ஹதீஸ்கள்
#510
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் என்னை அபூஜுஹைம் (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்து, தொழுதுகொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன கேட்டார்கள் என்பதை விசாரித்து (அறிந்து) வருமாறு கூறினார்கள். (நான் சென்று கேட்டேன்). அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுதுகொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு என்ன (பாவம்) ஏற்படும் என்பதை அறிந்தால், தொழுபவருக்கு முன்னால் செல்வதைவிட நாற்பதுவரை நிற்பது அவருக்கு நல்லதாக இருக்கும். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) அபுந்நள்ர் சா-ம் பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள், ‘நாற்பது நாட்கள்’ என்று சொன்னார்களா, அல்லது ‘நாற்பது மாதங்கள்’ என்று சொன்னார்களா, அல்லது ‘நாற்பது ஆண்டுகள்’ என்று சொன்னார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.62 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #510
- Book Index
- 157
Grades
- -