ஹதீஸ்கள்
#4538
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
(அப்துல் அஸீஸ் பின் அப்தில் மலிக்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும், அவர்களுடைய சகோதரர் அபூபக்ர் பின் அபீமுளைக்கா அவர்கள், உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்தும் (கேட்டு) அறிவித் தார்கள்: உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் நபித் தோழர்களிடம், “நீரருவிகள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்ற திராட்சை மற்றும் பேரீச்சந்தோட்டம் ஒருவருக்கு இருந்து...” (என்று தொடங்கும்) இந்த (2:266ஆவது) வசனம் எது தொடர்பாக அருளப்பெற்றது என நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேட்க, அவர்கள், “அல்லாஹ்வே அறிந்தவன்” என்று பதிலளித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் கோப மடைந்து, “எங்களுக்குத் தெரியும்; அல்லது தெரியாது என்று (இரண்டில் ஒன்றைத் தெளிவாகச்) சொல்லுங்கள்” என்று கேட்க, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அதைப் பற்றி என் உள்ளத்தில் ஒரு கருத்து உள்ளது, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “என் சகோதரர் மகனே! சொல்லுங்கள்; உங்களை நீங்களே அற்பமாகக் கருதிக்கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது, ஒரு செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “என்ன செயல்?” என்று கேட்க, இப்னு அப்பாஸ், “ஒரு செயலுக்கு” என்று (மீண்டும்) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “செல்வந்தனாகிய ஒரு மனிதன் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நற்செயல் புரிந்துவந்தான். பிறகு அல்லாஹ் அவனிடம் ஷைத்தானை அனுப்ப, (அவனுடைய தூண்டுதலால்) அந்த மனிதன் பாவங்கள் புரிய, அது அவனுடைய (முந்தைய நற்)செயல்களை மூழ்கடித்துவிட்டது; (அதைத்தான் இங்கு இறைவன் இப்படி உவமித்துக் கூறுகிறான்)” என்று சொன்னார்கள்.77 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4538
- Book Index
- 61
Grades
- -