ஹதீஸ்கள்
#689
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கீழே விழுந்து விட்டார்கள். அதனால் அவர்களது வலப்புற விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. ஆகவே, (கடமையான) தொழு கைகளில் ஒன்றை அவர்கள் உட்கார்ந்த படியே தொழு(வித்)தார்கள். ஆகவே, நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தபடியே தொழுதோம். தொழுகை முடிந்தபோது, “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப் பட்டுள்ளார்; அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்; அவர் குனிந்தால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.) என்று சொன்னால், நீங்கள் ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்றே தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள்” என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: அப்துல்லாஹ் பின் அஸ்ஸபீர் அல் ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முன்பொரு முறை நோய்வாய்ப்பட்டி ருந்தபோதே நபி (ஸல்) அவர்கள், “இமாம் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட் கார்ந்தே தொழுங்கள்” என்று சொன்னார் கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) உட்கார்ந்து தொழுத போது, (அவர்களுக்குப் பின்னா-ருந்த) மக்கள் நின்றே தொழுதனர். அவர்களை உட்காருமாறு நபி (ஸல்) அவர்கள் பணிக்கவில்லை. (பொதுவாக நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்களில்) எது இறுதியிலும் இறுதியாக இருக்கிறதோ அதையே எடுத்துக்கொள்ள வேண்டும். (எனவே, இமாம் உட்கார்ந்து தொழுதால், பின்பற்று பவர்களும் உட்கார்ந்து தொழ வேண்டும் எனும் விதி மாற்றப்பட்டுவிட்டது.) அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #689
- Book Index
- 83
Grades
- -