ஹதீஸ்கள்
#686
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (‘என் வீட்டில் தொழவாருங்கள்’ என்று நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று வந்த) நபி (ஸல்) அவர்கள், “என் வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதியளித்தேன். “உங்கள் வீட்டில் நான் எந்த இடத்தில் தொழ வேண்டுமென நீங்கள் விரும்பு கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான் விரும்பிய இடத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்றார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம் (தொழுதோம்). பின்னர் அவர்கள் ‘சலாம்’ கொடுத்தார்கள்; நாங்களும் ‘சலாம்’ கொடுத்தோம்.25 அத்தியாயம் :
حدثنا معاذ بن اسد، اخبرنا عبد الله، اخبرنا معمر، عن الزهري، قال اخبرني محمود بن الربيع، قال سمعت عتبان بن مالك الانصاري، قال استاذن النبي صلى الله عليه وسلم فاذنت له فقال " اين تحب ان اصلي من بيتك ". فاشرت له الى المكان الذي احب، فقام وصففنا خلفه ثم سلم وسلمنا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #686
- Book Index
- 80
Grades
- -
