ஹதீஸ்கள்
#3761
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குள் சென்று (பள்ளிவாசலில்) இரண்டு ரக்அத்கள் தொழுதேன். அப்போது, “இறைவா! எனக்கு ஒரு நண்பரை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித் தேன். அப்போது முதியவர் ஒருவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவர் அருகே வந்ததும், “அல்லாஹ் என் பிரார்த்தனைக்குப் பதிலளித்து விட்டதாக நம்புகிறேன்” என்று சொன்னேன். அந்த முதியவர், “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். “நான் கூஃபாவாசி” என்று பதிலளித்தேன். அவர், “நபி (ஸல்) அவர்களின் காலணிகளையும் தலையணையையும் தண்ணீர்க் குவளையையும் (சுமந்து பணிவிடை புரிந்து)கொண்டிருந்தவர் (இப்னு மஸ்ஊத் -ரலி) உங்களிடையே இல்லையா? ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப்பட்டவர் (அம்மார்-ரலி) உங்களிடையே இல்லையா? நபி (ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைஃபா -ரலி) உங்களிடையே இல்லையா?” என்று கேட்டார். “உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலி) “வல்லய்லி' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் அத்தியாயம் 92ன்) இறைவசனங்களை எப்படி ஓதினார்கள்?” என்று மேலும் கேட்டார்கள். நான், “வல்லய்லி இதா யஃக்ஷா வந்நஹாரி இதா தஜல்லா வத்தகரி வல்உன்ஸா' என்று (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதுவதைப் போன்று) ஓதிக்காட்டினேன். அம்முதியவர், “நபி (ஸல்) அவர்கள் தமது வாயால் (இவ்வாறே) எனக்கு அதை ஓதிக்கொடுத்தார்கள். ஆனால், (ஷாம் வாசிகளான) இவர்கள் (அதை விட்டு விட்டுப் புதிய முறையில் ஓதும்படி) என்னைத் திருப்ப முனைந்துகொண்டே யிருந்தனர்” என்று சொன்னார்கள்.145 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3761
- Book Index
- 106
Grades
- -