Loading...
Loading...
நூல்கள்
504 ஹதீஸ்கள்
(அப்துல் அஸீஸ் பின் அப்தில் மலிக்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும், அவர்களுடைய சகோதரர் அபூபக்ர் பின் அபீமுளைக்கா அவர்கள், உபைத் பின...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம்பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) வட்டி தொடர்பாக அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அவற்றை (பள்ளிவாசலில் வைத்து) ஓதிக்காட்டினார்கள். பிறகு, மது வ...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: “அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று அவற்றைப் பள்ளிவாசலில் (மக்களுக்கு) ஓதிக்கா...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்ற போது அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்து (மக்களுக்கு) ஓதிக்காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடை செய்தார்கள்...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று அவற்றை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடை செய்த...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 2:281ஆவது) வசனம் ஆகும்.81 அத்தியாயம் :
மர்வான் அல்அஸ்ஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் - அவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தான் - “உங்கள் மனத்திலுள்ள வற்றை நீங்கள் வெளியிட்டாலும், அல்லது அவற்றை மறைத்துக்கொண்டாலும் அவற்றைப் பற்றிய...
மர்வான் அல்அஸ்ஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவர் -அவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தான் என்று எண்ணுகிறேன்- “உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அல்லது அவற்றை மறைத்...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உமக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல ப...
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவருட...
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக)ப் பறித்துக்கொள்வதற்காக ஒரு பிரமாண (வாக்குமூல)த்தின்போது துணிந்து பொய்ச் சத்தியம் செய்பவர், தம்மீது கோபம்கொண்டிருக்கும் நிலையில்தான் அல்லாஹ...
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடைவீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தாம் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்தபோது) கொடுக்காத (விலை) ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (அல்லாஹ்வின் ம...
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இரு பெண்கள் “ஒரு வீட்டில்' அல்லது “ஓர் அறையில்' (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருவரின...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் தம் வாய்ப்பட எனக்கு அறிவித்ததாவது: (குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையிலான (ஹுதைபியா சமாதான ஒப்பந்தம்...
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனா (முஸ்லிம்களான) அன்சாரிகளி லேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் அதிகமான பேரீச்சந் தோட்டங்கள் உடையவராய் இருந்தார்கள். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலுக்கு எதிரேயிருந்த “ப...
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆகவே, அந்த (பைருஹா)த் தோட்டத்தை ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கும் உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் (அபூதல்ஹா (ரலி) அவர்கள் தர்மமாக) வழங்கிவிட்டார்கள். ஆனால், நான்தான் (அவ்விருவரையும்...
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரில் விபசாரம் புரிந்துவிட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்துவந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள்...
அபூஹாஸிம் சுலைமான் அல்அஷ்ஜஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கென்று தோற்றுவிக்கப் பெற்ற சமூகத்தாரில் மிகச் சிறந்தவர்களாவீர்” எனும் (3:110ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில், “நீங்கள்...
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “உங்களில் இரு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியமிழக்கத் தொடங்கிய நேரத்தையும் (நபியே! நீர் நினைவு கூர்க!)” எனும் (3:122ஆவது) இறைவசனம் (அன்சாரிகளாகிய)...