ஹதீஸ்கள்
#515
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் முஸ்-ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் என் தந்தையின் சகோதரர் (முஹம்மத் பின் முஸ்-ம் பின் ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ - ரஹ்) அவர்களிடம், “எது (குறுக்கே செல்வது) தொழுகையை முறிக்கும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகையை எதுவும் முறிக்காது” என்று கூறிவிட்டு, உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் தெரிவித்ததாக (பின்வருமாறு) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து தம் குடும்பத்தாரின் விரிப் பில் தொழுவார்கள். அப்போது நான் அவர்களுக்கும் அவர்களின் கிப்லாவுக்கும் (சிரவணக்கம் செய்யும் இடத்திற்கும்) இடையே குறுக்கு வாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன். அத்தியாயம் :
حدثنا اسحاق، قال اخبرنا يعقوب بن ابراهيم، قال حدثني ابن اخي ابن شهاب، انه سال عمه عن الصلاة، يقطعها شىء فقال لا يقطعها شىء، اخبرني عروة بن الزبير ان عايشة زوج النبي صلى الله عليه وسلم قالت لقد كان رسول الله صلى الله عليه وسلم يقوم فيصلي من الليل، واني لمعترضة بينه وبين القبلة على فراش اهله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #515
- Book Index
- 162
Grades
- -
