Loading...

Loading...
நூல்கள்
௨௭௩ ஹதீஸ்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இறுதி நாட்களில்) நோயுற்றிருந்தபோது. மக்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்களை (இமாமாக நின்று) தொழுவிக்குமாறு பணித்தார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். (இதன் அறிவிப்பாளரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தமது நோய் சற்றுக் குறைந் திருக்கக் கண்டபோது (இரண்டு மனிதர் களைப் பிடித்துக்கொண்டு) புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு இமாமாக நின்று தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், பின்வாங்க முயன்றார்கள். “அப்படியே இருங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்துவிட்டு, அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்ந்தார்கள். அப்போது மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதுகொண்டிருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதுகொண்டிருந்தார்கள்.23 அத்தியாயம் :
حدثنا زكرياء بن يحيى، قال حدثنا ابن نمير، قال اخبرنا هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت امر رسول الله صلى الله عليه وسلم ابا بكر ان يصلي بالناس في مرضه، فكان يصلي بهم. قال عروة فوجد رسول الله صلى الله عليه وسلم في نفسه خفة، فخرج فاذا ابو بكر يوم الناس، فلما راه ابو بكر استاخر، فاشار اليه ان كما انت، فجلس رسول الله صلى الله عليه وسلم حذاء ابي بكر الى جنبه، فكان ابو بكر يصلي بصلاة رسول الله صلى الله عليه وسلم والناس يصلون بصلاة ابي بكر
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குபாவில் இருந்த பனூ அம்ர் குலத் தாரிடையே தகராறு நிகழ்ந்துவிட்டதாகச் செய்தி வந்ததையொட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடையே சமாதானம் செய்வதற்காக அவர்களை நோக்கிச் சென்றுவிட்டார்கள். அப்போது (அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்துவிட்டது. (நபி (ஸல்) அவர்கள் வரத் தாமதமாகவே) தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “நீங்கள் மக்களுக்கு (தலைமை தாங்கி)த் தொழுகை நடத்துகிறீர்களா, நான் இகாமத் சொல்கிறேன்?” என்று கேட்டார்கள் “ஆம் (அவ்வாறே செய்வோம்)” என்று கூறிவிட்டு, அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தலைமை தாங்கி) தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் (தொழுகை வரிசைகளை) விலக்கிக்கொண்டு (முதல்) வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வந்துவிட்டதைத் தெரிவிக்க) கை தட்டினார்கள். (பொதுவாக) அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப்பார்க்கமாட்டார்கள்; மக்கள் கை தட்டுவது அதிகரித்தபோது திரும்பிப் பார்த்தார்கள். (அங்கே முதல் வரிசையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி “அங்கேயே இருங்கள்” என்று சைகை செய்தார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு தம்மை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணித்ததற்காக (இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில்) தம் கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கி (திரும்பாமல் அப்படியே முதல்) வரிசையில் சேர்ந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே சென்று (நின்று) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும். “அபூபக்ரே! நான் உங்களை (அங்கேயே நின்று தொழுவிக்குமாறு) பணித்தும் நீங்கள் ஏன் அங்கேயே நிற்கவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதி இல்லை” என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து), “நீங்கள் அதிகமாகக் கைத்தட்டக் கண்டேனே, ஏன்? ஒருவருக்கு அவரது தொழுகையில் ஏதேனும் ஐயம் (ஆட்சேபம்) ஏற்பட்டால், அவர் (அதை உணர்த்தும் முகமாக) இறைவனை (‘சுப்ஹானல்லாஹ்’-அல்லாஹ் தூயவன் எனக் கூறி)த் துதிக்கட்டும். ஏனெனில், அவர் இறைவனைத் துதிக்கும்போது, அவர் பக்கம் கவனம் செலுத்தப்படும். கைத்தட்டும் முறை