ஹதீஸ்கள்
#4550
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக)ப் பறித்துக்கொள்வதற்காக ஒரு பிரமாண (வாக்குமூல)த்தின்போது துணிந்து பொய்ச் சத்தியம் செய்பவர், தம்மீது கோபம்கொண்டிருக்கும் நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், “அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதி நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். இன்னும் அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு” எனும் (3:77ஆவது) வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்பால், அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் (எங்களிடம்) வந்து, “அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்கிறார்?” என்று கேட்க, நாங்கள், “இப்படி இப்படிச் சொன்னார்கள்” என்று பதிலளித்தோம். (அதற்கு) அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவர் சொன்னது உண்மைதான்.) என் தொடர்பாகத்தான் அந்த (3:77ஆவது) வசனம் அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனது கிணறு (ஒன்று) இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக எனக்கும் யூதர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்கள் வழக்கைக் கொண்டுசென்றோம். நபி (ஸல்) அவர்கள், “ஒன்று உன் சாட்சி; அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் (இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படுகிறது.)” என்று சொன்னார்கள். உடனே நான், “அப்படியென்றால், (யூதரான) இவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எவர் ஒரு பிரமாண (வாக்குமூல)த்தின்போது, அதன் மூலம் ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாக)ப் பறித்துக்கொள்வதற்காகத் திட்டமிட்டுப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்” என்று சொன்னார்கள்.8 அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا ابو عوانة، عن الاعمش، عن ابي وايل، عن عبد الله بن مسعود رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " من حلف يمين صبر ليقتطع بها مال امري مسلم، لقي الله وهو عليه غضبان ". فانزل الله تصديق ذلك {ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا اوليك لا خلاق لهم في الاخرة} الى اخر الاية. قال فدخل الاشعث بن قيس وقال ما يحدثكم ابو عبد الرحمن قلنا كذا وكذا. قال في انزلت كانت لي بير في ارض ابن عم لي قال النبي صلى الله عليه وسلم " بينتك او يمينه " فقلت اذا يحلف يا رسول الله. فقال النبي صلى الله عليه وسلم " من حلف على يمين صبر يقتطع بها مال امري مسلم وهو فيها فاجر، لقي الله وهو عليه غضبان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4550
- Book Index
- 72
Grades
- -
