما اوتر الا بواحدة. قال انه فقيه
ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டி ருந்த நாங்கள், நபியவர்கள் தொழக் கண்டிராத ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்களையும்-அஸ்ர் தொழுகைக்குப்பின் (உங்களில் சிலர் தொழுகின்ற) இரு ரக்அத்களையும்- தொழ வேண்டாமென்று தடை விதித் துள்ளார்கள்” என்று கூறினார்கள்.148 அத்தியாயம் :
حدثني عمرو بن عباس، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن ابي التياح، قال سمعت حمران بن ابان، عن معاوية رضى الله عنه قال انكم لتصلون صلاة لقد صحبنا النبي صلى الله عليه وسلم فما رايناه يصليها، ولقد نهى عنهما، يعني الركعتين بعد العصر
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திமா என்னில் ஒரு பகுதி யாவார். எனவே, அவருக்குக் கோப மூட்டியவர் எனக்குக் கோபமூட்டிய வராவார். இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.151 அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا ابن عيينة، عن عمرو بن دينار، عن ابن ابي مليكة، عن المسور بن مخرمة رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال " فاطمة بضعة مني، فمن اغضبها اغضبني