ஹதீஸ்கள்
#695
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகை யிடப்பட்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று, “நீங்கள் மக்கள் தலைவர் ஆவீர்கள். நீங்கள் காணும் சோதனை (முற்றுகை) உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் (இன்று) எங்களுக்குக் குழப்பவாதத் தலைவர் தொழுகை நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால் நாங்கள் (பாவத்தில் வீழ்கிறோமோ என்ற அச்சத்தில்) மன வேதனை அடைகிறோம். (எனவே, அவருக்குப் பின்னால் நாங்கள் தொழலாமா?)” என்று கேட்டேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “தொழுகை, மக்கள் செய்கின்ற செயல் களிலேயே மிக நல்ல செயலாகும். மக்கள் நன்மை செய்தால் நீங்களும் நன்மை செய்யுங்கள். அவர்கள் தவறிழைத்தால் அவர்கள் இழைக்கும் தவறுகளி-ருந்து நீங்கள் ஒதுங்கிவிடுங்கள்” என்று சொன்னார்கள். முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தவிர்க்க முடியாத காரணமிருந்தால் தவிர, (ஆணும் பெண்ணும் அல்லாத) அரவானிக்குப் பின்னால் தொழக் கூடாது என்றே நாம் கருதுகிறோம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #695
- Book Index
- 90
Grades
- -