பெண்களுக்குரியதாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن ابي حازم بن دينار، عن سهل بن سعد الساعدي، ان رسول الله صلى الله عليه وسلم ذهب الى بني عمرو بن عوف ليصلح بينهم فحانت الصلاة فجاء الموذن الى ابي بكر فقال اتصلي للناس فاقيم قال نعم. فصلى ابو بكر، فجاء رسول الله صلى الله عليه وسلم والناس في الصلاة، فتخلص حتى وقف في الصف، فصفق الناس وكان ابو بكر لا يلتفت في صلاته فلما اكثر الناس التصفيق التفت فراى رسول الله صلى الله عليه وسلم، فاشار اليه رسول الله صلى الله عليه وسلم ان امكث مكانك، فرفع ابو بكر رضى الله عنه يديه، فحمد الله على ما امره به رسول الله صلى الله عليه وسلم من ذلك، ثم استاخر ابو بكر حتى استوى في الصف، وتقدم رسول الله صلى الله عليه وسلم فصلى، فلما انصرف قال " يا ابا بكر ما منعك ان تثبت اذ امرتك ". فقال ابو بكر ما كان لابن ابي قحافة ان يصلي بين يدى رسول الله صلى الله عليه وسلم. فقال رسول الله صلى الله عليه وسلم " ما لي رايتكم اكثرتم التصفيق من رابه شىء في صلاته فليسبح، فانه اذا سبح التفت اليه، وانما التصفيق للنساء
மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பனூ லைஸ் தூதுக் குழுவில்) இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவுக்குச்) சென்று ஏறத்தாழ இருபது நாட்கள் அவர்களிடம் தங்கியிருந்தோம். -நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாக இருந்தார் கள்.- (பிறகு நாங்கள் எங்கள் குடும்பத் தாரிடம் திரும்பிச் செல்ல ஆசைப் படுவதை அறிந்தார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றால் நீங்கள் (கற்றிருப்பதை) அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங் கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்” என்று கூறினார்கள்.24 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا حماد بن زيد، عن ايوب، عن ابي قلابة، عن مالك بن الحويرث، قال قدمنا على النبي صلى الله عليه وسلم ونحن شببة، فلبثنا عنده نحوا من عشرين ليلة، وكان النبي صلى الله عليه وسلم رحيما فقال " لو رجعتم الى بلادكم فعلمتموهم، مروهم فليصلوا صلاة كذا في حين كذا، وصلاة كذا في حين كذا، واذا حضرت الصلاة فليوذن لكم احدكم، وليومكم اكبركم
இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (‘என் வீட்டில் தொழவாருங்கள்’ என்று நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று வந்த) நபி (ஸல்) அவர்கள், “என் வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதியளித்தேன். “உங்கள் வீட்டில் நான் எந்த இடத்தில் தொழ வேண்டுமென நீங்கள் விரும்பு கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான் விரும்பிய இடத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்றார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம் (தொழுதோம்). பின்னர் அவர்கள் ‘சலாம்’ கொடுத்தார்கள்; நாங்களும் ‘சலாம்’ கொடுத்தோம்.25 அத்தியாயம் :
حدثنا معاذ بن اسد، اخبرنا عبد الله، اخبرنا معمر، عن الزهري، قال اخبرني محمود بن الربيع، قال سمعت عتبان بن مالك الانصاري، قال استاذن النبي صلى الله عليه وسلم فاذنت له فقال " اين تحب ان اصلي من بيتك ". فاشرت له الى المكان الذي احب، فقام وصففنا خلفه ثم سلم وسلمنا
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறுதி நாட்களில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் என்று (கூறி விட்டுப் பின்வருமாறு) சொன்னார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானது. அந்த (இஷா) நேரத்தில், “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை, அல்லாஹ் வின் தூதரே! அவர்கள் உங்களை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினோம். அப்போது, “தண்ணீர் தொட்டி யில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குளித்துவிட்டு எழ முயன்றார்கள். அப்போது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் அவர் களின் மயக்கம் தெளிந்தபோது, “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன் னோம். அப்போது “தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். (அவ்வாறே நாங்கள் வைத்தபோது) அவர்கள் உட்கார்ந்து குளித்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்டபோது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் மயக்கம் தெளிந்தபோது, “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள் “இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக் கின்றனர் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினோம். அப்போதும் “தண்ணீர் தொட்டி யில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்” என்று கூறினார்கள். (நாங்கள் தண்ணீர் வைத் தோம்.) அவர்கள் உட்கார்ந்து குளித்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்டபோது (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது (அப்போதும்,) “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டி ருக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே!” என்றோம்.-அப்போது மக்கள் இஷா தொழுகைக்காக நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாச-ல் வீற்றிருந் தனர்.- ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (தூதர் ஒருவரை) அனுப்பி, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள்” என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் -அன்னார் இளகிய மனம் உடையவராக இருந்தார்கள்- “உமரே! நீங்கள் மக்களுக் குத் தொழுகை நடத்துங்கள்” என்று (உமர் (ரலி) அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இதற்கு நீங்கள்தான் (என்னைவிடத்) தகுதியுடையவர்” என்று அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறிவிட்டார் கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்கு இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். பின்னர் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் தமது நோய் சற்றுக் குறைந்திருப்பதைக் கண்டபோது, இரண்டு பேருக்கிடையே (கைத்தாங்கலாக) லுஹ்ர் தொழுகைக்காகப் புறப்பட்டு வந்தார்கள்.- அந்த இரண்டு பேரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒருவராவார்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கிட முயன்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், பின்வாங்க வேண்டாமென அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மை அழைத்து வந்த இருவரிடமும்) “என்னை அபூபக்ர் அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார வையுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தி னர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து தொழ, அவர்களைப் பின்பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் (நின்று) தொழு தார்கள். மக்கள் அபூபக்ரைப் பின்பற்றித் தொழலானார்கள். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தது குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் கூறியதை நான் உங்களிடம் எடுத்துரைக்கட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், “சொல்லுங்கள்” என்றார் கள். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதில் எதையும் அவர்கள் மறுக்கவில்லை. ஆயினும், “ஆயிஷா (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுடனிருந்த அந்த வேறொரு மனிதரின் பெயரை உம்மிடம் குறிப்பிட்டார்களா?” எனக் கேட்டார்கள். நான், “இல்லை (குறிப்பிடவில்லை)” என்று சொன்னேன். “அவர்தான் அலீ (ரலி)” என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் அத்தியாயம் :
