Loading...

Loading...
நூல்கள்
௧௭௨ ஹதீஸ்கள்
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (“தொழுபவருக்குக் குறுக்கே நாய், கழுதை, பெண் ஆகியோர் சென்றால், தொழுகை முறிந்துவிடும் என்று ஒருவர் கூறினார். அவரிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், “எங்களை நாய்க்கும் கழுதைக்கும் சமமாக்குகிறீர்களா? நான் கட்டிலில் ஒருக்களித்துப் சாய்ந்து படுத்திருப்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து நடுக் கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்கள் பார்வையில் படும் விதமாக படுத்திருக்கப் பிடிக்காமல் நான் கட்டி-ன் இரு கால்களினூடே நுழைந்து வெளியேறிவிடுவேன்; எனது போர்வையி-ருந்தும் நழுவிச் சென்றேவிடுவேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، قال حدثنا جرير، عن منصور، عن ابراهيم، عن الاسود، عن عايشة، قالت اعدلتمونا بالكلب والحمار لقد رايتني مضطجعة على السرير، فيجيء النبي صلى الله عليه وسلم فيتوسط السرير فيصلي، فاكره ان اسنحه فانسل من قبل رجلى السرير حتى انسل من لحافي
அபூஸா-ஹ் தக்வான் அஸ் ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்கள் தமக்கு குறுக்கே செல்லாம-ருக்கத் தடுப்பு ஒன்றை வைத்துக்கொண்டு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று தொழுது கொண்டிருப்பதை நான் கண்டேன். அப்போது பனூ அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்து செல்லப் போனார். உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் (கையை வைத்துத்) தள்ளினார்கள். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் (அவர்களைக் கடந்து) செல்வதைத் தவிர நடைபாதை யேதும் இல்லை என்பதைக் கண்ட அந்த இளைஞர், மீண்டும் அவர்களைத் தாண்டி (குறுக்கே) செல்லப்போனார். உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் முன்பைவிடக் கடுமையாக அவரைத் தள்ளினார்கள். உடனே அந்த இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களை ஏசினார். பிறகு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று அபூசயீத் (ரலி) அவர்கள் தம்மிடம் நடந்துகொண்டது பற்றி அவர் முறையிட்டார். அவருக்குப் பின்னால் அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள். அப்போது மர்வான், “உங்களுக்கும் உங்கள் சகோதரரின் புதல்வருக்கும் இடையே என்ன பிரச்சினை, அபூசயீத் அவர்களே?” என்று கேட்டார். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள், “மக்கள் தமக்குக் குறுக்கே செல்லாம-ருக்கத் தமக்கு முன்னால் ஏதேனும் ஒன்றைத் தடுப்பாக வைத்துக்கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது, யாரேனும் தமக்கு முன்னால் (குறுக்கே) கடந்துசெல்ல முயன்றால், அவரைத் தள்ளிவிடுங்கள். அவர் (விலகிக்கொள்ள) மறுத்தால், அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன்தான் ஷைத்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் (எனவேதான், இந்த இளைஞரிடம் இவ்வாறு நான் நடந்துகொண்டேன்)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو معمر، قال حدثنا عبد الوارث، قال حدثنا يونس، عن حميد بن هلال، عن ابي صالح، ان ابا سعيد، قال قال النبي صلى الله عليه وسلم وحدثنا ادم بن ابي اياس قال حدثنا سليمان بن المغيرة قال حدثنا حميد بن هلال العدوي قال حدثنا ابو صالح السمان قال رايت ابا سعيد الخدري في يوم جمعة يصلي الى شىء يستره من الناس، فاراد شاب من بني ابي معيط ان يجتاز بين يديه فدفع ابو سعيد في صدره، فنظر الشاب فلم يجد مساغا الا بين يديه، فعاد ليجتاز فدفعه ابو سعيد اشد من الاولى، فنال من ابي سعيد، ثم دخل على مروان فشكا اليه ما لقي من ابي سعيد، ودخل ابو سعيد خلفه على مروان فقال ما لك ولابن اخيك يا ابا سعيد قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " اذا صلى احدكم الى شىء يستره من الناس، فاراد احد ان يجتاز بين يديه فليدفعه، فان ابى فليقاتله، فانما هو شيطان
புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் என்னை அபூஜுஹைம் (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்து, தொழுதுகொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன கேட்டார்கள் என்பதை விசாரித்து (அறிந்து) வருமாறு கூறினார்கள். (நான் சென்று கேட்டேன்). அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுதுகொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு என்ன (பாவம்) ஏற்படும் என்பதை அறிந்தால், தொழுபவருக்கு முன்னால் செல்வதைவிட நாற்பதுவரை நிற்பது அவருக்கு நல்லதாக இருக்கும். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) அபுந்நள்ர் சா-ம் பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள், ‘நாற்பது நாட்கள்’ என்று சொன்னார்களா, அல்லது ‘நாற்பது மாதங்கள்’ என்று சொன்னார்களா, அல்லது ‘நாற்பது ஆண்டுகள்’ என்று சொன்னார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.62 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن ابي النضر، مولى عمر بن عبيد الله عن بسر بن سعيد، ان زيد بن خالد، ارسله الى ابي جهيم يساله ماذا سمع من، رسول الله صلى الله عليه وسلم في المار بين يدى المصلي فقال ابو جهيم قال رسول الله صلى الله عليه وسلم " لو يعلم المار بين يدى المصلي ماذا عليه لكان ان يقف اربعين خيرا له من ان يمر بين يديه ". قال ابو النضر لا ادري اقال اربعين يوما او شهرا او سنة
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழு கையை முறிக்கும் செயல்கள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது சிலர், (தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்லும்) “நாயும் கழுதையும் பெண்ணும் தொழு கையை முறித்துவிடுவர்” என்று கூறினர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(பெண்களாகிய) எங்களை நாய்களுக்குச் சமமாக்கிவிட்டீர்களே? நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கையில் நான் அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே கட்டி-ல் ஒருக்களித்துப் படுத்திருப்பேன். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்படும். (தொழுது கொண்டிருக்கும்) அவர்களுக்கு முன்னால் செல்ல விருப்பமில்லாமல் (நான் கட்டி--ருந்து) நழுவிச் சென்றுவிடுவேன்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسماعيل بن خليل، حدثنا علي بن مسهر، عن الاعمش، عن مسلم يعني ابن صبيح عن مسروق، عن عايشة، انه ذكر عندها ما يقطع الصلاة فقالوا يقطعها الكلب والحمار والمراة. قالت قد جعلتمونا كلابا، لقد رايت النبي عليه السلام يصلي، واني لبينه وبين القبلة، وانا مضطجعة على السرير، فتكون لي الحاجة، فاكره ان استقبله فانسل انسلالا. وعن الاعمش عن ابراهيم عن الاسود عن عايشة نحوه
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களது விரிப்பில் குறுக்கே உறங்கிக்கொண்டிருக்கையில் நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருப்பார்கள். அவர்கள் ‘வித்ர்’ தொழ எண்ணும் போது, என்னை எழுப்புவார்கள். (அதன்பின்) நான் ‘வித்ர்’ தொழுவேன். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، قال حدثنا هشام، قال حدثني ابي، عن عايشة، قالت كان النبي صلى الله عليه وسلم يصلي وانا راقدة معترضة على فراشه، فاذا اراد ان يوتر ايقظني فاوترت
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக (படுத்து) உறங்கிக்கொண்டிருப்பேன். அப்போது என் கால்கள் அவர்களது கிப்லா திசையில் (அவர்கள் ‘சிரவணக்கம்’ செய்யுமிடத்தில்) இருக்கும். அவர்கள் சிரவணக்கத்திற்கு வரும்போது என்னைத் தமது விரலால் குத்துவார்கள். உடனே நான் என் கால்களை மடக்கிக்கொள்வேன். அவர்கள் எழுந்து நின்றுவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக்கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இல்லை. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن ابي النضر، مولى عمر بن عبيد الله عن ابي سلمة بن عبد الرحمن، عن عايشة، زوج النبي صلى الله عليه وسلم انها قالت كنت انام بين يدى رسول الله صلى الله عليه وسلم ورجلاى في قبلته، فاذا سجد غمزني فقبضت رجلى، فاذا قام بسطتهما. قالت والبيوت يوميذ ليس فيها مصابيح
