ஹதீஸ்கள்
#690
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவரான பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னை புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறி (ருகூஉவிலிருந்து எழுந்தால் நாங்களும் எழுவோம், பின்னர்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யாத வரை எங்களில் யாரும் தமது முதுகை (சிரவணக்கத்திற்காக) வளைக்கமாட்டார்; அவர்கள் (சிரவணக் கத்திற்குச் சென்ற) பின்புதான் நாங்கள் சிரவணக்கம் செய்வோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى بن سعيد، عن سفيان، قال حدثني ابو اسحاق، قال حدثني عبد الله بن يزيد، قال حدثني البراء وهو غير كذوب قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قال سمع الله لمن حمده. لم يحن احد منا ظهره حتى يقع النبي صلى الله عليه وسلم ساجدا، ثم نقع سجودا بعده
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #690
- Book Index
- 84
Grades
- -