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரையிலிருந்து விழுந்ததால்) உடல் நலிவுற்றார்கள். அப்போது தமது இல்லத்தில் (மாடியறையில்) உட்கார்ந்தபடியே தொழுதார்கள். (அவர்களை உடல் நலம் விசாரிக்க வந்திருந்த) மக்கள் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்றபடி தொழுதனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம், ‘உட்காருங்கள்’ என்று சைகை செய்தார்கள். தொழுகை முடிந்தபோது, “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப் பட்டுள்ளார். அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தமது தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்” என்று சொன்னார்கள்.28 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة ام المومنين، انها قالت صلى رسول الله صلى الله عليه وسلم في بيته وهو شاك، فصلى جالسا وصلى وراءه قوم قياما، فاشار اليهم ان اجلسوا، فلما انصرف قال " انما جعل الامام ليوتم به، فاذا ركع فاركعوا، واذا رفع فارفعوا، واذا صلى جالسا فصلوا جلوسا
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கீழே விழுந்து விட்டார்கள். அதனால் அவர்களது வலப்புற விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. ஆகவே, (கடமையான) தொழு கைகளில் ஒன்றை அவர்கள் உட்கார்ந்த படியே தொழு(வித்)தார்கள். ஆகவே, நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தபடியே தொழுதோம். தொழுகை முடிந்தபோது, “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப் பட்டுள்ளார்; அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்; அவர் குனிந்தால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.) என்று சொன்னால், நீங்கள் ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்றே தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள்” என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: அப்துல்லாஹ் பின் அஸ்ஸபீர் அல் ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முன்பொரு முறை நோய்வாய்ப்பட்டி ருந்தபோதே நபி (ஸல்) அவர்கள், “இமாம் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட் கார்ந்தே தொழுங்கள்” என்று சொன்னார் கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) உட்கார்ந்து தொழுத போது, (அவர்களுக்குப் பின்னா-ருந்த) மக்கள் நின்றே தொழுதனர். அவர்களை உட்காருமாறு நபி (ஸல்) அவர்கள் பணிக்கவில்லை. (பொதுவாக நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்களில்) எது இறுதியிலும் இறுதியாக இருக்கிறதோ அதையே எடுத்துக்கொள்ள வேண்டும். (எனவே, இமாம் உட்கார்ந்து தொழுதால், பின்பற்று பவர்களும் உட்கார்ந்து தொழ வேண்டும் எனும் விதி மாற்றப்பட்டுவிட்டது.) அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن ابن شهاب، عن انس بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم ركب فرسا فصرع عنه، فجحش شقه الايمن، فصلى صلاة من الصلوات وهو قاعد، فصلينا وراءه قعودا، فلما انصرف قال " انما جعل الامام ليوتم به، فاذا صلى قايما فصلوا قياما، فاذا ركع فاركعوا، واذا رفع فارفعوا، واذا قال سمع الله لمن حمده. فقولوا ربنا ولك الحمد. واذا صلى قايما فصلوا قياما، واذا صلى جالسا فصلوا جلوسا اجمعون ". قال ابو عبد الله قال الحميدي قوله " اذا صلى جالسا فصلوا جلوسا ". هو في مرضه القديم، ثم صلى بعد ذلك النبي صلى الله عليه وسلم جالسا والناس خلفه قياما، لم يامرهم بالقعود، وانما يوخذ بالاخر فالاخر من فعل النبي صلى الله عليه وسلم
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவரான பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னை புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறி (ருகூஉவிலிருந்து எழுந்தால் நாங்களும் எழுவோம், பின்னர்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யாத வரை எங்களில் யாரும் தமது முதுகை (சிரவணக்கத்திற்காக) வளைக்கமாட்டார்; அவர்கள் (சிரவணக் கத்திற்குச் சென்ற) பின்புதான் நாங்கள் சிரவணக்கம் செய்வோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى بن سعيد، عن سفيان، قال حدثني ابو اسحاق، قال حدثني عبد الله بن يزيد، قال حدثني البراء وهو غير كذوب قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قال سمع الله لمن حمده. لم يحن احد منا ظهره حتى يقع النبي صلى الله عليه وسلم ساجدا، ثم نقع سجودا بعده
