ஹதீஸ்கள்
#514
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழு கையை முறிப்பவை குறித்துப் பேசப்பட் டது. -“நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்கு குறுக்கே செல்வது தொழுகையை முறித்துவிடும்” என்று சிலர் கூறினர்.)- அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(பெண்களாகிய) எங்களைக் கழுதைகளுக் கும் நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்கும் இடையே கட்டி-ல் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டி ருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற்பட்டால், நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்து அவர்களுக்கு இடையூறு அளிக்கப் பிடிக்காமல் கட்டி-ன் இரு கால்களினூடே நான் நழுவிச் சென்றுவிடுவேன்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، قال حدثنا ابي قال، حدثنا الاعمش، قال حدثنا ابراهيم، عن الاسود، عن عايشة،. قال الاعمش وحدثني مسلم، عن مسروق، عن عايشة، ذكر عندها ما يقطع الصلاة الكلب والحمار والمراة فقالت شبهتمونا بالحمر والكلاب، والله لقد رايت النبي صلى الله عليه وسلم يصلي، واني على السرير بينه وبين القبلة مضطجعة فتبدو لي الحاجة، فاكره ان اجلس فاوذي النبي صلى الله عليه وسلم فانسل من عند رجليه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #514
- Book Index
- 161
Grades
- -