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழு கையை முறிப்பவை குறித்துப் பேசப்பட் டது. -“நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்கு குறுக்கே செல்வது தொழுகையை முறித்துவிடும்” என்று சிலர் கூறினர்.)- அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(பெண்களாகிய) எங்களைக் கழுதைகளுக் கும் நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்கும் இடையே கட்டி-ல் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டி ருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற்பட்டால், நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்து அவர்களுக்கு இடையூறு அளிக்கப் பிடிக்காமல் கட்டி-ன் இரு கால்களினூடே நான் நழுவிச் சென்றுவிடுவேன்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، قال حدثنا ابي قال، حدثنا الاعمش، قال حدثنا ابراهيم، عن الاسود، عن عايشة،. قال الاعمش وحدثني مسلم، عن مسروق، عن عايشة، ذكر عندها ما يقطع الصلاة الكلب والحمار والمراة فقالت شبهتمونا بالحمر والكلاب، والله لقد رايت النبي صلى الله عليه وسلم يصلي، واني على السرير بينه وبين القبلة مضطجعة فتبدو لي الحاجة، فاكره ان اجلس فاوذي النبي صلى الله عليه وسلم فانسل من عند رجليه
முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் முஸ்-ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் என் தந்தையின் சகோதரர் (முஹம்மத் பின் முஸ்-ம் பின் ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ - ரஹ்) அவர்களிடம், “எது (குறுக்கே செல்வது) தொழுகையை முறிக்கும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகையை எதுவும் முறிக்காது” என்று கூறிவிட்டு, உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் தெரிவித்ததாக (பின்வருமாறு) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து தம் குடும்பத்தாரின் விரிப் பில் தொழுவார்கள். அப்போது நான் அவர்களுக்கும் அவர்களின் கிப்லாவுக்கும் (சிரவணக்கம் செய்யும் இடத்திற்கும்) இடையே குறுக்கு வாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன். அத்தியாயம் :
حدثنا اسحاق، قال اخبرنا يعقوب بن ابراهيم، قال حدثني ابن اخي ابن شهاب، انه سال عمه عن الصلاة، يقطعها شىء فقال لا يقطعها شىء، اخبرني عروة بن الزبير ان عايشة زوج النبي صلى الله عليه وسلم قالت لقد كان رسول الله صلى الله عليه وسلم يقوم فيصلي من الليل، واني لمعترضة بينه وبين القبلة على فراش اهله
அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி ஸைனபுக்கும் - அபுல்ஆஸ் பின் ரபீஆ பின் அப்தி ஷம்ஸ் (ரலி) அவர்களுக்கும் பிறந்த (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபை (தமது தோளில்) சுமந்துகொண்டு தொழுதிருக்கிறார்கள். சிரவணக்கம் செய்யச் செல்லும்போது உமாமாவை இறக்கிவிடுவார்கள்; எழுந்து நிற்கும்போது (மீண்டும்) உமாமாவை (தமது தோளில்) தூக்கிக்கொள்வார்கள்.64 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن عامر بن عبد الله بن الزبير، عن عمرو بن سليم الزرقي، عن ابي قتادة الانصاري، ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي وهو حامل امامة بنت زينب بنت رسول الله صلى الله عليه وسلم ولابي العاص بن ربيعة بن عبد شمس، فاذا سجد وضعها، واذا قام حملها
மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனது படுக்கை விரிப்பு நபி (ஸல்) அவர்களின் தொழுகை விரிப்புக்கு அருகில் (அத்துடன் ஒட்டி) இருக்கும். சில சமயம் நான் எனது படுக்கையில் இருக்கும்போது, நபி (ஸல்) அவர்களின் ஆடை என்மீது படுவதுண்டு. அத்தியாயம் :
حدثنا عمرو بن زرارة، قال اخبرنا هشيم، عن الشيباني، عن عبد الله بن شداد بن الهاد، قال اخبرتني خالتي، ميمونة بنت الحارث قالت كان فراشي حيال مصلى النبي صلى الله عليه وسلم فربما وقع ثوبه على وانا على فراشي
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டி ருக்கும்போது அவர்களுக்கு அருகில் நான் (படுத்து) உறங்கிக்கொண்டிருப்பேன். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது அவர்களது ஆடை என்மீது படும். அப்போது நான் மாதவிடாய் ஏற்பட்ட வளாய் இருப்பேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முசத்தத் (ரஹ்) அவர்களது அறிவிப்பி லேயே, “அப்போது நான் மாதவிடாய் ஏற்பட்டவளாய் இருப்பேன்” எனும் குறிப்பு கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو النعمان، قال حدثنا عبد الواحد بن زياد، قال حدثنا الشيباني، سليمان حدثنا عبد الله بن شداد، قال سمعت ميمونة، تقول كان النبي صلى الله عليه وسلم يصلي وانا الى جنبه نايمة، فاذا سجد اصابني ثوبه، وانا حايض. وزاد مسدد عن خالد قال حدثنا سليمان الشيباني، وانا حايض