حدثنا ابو نعيم، عن سفيان، عن ابي اسحاق، نحوه بهذا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தமது தலையை உயர்த்துவதால் அவரது தலையைக் கழுதையின் தலையாக அல்லாஹ் ஆக்கி விடுவதை, அல்லது அவரது உருவத்தைக் கழுதையின் உருவமாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அஞ்ச வேண்டாமா?29 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، قال حدثنا شعبة، عن محمد بن زياد، سمعت ابا هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " اما يخشى احدكم او لا يخشى احدكم اذا رفع راسه قبل الامام ان يجعل الله راسه راس حمار او يجعل الله صورته صورة حمار
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முதல் கட்டமாக (மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து வந்த) முஹாஜிர்கள்-குபா பகுதியில் உள்ள- ‘அல்உஸ்பா’ எனும் இடத்திற்கு வந்(து சேர்ந்)தபோது, அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த சா-ம் (ரலி) அவர்களே அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். இது நபி (ஸல்) அவர்கள் புலம்பெயர்ந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சா-ம்) மற்றவர்களைவிடக் குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، قال حدثنا انس بن عياض، عن عبيد الله، عن نافع، عن ابن عمر، قال لما قدم المهاجرون الاولون العصبة موضع بقباء قبل مقدم رسول الله صلى الله عليه وسلم كان يومهم سالم مولى ابي حذيفة، وكان اكثرهم قرانا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலர்ந்த திராட்சை போன்ற தலை யுடைய அபிசீனிய (கறுப்பு நிற அடிமை யொருவ)ர் உங்களுக்குத் தலைவராக்கப் பட்டாலும் (அவருக்குச்) செவிசாயுங்கள்; கீழ்ப்படியுங்கள். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا يحيى، حدثنا شعبة، قال حدثني ابو التياح، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " اسمعوا واطيعوا، وان استعمل حبشي كان راسه زبيبة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இமாமாகத் தொழுவிக்கின்ற) அவர்கள் உங்களுக்காகத் தொழுகை நடத்து கிறார்கள். அவர்கள் சரியாகத் தொழுதால், உங்களுக்கும் நன்மை உண்டு; அவர்களுக்கும் நன்மை உண்டு. அவர்கள் தவறு செய்தால், (நீங்கள் சரியாகத் தொழுததற்காக) உங்களுக்கு நன்மை உண்டு; (தவறிழைத்ததற்காக) அவர்களுக்குத் தீமை உண்டு.31 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا الفضل بن سهل، قال حدثنا الحسن بن موسى الاشيب، قال حدثنا عبد الرحمن بن عبد الله بن دينار، عن زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " يصلون لكم، فان اصابوا فلكم، وان اخطيوا فلكم وعليهم
உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகை யிடப்பட்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று, “நீங்கள் மக்கள் தலைவர் ஆவீர்கள். நீங்கள் காணும் சோதனை (முற்றுகை) உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் (இன்று) எங்களுக்குக் குழப்பவாதத் தலைவர் தொழுகை நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால் நாங்கள் (பாவத்தில் வீழ்கிறோமோ என்ற அச்சத்தில்) மன வேதனை அடைகிறோம். (எனவே, அவருக்குப் பின்னால் நாங்கள் தொழலாமா?)” என்று கேட்டேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “தொழுகை, மக்கள் செய்கின்ற செயல் களிலேயே மிக நல்ல செயலாகும். மக்கள் நன்மை செய்தால் நீங்களும் நன்மை செய்யுங்கள். அவர்கள் தவறிழைத்தால் அவர்கள் இழைக்கும் தவறுகளி-ருந்து நீங்கள் ஒதுங்கிவிடுங்கள்” என்று சொன்னார்கள். முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தவிர்க்க முடியாத காரணமிருந்தால் தவிர, (ஆணும் பெண்ணும் அல்லாத) அரவானிக்குப் பின்னால் தொழக் கூடாது என்றே நாம் கருதுகிறோம். அத்தியாயம் :
