ஹதீஸ்கள்
#508
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (“தொழுபவருக்குக் குறுக்கே நாய், கழுதை, பெண் ஆகியோர் சென்றால், தொழுகை முறிந்துவிடும் என்று ஒருவர் கூறினார். அவரிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், “எங்களை நாய்க்கும் கழுதைக்கும் சமமாக்குகிறீர்களா? நான் கட்டிலில் ஒருக்களித்துப் சாய்ந்து படுத்திருப்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து நடுக் கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்கள் பார்வையில் படும் விதமாக படுத்திருக்கப் பிடிக்காமல் நான் கட்டி-ன் இரு கால்களினூடே நுழைந்து வெளியேறிவிடுவேன்; எனது போர்வையி-ருந்தும் நழுவிச் சென்றேவிடுவேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، قال حدثنا جرير، عن منصور، عن ابراهيم، عن الاسود، عن عايشة، قالت اعدلتمونا بالكلب والحمار لقد رايتني مضطجعة على السرير، فيجيء النبي صلى الله عليه وسلم فيتوسط السرير فيصلي، فاكره ان اسنحه فانسل من قبل رجلى السرير حتى انسل من لحافي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #508
- Book Index
- 155
Grades
- -