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) தொழுதுகொண்டிருக்கும்போது, நான் அவர்களுக்கும் அவர்களது கிப்லாவுக்கும் இடையே ஒருக்களித்துப் படுத்திருப்பேன். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யச் செல்லும்போது, என் கால்களைத் தொட்டு (என்னை) உணர்த்துவார்கள். உடனே நான் என் கால்களை மடக்கிக்கொள்வேன். இவ்வாறிருக்க, (‘தொழுபவருக்குக் குறுக்கே நாயும் கழுதையும் பெண்ணும் செல்வது தொழுகையை முறித்துவிடும்’ என்று கூறுவதன் மூலம் பெண்களாகிய) எங்களை நாய்க்கும் கழுதைக்கும் நீங்கள் சமமாக்கியது தவறாகும். அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، قال حدثنا يحيى، قال حدثنا عبيد الله، قال حدثنا القاسم، عن عايشة رضى الله عنها قالت بيسما عدلتمونا بالكلب والحمار، لقد رايتني ورسول الله صلى الله عليه وسلم يصلي، وانا مضطجعة بينه وبين القبلة، فاذا اراد ان يسجد غمز رجلى فقبضتهما
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுதுகொண்டிருந் தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழு ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், “(பொது இடத்தில் தொழும்) இந்தப் பகட்டுக்காரரை நீங்கள் பார்க்க வில்லையா?” என்று கூறிவிட்டு, “உங்களில் யார், இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று, அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும், அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்து, முஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவருடைய தோள்கள் மத்தியில் வைக்கத் தயார்?” என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்தபோது அவர்களு டைய தோள்கள் மத்தியில் அ(ந்த அசுத்தத்)தை அவன் போட்டான். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிரவணக்கம் செய்தவாறே இருந்தார்கள். (இதைப் பார்த்துக்கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். -அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள்.- (செய்தி அறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள். அவர்கள் வந்து அசுத்தங்களைத் தம்மைவிட்டு எடுத்தெறியும்வரை நபியவர்கள் அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) பிராத்தித்தார்கள்: “இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! இறைவா! குறைஷியரை நீ கவனித்துக்கொள்வாயாக! இறைவா! குறைஷியரை நீ கவனித்துக்கொள்வாயாக! என்று (பொதுவாகக்) கூறிவிட்டு, “அல்லாஹ்வே அம்ர் பின் ஹிஷாம் (அபூ ஜஹ்ல்), உத்பா பின் ரபிஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத், உமாரா பின் அல்வலீத் ஆகியோரை நீ கவனித் துக்கொள்வாயாக!” என்று (ஏழு பேரின்) பெயர்களைக் குறிப்பிட்டுப் பிராத்தித்தார்கள். தொடர்ந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாருக்கெதிராகப் பிராத்தித்தார்களோ அவர்களில் உமாரா பின் அல்வலீத் நீங்கலாக மற்ற) அனைவரும் பத்ருப் போர் நாளில் (உடல் உப்பி உருக்குலைந்து) மாண்டு கிடந்ததையும், பின்னர் ‘கலீபு பத்ர்’ எனும் பாழுங்கிணற்றை நோக்கி அவர்கள் இழுத்துச்செல்லப்பட்டதையும் நான் பார்த்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தப் பாழுங்கிணற்றில் உள்ளோரை (இனியும்) சாபம் தொடரும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن اسحاق السرماري، قال حدثنا عبيد الله بن موسى، قال حدثنا اسراييل، عن ابي اسحاق، عن عمرو بن ميمون، عن عبد الله، قال بينما رسول الله صلى الله عليه وسلم قايم يصلي عند الكعبة، وجمع قريش في مجالسهم اذ قال قايل منهم الا تنظرون الى هذا المرايي ايكم يقوم الى جزور ال فلان، فيعمد الى فرثها ودمها وسلاها فيجيء به، ثم يمهله حتى اذا سجد وضعه بين كتفيه فانبعث اشقاهم، فلما سجد رسول الله صلى الله عليه وسلم وضعه بين كتفيه، وثبت النبي صلى الله عليه وسلم ساجدا، فضحكوا حتى مال بعضهم الى بعض من الضحك، فانطلق منطلق الى فاطمة عليها السلام وهى جويرية، فاقبلت تسعى وثبت النبي صلى الله عليه وسلم ساجدا حتى القته عنه، واقبلت عليهم تسبهم، فلما قضى رسول الله صلى الله عليه وسلم الصلاة قال " اللهم عليك بقريش، اللهم عليك بقريش، اللهم عليك بقريش ثم سمى اللهم عليك بعمرو بن هشام، وعتبة بن ربيعة، وشيبة بن ربيعة، والوليد بن عتبة، وامية بن خلف، وعقبة بن ابي معيط، وعمارة بن الوليد ". قال عبد الله فوالله لقد رايتهم صرعى يوم بدر، ثم سحبوا الى القليب قليب بدر، ثم قال رسول الله صلى الله عليه وسلم " واتبع اصحاب القليب لعنة