قال ابو عبد الله وقال لنا محمد بن يوسف حدثنا الاوزاعي، حدثنا الزهري، عن حميد بن عبد الرحمن، عن عبيد الله بن عدي بن خيار، انه دخل على عثمان بن عفان رضى الله عنه وهو محصور فقال انك امام عامة، ونزل بك ما ترى ويصلي لنا امام فتنة ونتحرج. فقال الصلاة احسن ما يعمل الناس، فاذا احسن الناس فاحسن معهم، واذا اساءوا فاجتنب اساءتهم. وقال الزبيدي قال الزهري لا نرى ان يصلى خلف المخنث الا من ضرورة لا بد منها
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம், “(உங்களுக்குத் தலைவராக் கப்படுபவர்) உலர்ந்த திராட்சை போன்ற தலையுடைய அபிசீனியராயிருப்பினும், அவருக்கு நீங்கள் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن ابان، حدثنا غندر، عن شعبة، عن ابي التياح، انه سمع انس بن مالك، قال النبي صلى الله عليه وسلم لابي ذر " اسمع واطع، ولو لحبشي كان راسه زبيبة
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ல்) இஷா தொழுகை தொழுதுவிட்டு (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்துவிட்டு) நின்றார்கள். நான் சென்று (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் என்னைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அவர்களது குறட்டைச் சப்தத்தை நான் கேட்குமளவுக்கு உறங்கினார்கள். பின்னர் (சுப்ஹு) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்33 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا شعبة، عن الحكم، قال سمعت سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال بت في بيت خالتي ميمونة فصلى رسول الله صلى الله عليه وسلم العشاء، ثم جاء فصلى اربع ركعات ثم نام، ثم قام فجيت فقمت عن يساره، فجعلني عن يمينه، فصلى خمس ركعات، ثم صلى ركعتين، ثم نام حتى سمعت غطيطه او قال خطيطه ثم خرج الى الصلاة
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயாரும், நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் வீட்டில் ஓர் இரவு) உறங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நபியவர்கள் (சிறிது நேரம் உறங்கி எழுந்து) அங்கத் தூய்மை செய்துவிட்டு நின்று தொழுதார்கள். நான் சென்று அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் (தொழுகை யில் இருந்தவாறே) என்னைப் பிடித்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் குறட்டை விடும் அளவுக்கு உறங்கினார்கள். -(பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள்.- பிறகு தொழுகை அறிவிப்பாளர் அவர்களிடம் வந்(து தொழுகை நடத்த அவர்களை அழைத்)தபோது (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டுச் சென்று, (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே (சுப்ஹு தொழுகையைத்) தொழு(வித்)தார்கள். (அவர்களின் கண்கள் உறங்கினாலும் உள்ளம் உறங்குவதில்லை.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (நான்காவது அறிவிப்பாளரான) அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் புகைர் (பின் அப்துல்லாஹ் பின் அல்அஷஜ்-ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், “இவ்வாறே (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) குரைப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا احمد، قال حدثنا ابن وهب، قال حدثنا عمرو، عن عبد ربه بن سعيد، عن مخرمة بن سليمان، عن كريب، مولى ابن عباس عن ابن عباس رضى الله عنهما قال نمت عند ميمونة والنبي صلى الله عليه وسلم عندها تلك الليلة، فتوضا ثم قام يصلي، فقمت على يساره، فاخذني فجعلني عن يمينه، فصلى ثلاث عشرة ركعة، ثم نام حتى نفخ وكان اذا نام نفخ ثم اتاه الموذن، فخرج فصلى ولم يتوضا. قال عمرو فحدثت به بكيرا فقال حدثني كريب بذلك
