ஹதீஸ்கள்
#687
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறுதி நாட்களில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் என்று (கூறி விட்டுப் பின்வருமாறு) சொன்னார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானது. அந்த (இஷா) நேரத்தில், “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை, அல்லாஹ் வின் தூதரே! அவர்கள் உங்களை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினோம். அப்போது, “தண்ணீர் தொட்டி யில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குளித்துவிட்டு எழ முயன்றார்கள். அப்போது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் அவர் களின் மயக்கம் தெளிந்தபோது, “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன் னோம். அப்போது “தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். (அவ்வாறே நாங்கள் வைத்தபோது) அவர்கள் உட்கார்ந்து குளித்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்டபோது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் மயக்கம் தெளிந்தபோது, “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள் “இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக் கின்றனர் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினோம். அப்போதும் “தண்ணீர் தொட்டி யில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்” என்று கூறினார்கள். (நாங்கள் தண்ணீர் வைத் தோம்.) அவர்கள் உட்கார்ந்து குளித்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்டபோது (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது (அப்போதும்,) “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டி ருக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே!” என்றோம்.-அப்போது மக்கள் இஷா தொழுகைக்காக நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாச-ல் வீற்றிருந் தனர்.- ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (தூதர் ஒருவரை) அனுப்பி, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள்” என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் -அன்னார் இளகிய மனம் உடையவராக இருந்தார்கள்- “உமரே! நீங்கள் மக்களுக் குத் தொழுகை நடத்துங்கள்” என்று (உமர் (ரலி) அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இதற்கு நீங்கள்தான் (என்னைவிடத்) தகுதியுடையவர்” என்று அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறிவிட்டார் கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்கு இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். பின்னர் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் தமது நோய் சற்றுக் குறைந்திருப்பதைக் கண்டபோது, இரண்டு பேருக்கிடையே (கைத்தாங்கலாக) லுஹ்ர் தொழுகைக்காகப் புறப்பட்டு வந்தார்கள்.- அந்த இரண்டு பேரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒருவராவார்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கிட முயன்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், பின்வாங்க வேண்டாமென அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மை அழைத்து வந்த இருவரிடமும்) “என்னை அபூபக்ர் அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார வையுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தி னர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து தொழ, அவர்களைப் பின்பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் (நின்று) தொழு தார்கள். மக்கள் அபூபக்ரைப் பின்பற்றித் தொழலானார்கள். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தது குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் கூறியதை நான் உங்களிடம் எடுத்துரைக்கட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், “சொல்லுங்கள்” என்றார் கள். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதில் எதையும் அவர்கள் மறுக்கவில்லை. ஆயினும், “ஆயிஷா (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுடனிருந்த அந்த வேறொரு மனிதரின் பெயரை உம்மிடம் குறிப்பிட்டார்களா?” எனக் கேட்டார்கள். நான், “இல்லை (குறிப்பிடவில்லை)” என்று சொன்னேன். “அவர்தான் அலீ (ரலி)” என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، قال حدثنا زايدة، عن موسى بن ابي عايشة، عن عبيد الله بن عبد الله بن عتبة، قال دخلت على عايشة فقلت الا تحدثيني عن مرض رسول الله صلى الله عليه وسلم قالت بلى، ثقل النبي صلى الله عليه وسلم فقال " اصلى الناس ". قلنا لا، هم ينتظرونك. قال " ضعوا لي ماء في المخضب ". قالت ففعلنا فاغتسل فذهب لينوء فاغمي عليه، ثم افاق فقال صلى الله عليه وسلم " اصلى الناس ". قلنا لا، هم ينتظرونك يا رسول الله. قال " ضعوا لي ماء في المخضب ". قالت فقعد فاغتسل، ثم ذهب لينوء فاغمي عليه، ثم افاق فقال " اصلى الناس ". قلنا لا، هم ينتظرونك يا رسول الله. فقال " ضعوا لي ماء في المخضب "، فقعد فاغتسل، ثم ذهب لينوء فاغمي عليه، ثم افاق فقال " اصلى الناس ". فقلنا لا، هم ينتظرونك يا رسول الله والناس عكوف في المسجد ينتظرون النبي عليه السلام لصلاة العشاء الاخرة فارسل النبي صلى الله عليه وسلم الى ابي بكر بان يصلي بالناس، فاتاه الرسول فقال ان رسول الله صلى الله عليه وسلم يامرك ان تصلي بالناس. فقال ابو بكر وكان رجلا رقيقا يا عمر صل بالناس. فقال له عمر انت احق بذلك. فصلى ابو بكر تلك الايام، ثم ان النبي صلى الله عليه وسلم وجد من نفسه خفة فخرج بين رجلين احدهما العباس لصلاة الظهر، وابو بكر يصلي بالناس، فلما راه ابو بكر ذهب ليتاخر فاوما اليه النبي صلى الله عليه وسلم بان لا يتاخر. قال " اجلساني الى جنبه ". فاجلساه الى جنب ابي بكر. قال فجعل ابو بكر يصلي وهو ياتم بصلاة النبي صلى الله عليه وسلم والناس بصلاة ابي بكر، والنبي صلى الله عليه وسلم قاعد. قال عبيد الله فدخلت على عبد الله بن عباس فقلت له الا اعرض عليك ما حدثتني عايشة عن مرض النبي صلى الله عليه وسلم قال هات. فعرضت عليه حديثها، فما انكر منه شييا، غير انه قال اسمت لك الرجل الذي كان مع العباس قلت لا. قال هو علي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #687
- Book Index
- 81
Grades
- -
