ஹதீஸ்கள்
#514
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழு கையை முறிப்பவை குறித்துப் பேசப்பட் டது. -“நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்கு குறுக்கே செல்வது தொழுகையை முறித்துவிடும்” என்று சிலர் கூறினர்.)- அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(பெண்களாகிய) எங்களைக் கழுதைகளுக் கும் நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்கும் இடையே கட்டி-ல் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டி ருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற்பட்டால், நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்து அவர்களுக்கு இடையூறு அளிக்கப் பிடிக்காமல் கட்டி-ன் இரு கால்களினூடே நான் நழுவிச் சென்றுவிடுவேன்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #514
- Book Index
- 161
Grades
- -