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். அந்த இரவில் (உறங்கிக் கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து (அங்கத் தூய்மை செய்துவிட்டுத்) தொழுதார்கள். நானும் எழுந்து அவர்களு டன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் எனது தலையைப் பிடித்து என்னைத் தமக்கு வலப் பக்கம் நிறுத்தினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا اسماعيل بن ابراهيم، عن ايوب، عن عبد الله بن سعيد بن جبير، عن ابيه، عن ابن عباس، قال بت عند خالتي فقام النبي صلى الله عليه وسلم يصلي من الليل، فقمت اصلي معه فقمت عن يساره، فاخذ براسي فاقامني عن يمينه
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்குத் தலைமை தாங்கி (அந்தத் தொழுகையையே மீண்டும்) தொழுவிப்பார்கள். அத்தியாயம் :
حدثنا مسلم، قال حدثنا شعبة، عن عمرو، عن جابر بن عبد الله، ان معاذ بن جبل، كان يصلي مع النبي صلى الله عليه وسلم ثم يرجع فيوم قومه
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். (ஒரு முறை மக்க ளுக்கு) முஆத் (ரலி) அவர்கள் இஷா தொழுகை தொழுவித்தபோது, (நீண்ட அத்தியாயமான) ‘அல்பகரா’வை ஓதினார் கள். அப்போது (அவர்களுக்குப் பின்னால் தொழுதுகொண்டிருந்த) ஒரு மனிதர் (தொழுகையி-ருந்து) விலகிச் சென்று விட்டார். எனவே, முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரை ஏசினார்கள் போலும். (இந்தச் செய்தி) நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது (முஆத் (ரலி) அவர்களிடம்) “(நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்ப வாதியா?” என்று மூன்று முறை கேட்டார் கள். மேலும், நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களி-ருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர் களைப் பணித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நபி (ஸல்) அவர்கள் ஓதுமாறு பணித்த) அவ்விரு அத்தியாயங்கள் (எதுவென்பது) என் நினைவில் இல்லை. அத்தியாயம் :
وحدثني محمد بن بشار، قال حدثنا غندر، قال حدثنا شعبة، عن عمرو، قال سمعت جابر بن عبد الله، قال كان معاذ بن جبل يصلي مع النبي صلى الله عليه وسلم ثم يرجع فيوم قومه، فصلى العشاء فقرا بالبقرة، فانصرف الرجل، فكان معاذا تناول منه، فبلغ النبي صلى الله عليه وسلم فقال " فتان فتان فتان " ثلاث مرار او قال " فاتنا فاتنا فاتن " وامره بسورتين من اوسط المفصل. قال عمرو لا احفظهما
حدثنا احمد بن يونس، قال حدثنا زايدة، عن موسى بن ابي عايشة، عن عبيد الله بن عبد الله بن عتبة، قال دخلت على عايشة فقلت الا تحدثيني عن مرض رسول الله صلى الله عليه وسلم قالت بلى، ثقل النبي صلى الله عليه وسلم فقال " اصلى الناس ". قلنا لا، هم ينتظرونك. قال " ضعوا لي ماء في المخضب ". قالت ففعلنا فاغتسل فذهب لينوء فاغمي عليه، ثم افاق فقال صلى الله عليه وسلم " اصلى الناس ". قلنا لا، هم ينتظرونك يا رسول الله. قال " ضعوا لي ماء في المخضب ". قالت فقعد فاغتسل، ثم ذهب لينوء فاغمي عليه، ثم افاق فقال " اصلى الناس ". قلنا لا، هم ينتظرونك يا رسول الله. فقال " ضعوا لي ماء في المخضب "، فقعد فاغتسل، ثم ذهب لينوء فاغمي عليه، ثم افاق فقال " اصلى الناس ". فقلنا لا، هم ينتظرونك يا رسول الله والناس عكوف في المسجد ينتظرون النبي عليه السلام لصلاة العشاء الاخرة فارسل النبي صلى الله عليه وسلم الى ابي بكر بان يصلي بالناس، فاتاه الرسول فقال ان رسول الله صلى الله عليه وسلم يامرك ان تصلي بالناس. فقال ابو بكر وكان رجلا رقيقا يا عمر صل بالناس. فقال له عمر انت احق بذلك. فصلى ابو بكر تلك الايام، ثم ان النبي صلى الله عليه وسلم وجد من نفسه خفة فخرج بين رجلين احدهما العباس لصلاة الظهر، وابو بكر يصلي بالناس، فلما راه ابو بكر ذهب ليتاخر فاوما اليه النبي صلى الله عليه وسلم بان لا يتاخر. قال " اجلساني الى جنبه ". فاجلساه الى جنب ابي بكر. قال فجعل ابو بكر يصلي وهو ياتم بصلاة النبي صلى الله عليه وسلم والناس بصلاة ابي بكر، والنبي صلى الله عليه وسلم قاعد. قال عبيد الله فدخلت على عبد الله بن عباس فقلت له الا اعرض عليك ما حدثتني عايشة عن مرض النبي صلى الله عليه وسلم قال هات. فعرضت عليه حديثها، فما انكر منه شييا، غير انه قال اسمت لك الرجل الذي كان مع العباس قلت لا. قال هو علي