ஹதீஸ்கள்
#4552
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இரு பெண்கள் “ஒரு வீட்டில்' அல்லது “ஓர் அறையில்' (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருவரின் மீது குற்றம் சாட்டினார். இந்த வழக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டுசெல்லப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத்) தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாகப் பலிகொள்ளப்பட்டுப்) போய்விடும்' என்று சொன்னார்கள்” எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருவருக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவருக்கு, “அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை” எனும் (3:77ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவருக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி னார்கள். அவரும் தம் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக்கொண்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், “பிரதிவாதி (தமது குற்றத்தை மறுத்தால்) சத்தியம் செய்ய வேண்டும்' என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4552
- Book Index
- 74
Grades
- -