ஹதீஸ்கள்
#3753
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அப்துர் ரஹ்மான் பின் அபீ நுஅம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (இராக்வாசி) ஒருவர் இஹ்ராம் கட்டியவரைக் குறித்து வினவினார். -அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், “இஹ்ராம் கட்டியவர் ஈயைக் கொல்வது (அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது) குறித்துக் கேட்டார் என எண்ணுகிறேன்” என்று கூறுகிறார்- அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இராக்வாசிகள் ஈயைக் (கொல்ல அனுமதியுண்டா இல்லையா என்பது) குறித்துக் கேட்கிறார்கள். அவர்களோ ஏற்கெனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளின் மகனை (ஹுசைனை)க் கொன்றுவிட்டார்கள். (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் இருவரும் (ஹசன் (ரலி) அவர்களும் ஹுசைன் (ரலி) அவர்களும்) உலகின் இரு துளசி மலர்கள் ஆவர்” என்று (அவர்களைக் குறித்து) சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.134 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3753
- Book Index
- 98
Grades
- -